விதியையும் வெல்லும் நவகிரக தாந்த்ரீக பூஜை

 நவகிரகங்களால் உண்டாகும் பாவங்களையும், தோஷங்களையும், அவயோகங்களையும், வாழ்வில் தோன்றும் துன்பங்களையும், துயரங்களையும், தரிதிரங்களையும் நீக்கி நவகிரகங்களின் ஆசியை பெற்று வாழ்வில் எந்நேரமும் சுபிட்சமாகவும் வளமுடனும், மன நிம்மதியுடனும், உடல் நலமுடனும் வாழ வைக்கும் ஒரு அபூர்வ பூஜை தான் விதியையும் வெல்லும் நவகிரக தாந்த்ரீக பூஜை.


நவகிரக தாந்த்ரீக பூஜை செய்ய தேவையான பொருள்கள் :

1. பஞ்சமுக குத்து விளக்கு ஒன்று,
2. ஐந்து விதமான எண்ணெய் கலவை (நெய், விளக்கெண்ணை , இல்லுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்)
3. ஐந்து திரிகள்,
4. பல வண்ண உதிரி மலர்கள்,
5.ஐந்து விதமான வாசனை உடைய ஊதுபத்திகள்,
6. தூபமிட சாம்பிராணி,
7. வெண்பொங்கல்,
8. சர்க்கரை பொங்கல்,
9. மனைப்பலகை ஒன்று,
ஆரஞ்சு நிற கதர் துணி ஒரு மீட்டர்.

             வளர்பிறை ஞாயற்றுக்கிழமை அன்று  விதியையும் வெல்லும் நவகிரக தாந்த்ரீக பூஜையை செய்ய வேண்டும். கிழக்கு நோக்கி அமர்ந்து பூஜைகள் செய்ய வேண்டும். காலை ஆறு மணி முதல் ஏழு மணிக்குள் பூஜையை முடிக்க வேண்டும். குத்து விளக்கை மனைப்பலகையில் வடக்கு நோக்கி வைத்து எண்ணெய் உற்றி தீபமிடவும். தீபத்தின் முன் ஆரஞ்சு வண்ண துணியை விரித்து வைக்கவும். சாம்பிராணி, ஊதுபத்தி தீபமிடவும். தீபத்தின் முன் வாழை இலை விரித்து சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல் படையலிடவும். கிழக்கு நோக்கி அமர்ந்து கிழ்கண்ட மந்திரங்களை சொல்லவும். மந்திரங்களை சொல்லும் போது கொஞ்சம் மலர்களை எடுத்து கையில் வைத்துக்கொண்டு மந்திரம் சொல்லி ஆரஞ்சு வண்ண துணியில் சமர்பிக்கவும். நவகிரகத்துக்கும் இவ்விதமாக பூஜை செய்யவும்.

1. சூரியன் :
                     "ஓம் ஹ்ரைங் ஹ்ரீங் ஹ்ருங்சஹ சூர்யாய நமஹ" - 21 முறை சொல்லவும்.
2. சந்திரன் :
                     "ஓம் ஹ்ரைங் ஹ்ரீங் ஹ்ருங்சஹ  சந்த்ராய நமஹ" - 21 முறை சொல்லவும்.

3. செவ்வாய் :
                     "ஓம் ஹ்ரைங் ஹ்ரீங் ஹ்ருங்சஹ  பொளமாய  நமஹ" - 21 முறை சொல்லவும்.

4. புதன்  :
                     "ஓம் ஹ்ரைங் ஹ்ரீங் ஹ்ருங்சஹ  புதாய   நமஹ" - 21 முறை சொல்லவும்.

5. குரு  :
                     "ஓம் ஹ்ரைங் ஹ்ரீங் ஹ்ருங்சஹ  குருவே    நமஹ" - 21 முறை சொல்லவும்.

6. சுக்கிரன்  :
                      "ஓம் ஹ்ரைங் ஹ்ரீங் ஹ்ருங்சஹ  சுக்ராய   நமஹ" - 21 முறை சொல்லவும்.


7. சனி  :
                      "ஓம் ஹ்ரைங் ஹ்ரீங் ஹ்ருங்சஹ  சனியே   நமஹ" - 21 முறை சொல்லவும்.


8. இராகு :
                     "ஓம் ஹ்ரைங் ஹ்ரீங் ஹ்ருங்சஹ இராகுவே   நமஹ" - 21 முறை சொல்லவும்.


9. கேது :
                     "ஓம் ஹ்ரைங் ஹ்ரீங் ஹ்ருங்சஹ கேதுவே   நமஹ" - 21 முறை சொல்லவும்.


 விதியையும் வெல்லும் நவகிரக தாந்த்ரீக பூஜை முடிந்தபின் பிரசாதத்தை நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் மட்டுமே சாப்பிடவேண்டும். வேறு யாருக்கும் கொடுக்க கூடாது. பூஜை செய்த மலர்களை ஆரஞ்சு வண்ண துணியில் மூட்டை போல் கட்டி பூஜை அறையில் வைத்து கொள்ளவும். நவகிரக ஆசிகள் எப்போதும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் துணை நிற்கும். தாந்த்ரீக பூஜைகள் செய்யும் முன் முன்பயிர்ச்சிகள் (ஒய்வு பயிற்சி, முத்திரை பயிற்சி, மூச்சு பயிற்சி) கட்டாயம் செய்ய வேண்டும்.

அஷ்ட கர்மங்களுக்கான மந்திரங்கள்

1. வசியம் : ஓம் ஸ்ரீம் ஐம் க்லீம் சௌம் ஹ்ரீம் ஓம் யங் ய ந ம சி வ சர்வ லோக வசி வசி ஸ்வாஹா !

2.மோகனம் :ஓம் க்லீம் சௌம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் ஓம் சங் ம சி வ ய ந மோகனாய ஸ்வாஹா !

3. உச்சாடனம் :ஓம் ரங் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லீம் சௌம் க்லீம் ஐம் வ ய ந ம சி ஓம் ஸ்வாஹா !

4. ஸ்தம்பனம் :
    ஓம் ஐம் க்லீம் சௌம் ஹ்ரீம் ஸ்ரீம் ந ம சி வ ய ஓம் ஸ்வாஹா !

5. ஆக்ருஷ்ணம் :ஓம் ஐம் சௌம் ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் சௌம் ஐம் ந சி ய ம வ ஓம் ஆக்ருஷ்ணாயா நமஹா ஓம் ஸ்வாஹா !

6. பேதனம் :ஓம் ஐம் ஸ்ரீம் ஹ்ரீம் சௌம் க்லீம் க்லீம் சௌம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் ந ய வ சி ம ஓம் ஸ்வாஹா !

7. வித்வேஷனம் :ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் சௌம் ஐம் க்லீம் க்லீம் ஐம் சௌம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் ய வ சி ந ம ஓம் ஸ்வாஹா !

8. மாரணம் :ஓம் சௌம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லீம் க்லீம் ஐம் ஸ்ரீம் ஹ்ரீம் சௌம் ஓம் சி வ ய ந ம ஹா ஓம் ஸ்வாஹா

மூலிகை சாப நிவர்த்தி

மூலிகை எடுக்க உரிய நாளில் மூலிகை இருக்கும் இடத்திற்கு சென்று மூலிகையை சுற்றி உள்ள இடத்தை சுத்தம் செய்து அதன்பின் அந்த இடத்தை கோமியம் அல்லது மஞ்சள் நீர் தெளிக்கவும். பின் தேங்காய், பழம், ஊதுபத்தி வெற்றிலை பாக்கு, சூடம், சாம்பிராணி இவைகளை வைத்து ஒரு மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து பின் விக்னம் நீக்கும் வினாயகரை மனமாற துதித்து பின் எந்த காரியத்திற்காக மூலிகை எடுக்கிறோமோ அதற்குறிய திசை பார்த்து அமர்ந்து கன்னி நூல் [மஞ்சள் நிற நூல்] காப்புகட்டி தேங்காய் உடைத்து சாம்பிராணி தூபம் தீபம் காட்டி எலுமிச்சை காவு கொடுத்து  பொங்கல் நைவேத்யம்  வைத்து மூலிகை சாப நிவர்த்தி மந்திரம் "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம், ஐம் க்லீம் ஸெளம், ஸர்வ மூலி சாபம் நாஸய நாஸய சித்தர் சாபம் நாஸய நாஸய, தேவ முனி அசுர முனி சாபம் நாஸய நாஸய ஹூம் பட் ஸ்வாஹா- என 108 உரு சொல்லியும், மூலிகை சாப நிவர்த்தி மந்திரம் சிங்வங்சிவயநம சங்வங் சரஹணபவ - என்று ஒரு முறை சொல்லி பின் இரும்பு ஆயுதங்கள் படாமலும், சுண்டு விரல்களும், நகங்கள் பத்தும் படாமலும் இலையை கிள்ளுவதோ செடியை பிடுங்குவதோ எப்படி செய்தாலும் பலிக்கும். இது என் அனுபவ ரீதியில் கைகண்டது.

     மூலிகை பறிக்க உகந்த கிழமைகள் :

                 வசியத்திற்கு - ஞாயற்றுகிழமை,
                 மோகனத்திற்கு - திங்கள்கிழமை,
                 ஏவலுக்கு - செவ்வாய்கிழமை
                 தம்பனம் - புதன்கிழமை,
                 உச்சாடனம் - வியாழன்,
                 ஆகர்ஷ்ணம் - வெள்ளி,
                 மாரணம் - சனி

   மூலிகை பறிக்க உகந்த திசைகள் :

                  வசியம் - கிழக்கு பார்த்து அமரவும்,
                  மோகனம் - தெற்கு,
                  உச்சாடனம் - மேற்கு,
                  பேதனம் - வடக்கு,
                   ஏவல், தம்பனம் - தென்மேற்கு,
                 
மேலும் சில காரிய்களுக்கு உரிய நட்சத்திரமும் கிழமையும் கூடும் போது எடுக்க வேண்டி வரும் அந்த நாளில் செய்ய பலிதம் ஆகும்.

செல்வவளம் பெருகி நிலைக்க

இன்றைய வாழ்க்கை சூழலில் செல்வத்தினை சேர்க்க போராடும் மனிதர்களே நாம் அனைவரும், செல்வத்தினை தேடி ஓடாத மனிதர்களே இந்த உலகத்தில் இல்லை, திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு என்பது முதுமொழி. நாமும் செல்வத்தினை சேர்க்க அரும்பாடு படுகிறோம், செல்வத்தினை சம்பாதிப்பதும், அதனை நம்மிடம் நிலைக்க வைப்பதும் வாழ்வில் ஒரு மிகப்பெரிய சவாலாகவே விளங்குகிறது. அந்த நிலையினை மாற்றவே சில எளிய செல்வவளம் பெருகி நிலைக்க தாந்த்ரீக முறைகளை இங்கே தெளிவுபடுத்துகிறேன்.

1. இலவங்கப்பட்டையை பொடி செய்து சிறிது எடுத்து ஒரு பச்சை நிற துணியில் மடித்து பச்சை நூலால் கட்டி மணிபர்சிலோ  அல்லது சட்டைப்பையிலோ எப்பொழுதும் வைத்துக்கொள்ளவும்.


2. செல்வவளம் பெருகி நிலைக்க பசுமையான வெற்றிலை ஒன்றை எந்த நல்ல காரியங்கள், பணசம்பந்தமான காரியங்கள் போன்றவற்றிக்கு செல்லும் போதும் உடன் வைத்துக்கொள்ளவும். ( பணவருவாய் பலவகையிலும் பெருகும் ).


3. நிலக்கரி தனாகர்ஷண ஷக்தி உடையது அதனை ஒரு சிறு துண்டு எப்போதும் உடன் வைத்துக்கொள்ளவும்.


4. செல்வவளம் பெருகி நிலைக்க ரூபாய்த்தாளை எப்பொழுதும் சுருளாக கட்டியே பணப்பெட்டியில் வைத்துக்கொள்ள வேண்டும். ( சுழற்சி சக்தி உண்டாகி செல்வமானது பெருகி தங்கும் ).

5. தினமும் ஏதேனும் ஒரு நாணயத்தை இரண்டு கைகளிலும் பிடித்தபடி உங்கள் தேவையினை மனமார வேண்டி - அந்த காசுகளை சேமித்து வந்து மாதக்கடைசியில் சேமித்த பணத்தில் வாழைப்பழம் வாங்கி பாசுமாட்டிற்கு தானமாக வழங்கவும்.

6. செல்வவளம் பெருகி நிலைக்க எந்த விசயத்திற்காக பணத்தினை செலவிட்டாலும், செலவிடும் பணத்தினை கையில் வைத்து நெஞ்சிற்கு நேராக பிடித்து பிறர் அறியாதவாறு  "ஓம் ஸ்ரீம் நமஹ இலட்சமாக திரும்பிவா வசி வசி" என்று ஐந்து முறை கூறி செலவிடவும்.

7. முக்கியமான காரியங்கள், பணசம்பந்தமான விஷயங்களுக்கு செல்லும்போது எலுமிச்சம் பழம் ஒன்றை "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் சக்தியே அருள்வாய் போற்றி ஓம்" என ஆறு முறை உச்சரித்து உடன் வைத்துக்கொள்ளவும்.

8. செல்வவளம் பெருகி நிலைக்க மாதச்சம்பளமாகட்டும், சுயத்தொழில், வியாபாரம் செய்பவர்கள் யாராகினும் வருவாயில் முதல் செலவாக உப்பு, மல்லிகைபூ இரண்டையும் வாங்குவதே முதல் செலவாக இருக்க வேண்டும். 

9.பணப்பெட்டி தென்மேற்கு மூலையில் இருக்கவேண்டும், அதில் எப்போதும் மல்லிகைபூ போட்டு வைக்கவேண்டும்.

10. செல்வவளம் பெருகி நிலைக்க பணப்பெட்டியில் பெரிய தொகைகளை வைக்கும்போது ஆறு வெற்றிலைகள், முன்று பாக்குகள் சேர்த்து வைக்கவும்.

11. மகாலக்ஷ்மி படத்திற்கு தினமும் காலை, மாலை நெய், தேங்காய் எண்ணை, நல்லெண்ணெய் ஏதாவதொன்றில் இரண்டு திரி போட்டு விளக்கு ஏற்றி வீடு, கடை முழுவதும் சாம்பிராணி புகை காட்டிவருவது பண விஷயத்தில் மிகசிறந்த வசியமாகும்.

12. செல்வவளம் பெருகி நிலைக்க குழந்தைகள் வளரும்போது விழும் முதல் பல்லை பால் பற்கள் என்கிறோம், அவ்வாறான பால் பற்களில் ஏதேனும் ஒன்று பையிலோ பணப்பெட்டியிலோ வைத்தால் செல்வம் பெருகும்.

13. வடகிழக்கு மூலையில் குடிக்கும் நீரைவைத்து அதில் எலுமிச்சை ஒன்றை போட்டு வைக்கவும், தொடர்ந்து இரண்டு மாதங்கள் செய்து வந்தால் பற்றாக்குறை நீங்கி செல்வம் கொழிக்கும்.

14. செல்வவளம் பெருகி நிலைக்க கல் உப்பை வீட்டில் வியாபார ஸ்தலங்களில் எல்லா மூலைகளிலும் சிறிது போட்டு வைத்தால் தீய சக்திகள் ஓடும், பணம் பெருகும்.

15. பணப்பெட்டி சந்தனப்பெட்டியாக இருந்தால் அதிர்ஷ்டம் பெருகும். வசதி இல்லையேல் பச்சை நிற பட்டுத்துணியில் பணப்பை செய்து அதனுள் சிறிய சந்தனக்கட்டை ஒன்றை அதனுள் போட்டு வைக்கவும், சந்தனம் இருப்பதை வளர்க்கும் சக்தி உடையது.

16. செல்வவளம் பெருகி நிலைக்க வருமானத்தில் ஐந்து சதவீதத்தை தானதிற்கென போட்டு வையுங்கள், மாதம் ஒருநாள் அதை தானமாக கொடுங்கள், கொடுப்பது பெருகும்.

17. முக்கியகாரியமாக தொழில் விஷயமாக வெளியே செல்லும்போது அருகம்புல் நுனி ஒன்றையோ, திருநீற்றுப்பச்சிலை ஒன்றையோ பறித்து பையில் வைத்துச்செல்ல சென்ற காரியம் நிச்சயம் வெற்றியே.

18. செல்வவளம் பெருகி நிலைக்க சாம்பிராணியும், மருதாணி விதையும், வெண்கடுகும் கலந்து வீட்டில், வியாபார ஸ்தலத்தில் தூபமிட தீய சக்திகள், கண்திருஷ்டி, தோஷங்கள் நீங்கி தொழில் முன்னேற்றம் அடையும், மகாலக்ஷ்மி நம்மிடத்தில் நடமாடுவாள்.