எண் கணிதம்

எண்கணிதம்

எல்லாவற்றிற்கும் வேதங்கள் அடிப்படை. ஆகமங்கள் அதனின் விரிவு. அதனால் பயனாவது 64 கலைகளாகும். இந்தக் கலைகளுக்கும் வாழ்வுக்கும் உள்ள தொடர்புகளை அளவிடமுடியாது. அதில் ஒன்று சோதிடக்கலை. அதில் ஒரு பகுதியாக எண்கணித சோதிடம் (Numerology) இருக்கின்றது. தனித்தன்மைவாய்ந்த எழுத்துக்களைப்போல் எண்களுக்கும் உயிர்சக்தி இருக்கின்றது. இந்த நாளில் பிறந்தவர்க்கு இன்ன எண் முக்கியமானது என்ற அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது. உங்களுடைய எண் எது எனத்தெரிந்து கொண்டால் அது பொருந்துகிறதா என நீங்களே சரி பார்க்கலாம்.

உலகின் மனிதசமுதாயத்தின் வளர்ச்சி, உணர்வு, அறிவு முதலிய செயல்களுக்கு காரணம் என இந்துக்கள் நம்பும் நவகோள்களும் அதன் எண்களும் குணச்சிறப்பையும் நன்மை தீமைகளை எடுத்துரைக்கும் ஓர் நிரந்தரக் காலக்கண்ணாடி எண்கணிதமாகும். மனித குலத்தின் எண்ணம் சொல் செயல் மூன்றிற்கும் காரணம் நவகோள்களும் அதன் எண்களும் ஆகும். இதை நம்புவர்களும், நம்பாதவர்களும் உண்டு. உண்மைகளை எவரும் முற்றிலும் தெரிந்தவரில்லை. ஏனெனில் அரிய பெரிய உண்மைகள் ஏராளமாக நிறைந்துள்ளன. அதில் “கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு” என்ற முறையில் இந்தப் பகுதியில் அவரவர் தத்தம் எண்ணை அறிந்து அதன் பலன்களைத் தெரிந்து கொள்ள உதவும் என்ற அடிப்படையில் பிறவி எண், முக்கியமான ஆண்டுகள், கெட்ட எண்கள், அதிர்ஷ்ட எண்கள்,கலப்பு எண்களில் நல்ல கெட்ட எண் குணங்கள், கலப்பு பெயர் எண்கள், தினப்பலன்கள் மற்றும் பிறவி எண், பெயர் எண்களுக்கு பலன்களைஏழுபரம்பரை ஜோதிடர் நண்பர். மா. முத்துசாமி அவர்களின் உதவியுடன் தொகுக்கப்பட்டுள்ளது.

வாழ்வியலில் நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு உந்துதலில் இயக்கப்பட்டு வருகின்றோம். நாம் எதனால் இயக்கப்பட்டு வருகின்றோம் என்பதை தெரிந்துகொள்ள எண்கணிதம் உதவிபுரியும். மனிதனின் நடத்தை, எண்ணம், எதிர்நோக்கம், உணர்வு, செயல் ஆகியவற்றிற்கு காரணமான கோள்களின் உறவை அது விளக்குகின்றது. இதன் சிறப்பு என்ன வென்றால் யார் துணையுமின்று நீங்களே தமக்குத்தாமே பலன்களைக் கண்டறியலாம். முன்னதாகப் பலன்களைக் கண்டறிவதால் தீமைகளை இயன்றவரை நீக்கவும், நன்மைகளை மேலும் நன்மையாக்கவும் செயல் பட்டு வெற்றி காணலாம்.

இந்த எண் கணிதத்திற்கு தேவையானவை நான்கு. அவை உங்கள் பெயர், பிறந்ததேதி, மாதம், வருடம், ஆகியவை மட்டுமே. இதற்கு ஆங்கிலத் தேதியும் ஆங்கில எழுத்துக்களுமே சரியா பொருந்தும். ஒன்று முதல் ஒன்பதுவரை உள்ள எண்களே மிக முக்கியமானது. மற்ற எண்கள் எல்லாம் அதன் கூட்டுத்தொகை இந்த ஒன்பதினுள் அடங்கும். பூஜ்ஜியத்திற்கு மதிப்பு இல்லை. நம் முன்னோர்கள் ஒன்பது எனும் எண்ணே கணிதத்தில் முடிவான எண்ணாக இருப்பதை அறிந்து நவக்கிரகங்கள், நவதான்யங்கள், நவபாஷாணங்கள் என ஒன்பதாக பிரித்துள்ளனர். ஒரு மந்திரம் ஜெபிக்க வேண்டுமென்றாலும் 108 அல்லது 1008 என கூட்டுத்தொகை ஒன்பது வருமாறு உபயோகித்தனர்.

ஒருவரின் பிறந்த தேதி உதாரணமாக 27—05-1945 என எடுத்துக் கொண்டால் அதை 2+7+0+5+ 1+9+4+5=33. அதாவது அவருடைய அதிர்ஷ்ட எண் 3+3= 6. இது போன்றே ஒவ்வொருவரும் கணக்கிட்டு அவரவரது எண்ணைக் கண்டு உள்ளே அந்த எண்ணிற்குரிய பலன் கண்டறிந்து கொள்ளவும்.

வாழ்க்கையில் மாற்றங்கள்- பிறவி எண் (பிறவி தேதி) வேறுமுறை-
பிறந்த தேதியைக் கொண்டாடுவதால் சென்ற ஆண்டின் வெற்றி தோல்விகளின் நன்மை தீமைகள் ஆகியவற்றை நினைவுபடுத்தி இனிவரும் ஆண்டில் சுபிட்சம் வேண்டலாம். கொண்டாட்டத்தினால் ஆயுள் நீடிக்கும். புகழ் மேலோங்கும். இறைவனை அன்றைய தினம் வணங்குவது மேலான பலன்களைத்தரும். பிறந்த தினத்தை ஆண்டிற்கு ஒருமுறை கொண்டாடுவதை விட ஒவ்வொரு மாதமும் பிறந்த தேதியன்று ஆலயம் சென்று வழிபடல் சிறப்பாகும் என்பது குருஜியின் கருத்தாகும்.

எந்த மாதம் எந்த ஆண்டில் பிறந்திருந்தாலும் அவர்கள் பிறந்த தேதி முக்கியமானது. அப்படி பிறந்த தேதி தெரியாதவர்களுக்கு பிறந்த மாதம் தெரிந்தால் கீழ்க்காணும் முறையில் பிறவி எண்ணை தெரிந்து அதன் பலாபலன்களை அறியலாம்.

ஜனவரி15முதல் பிப்ரவரி14வரை எந்த தேதியில் பிறந்திருந்தாலும் பிறவி எண்-8

பிப்ரவரி15முதல் மார்ச்14வரை எந்த தேதியில் பிறந்திருந்தாலும் பிறவி எண்-4

மார்ச்15முதல் ஏப்ரல்14வரை எந்த தேதியில் பிறந்திருந்தாலும் பிறவி எண்-7

ஏப்ரல்15முதல் மே14வரை எந்த தேதியில் பிறந்திருந்தாலும் பிறவி எண்-9

மே15முதல் ஜூன்14வரை எந்த தேதியில் பிறந்திருந்தாலும் பிறவி எண்-6

ஜூன்15முதல் ஜூலை14வரை எந்த தேதியில் பிறந்திருந்தாலும் பிறவி எண்-5

ஜூலை15முதல் ஆகஸ்ட்14வரை எந்த தேதியில் பிறந்திருந்தாலும் பிறவி எண்-2

ஆகஸ்ட்15முதல் செப்டம்பர்14வரை எந்த தேதியில் பிறந்திருந்தாலும் பிறவி எண்-1

செப்டம்பர்15முதல் அக்டோபர்14வரை எந்த தேதியில் பிறந்திருந்தாலும் பிறவி எண்-5

அக்டோபர்15முதல் நவம்பர்14வரை எந்த தேதியில் பிறந்திருந்தாலும் பிறவி எண்-6

நவம்பர்15முதல் டிசம்பர்14வரை எந்த தேதியில் பிறந்திருந்தாலும் பிறவி எண்-9

டிசம்பர்15முதல் ஜனவரி14வரை எந்த தேதியில் பிறந்திருந்தாலும் பிறவி எண்-3

முன்பு பிறந்த தேதி எண், மாத எண், வருட எண், ஆகியவற்றைக் கூட்டி கலப்பு எண்ணை ஒன்றைப் படையாக்கி பலன் பார்த்தோம். இதில் பிறவி எண்ணைக் கொண்டு வாழ்வின் மற்ற பலன்களை அறிவோம். பொதுவாக வாழ்வில் மாற்றம் நன்மையாகவும் தீமையாகவும் இருப்பதுண்டு. முன்பே தெரிந்தால் மாற்றங்களை சந்திக்க நாம் தயாராக இருக்க முடியும்.

ஒருவர் 27-05-1945 ந் தேதி பிறந்தவராகக் கொண்டு பிறந்த வருடத்தைக் கீழ்கண்டவாறு கூட்டினால் - 1945+1+9+4+5 = 1964 வரும். அதனுடன் பிறந்த தேதி மாதம் இரண்டையும் கூட்டினால் – 1964+2+7+5 = 1978 வரும். அதனுடன் வருடத்தைக் கூட்ட- 1978+45 = 2013. பலன் என்ன வென்றால் 1945 ம்வருடம் பிறந்தவர்க்கு 1964ல் ஒரு மாற்றமும் 1978 ல் ஒரு மாற்றமும், 2013 ல் ஒரு மாற்றமும் ஏற்படவேண்டும். முதல் இரண்டு மாற்றங்கள் சிறியதாக இருந்தாலும் மூன்றாவது பெரிய மாற்றமாக இருக்கும்.

முக்கியமான ஆண்டுகள்.
ஒருவர் 27-05-1945 ந் தேதி பிறந்தவராகக் கொண்டு பிறந்த வருடத்தைக் கீழ்கண்டவாறு கூட்டினால் 1+9+4+5=19 வரும் .இதை பிறந்த வருடத்துடன் மீண்டும் மீண்டும் கூட்டினால் 1945+19=1964+19=1983+19=2002+19=2021. அதாவது 1964, 1983, 2002, 2021 ஆகிய ஆண்டுகள் உங்கள் வாழ்க்கையில் முக்கியத்துவம் பெற்றிருக்கும்.

நம்பிக்கையில் கெட்ட எண்கள் 3. 13, 8, 18
எண் மூன்று ஏன் ஆகாது? இந்து தர்மத்தின்படி
1.ஒரு வீட்டில் திருமணமாகாத 3 ஆண்கள் இருக்கக்கூடாது
2.விதைவைகள் 3 பேர் ஒரே வீட்டில் இருக்கலாகாது.
3.இரண்டு மனைவிகள் இறந்த ஒருவர் 3 வது திருமணம் செய்யக் கூடாது. மீறி திருமணம் செய்ய விரும்பினால் வாழைமர சடங்குகள் செய்து வெட்டி புதைத்து கருமம் செய்தபின் திருமணம் செய்யலாம்.
4.வெளியில் புறப்பட்டுச் செல்லும்போது 3 பேராகப் புறப்படக்கூடாது.
5.ஒரு தீக்குச்சியைவைத்து 3 முறை பற்ற வைக்கக் கூடாது.

எண் பதின்மூன்று ஏன் ஆகாது? இந்து தர்மத்தின்படி
1.வெளியூர் பயணம் 13ம் தேதி புறப்படக்கூடாது.
2.எந்த ஒரு புது வேலையையும் 13ம் தேதியில் ஆரம்பிக்கக்கூடாது.
3.திருமண மண்டபத்தில் 13ம் இடத்தில் அமரவேண்டாம்.

எண் எட்டு, பதினெட்டு ஏன் ஆகாது? இந்து தர்மத்தின்படி
1.அஷ்டமிதிதி வளர்பிறை, தேய்பிறை 8ம் நாள் நல்ல காரியம் செய்யக் கூடாது.
2.ஒருவருடைய லக்னம் அல்லது ராசிக்கு 8ம் இடத்திற்கு சனி, செவ்வாய், குரு வந்தால் தீமை பயக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்-
1,2,3,5,7,11,13,17,19,23,29,31,37,41,43,47,53,59,61,67,71,73,79,83,89,97 ஆகிய எண்களை அதே எண்ணாலும் ஒன்றாலும் மட்டுமே வகுக்க முடியும். இந்த எண்கள் மிக்க அதிர்ஷ்ட எண்களாகும். குலுக்குச் சிட்டில் இருந்தால் வெற்றியைத் தருபவை.
கலப்பு எண்களில் நல்ல கெட்ட எண் குணங்கள்

எண்10- அதிர்ஷ்ட சக்கரம், மரியாதை புகழ் தன்னம்பிக்கை ஆகியவற்றை குறிக்கும். பெரிய அளவில் விளம்பரமாகும்.

எண்11- அபாயகரமானது, மறைமுகமான அபாயம், நம்பிக்கைத் துரோகம் ஆகியன குறிக்கும். பெரிய சங்கடங்களைச் சமாளிக்க வேண்டும்.

எண்12- சஞ்சலம், மனம் கலக்கம், சதியால் ஏமாந்தவன் பலியிடப்படுதலைக் குறிக்கும். எதிர்காலத்திற்கு நல்ல எண் அல்ல.

எண்13- சாவைக் குறிக்கும். திட்டம் எண்ணான இது இடம் ஆகியவற்றின் மாறுதலைக் குறிக்கும். அதிகாரம் தவறான வழியில் செலுத்தப்பட்டால் தனக்கு அழிவு, எதிர்பாரா கெடுதல் நேரிடும்.

எண்14- இயற்கையின் சீற்றத்தினால் விபத்தும் நீர் நெருப்பு, காற்றால் ஆபத்தும் ஏற்படும். பணாம் சூதாட்டம், வியாபார மாறுதலுக்கு நல்ல எண். மற்றவர்களின் முட்டாள் தனத்தினால் ஏற்படும் ஆபத்துக்களை எதிர்கொள்ள வேண்டும். மாந்திரீக சக்தி கொண்ட எண்.

எண்15- காரியம் கைகூட மந்திர வித்தைகளைக் கையாள்வர். நல்ல அதிர்ஷ்ட எண்களுடன் சேர்ந்தால் பலம் பொருந்திய நன்மை கிடைக்கும். 4, 8 உடன் சேர்ந்தால் எதற்கும் துணிந்து சுயநலமாக செயல்படுவர். கலைஞர்கள், இசைவாணர்களுடன் தொடர்பு இருக்கும். சிற்றின்ப ஆசை மிகுந்தவர்கள்

எண்16- கெடுதல், அபாயம் திட்டம் தோல்வியடைதல் குறிக்கும் எதிர்கால திட்டங்களில் இது வந்தால் தவிர்க்கவும்

எண்17- அன்பிற்கும் சமாதானத்திற்கும் அடையாளம். தடைகள், சோதனைகள் வென்று வாழ்க்கை நடத்துவர். அமரத்துவம் பெற்றபின்னும் பெயர் நிலைத்து நிற்கும். பிறந்த எண் 8 க்கு எதிர்காலத்திற்கு நல்லதல்ல.

எண்18- ஆத்ம சக்தியை பொருளாதார வாழ்க்கையை கெடுக்கும். சண்டை சச்சரவுகள் வரும். சமுதாயப்புரட்சிகள், கலகங்கள் ஏற்படுத்தும். எதிர்கால பொருத்தத்தில் வந்தால் கவனமுடன் இருக்கவும்.

எண்19- இது சூரியனைக் குறிக்கும். மகிழ்ச்சி, வெற்றி, புகழ் மதிப்பு ஆகியன குறிக்கும்.

எண்20- தீர்ப்பை குறிக்கும். புதிய கருத்துக்கள், திட்டங்கள், இலட்சியங்கள் ஆகியவற்றின் எழுச்சியை சொல்லும் எதிர்காலத்திற்கு இது நல்ல எண் அல்ல. பொதுவான வாழ்க்கையின் உயர்வுக்கு உகந்ததல்ல.

எண்21- புகழ் வெற்றி உயர்வு ஆகியவை போரட்டத்திற்கு பின் கிடைக்கும். நல்ல எண்ணாகும்.

எண்22- கனவு காணும் ஒருவன் அபாயம் வரும்போது விழித்துக் கொள்வான். தவறான யோசனைகளைக் கேட்பதினால் துயரம் வரும். எதிர்காலத்திற்கு நல்ல எண் அல்ல.

எண்23- உயர்ந்தோர் அதிகாரத்தின் உதவியும் நட்பும் கிடைக்கும். வெற்றியும் செல்வமும் தரும். மாந்திரீக சக்தி கொண்ட எண்.

எண்24- அதிர்ஷ்டமான எண். உயர்ந்தோர் உதவி, காதலினால் வருவாய், எதிர் பாலியியல் செல்வம் கிடைக்கும்.

எண்25- வயதில் ஏற்படும் முயற்சிப் போராட்டங்களால் வெற்றி. எதிர்காலத்திற்கு நல்ல எண்.

எண்26- சவகாசங்களால் அபாயம் ஏற்படும். வியாபாரக்கூட்டு, சூது ஆகியவற்றால் அபாயம் தரும்.

எண்27- புகழ், பதவி, வெற்றி, செல்வம் ஏற்படும். சுய அறிவையும் திட்டங்களைக் கொண்டு செயல்பட்டால் வெற்றி. அதிர்ஷ்ட எண்.

எண்28- எல்லா திறமைகளையும் பெற்றிருந்தாலும் சேமிப்பு இல்லை என்றால் பின்னாளில் வறுமையில் கஷ்டம் ஏற்படும். மற்றவர்களை நம்புவதாலும் எதிரிகளாலும் சட்டத்தினால் ஏற்படும் அபாயங்களைக் குறிக்கும். எதிர்காலத்திற்கு நல்ல எண் அல்ல.

எண்29- எதிர் பாலியர்களால் ஏற்படும் கஷ்டங்கள் நிறைந்தது. நண்பர்களாலும் துன்பங்கள் வரும்.எதிர்காலத்திற்கு நல்ல எண் அல்ல.

எண்30- எண்ணங்களின் தன்மையைப் பொறுத்து நன்மை தீமை வரும். எதிர்கால பொருளாதார வாழ்க்கைக்கு நல்ல எண் அல்ல. மனவளர்சிக்கு அன்று பொருள் வளர்ச்சிக்கு மதிப்புத் தரமாட்டார்கள்.

எண்31- எண்ணங்களின் தன்மையைப் பொறுத்து நன்மை தீமை வரும். பொருளாதார வாழ்க்கைக்கு நல்ல எண் அல்ல. மனவளர்சிக்கு அன்று பொருள் வளர்ச்சிக்கு மதிப்புத் தரமாட்டார்கள். அதிக தனிமை உணர்ச்சியும் மற்றவர்களோடு உறவாடாத உள்ளமும் கொண்டவர்கள்.

எண்32- மாந்திரீக சக்தி கொண்ட எண். உறுதியான எண்ணம் கொண்டால் வெற்றி. இல்லையென்றால் மற்றவர்களின் பிடிவாதத்தால் முட்டாள் தனத்தினால் கெடுதல் தோன்றும். எதிர்கால நல்ல எண்.

எண்33- அதிர்ஷ்டமான எண். உயர்ந்தோர் உதவி, காதலினால் வருவாய், எதிர் பாலியியல் செல்வம் கிடைக்கும்.

எண்34- வயதில் ஏற்படும் முயற்சிப் போராட்டங்களால் வெற்றி. எதிர்காலத்திற்கு நல்ல எண்.

எண்35- சவகாசங்களால் அபாயம் ஏற்படும். வியாபாரக்கூட்டு, சூது ஆகியவற்றால் அபாயம் தரும்.

எண்36- புகழ், பதவி, வெற்றி, செல்வம் ஏற்படும். சுய அறிவையும் திட்டங்களைக் கொண்டு செயல்பட்டால் வெற்றி. அதிர்ஷ்ட எண்.

எண்37- காதலினாலும் எதிர் பாலியராலும் பொருள் வரவும் வெற்றியும் வரும். கூட்டு வியாபாரத்திற்கு நன்மையானது. எதிர்கால நல்ல எண்.

எண்38- எதிர் பாலியர்களால் ஏற்படும் கஷ்டங்கள் நிறைந்தது. நண்பர்களாலும் துன்பங்கள் வரும்.எதிர்காலத்திற்கு நல்ல எண் அல்ல.

எண்39- எண்ணங்களின் தன்மையைப் பொறுத்து நன்மை தீமை வரும். பொருளாதார வாழ்க்கைக்கு நல்ல எண் அல்ல. மனவளர்சிக்கு அன்று பொருள் வளர்ச்சிக்கு மதிப்புத் தரமாட்டார்கள்.

எண்40- எண்ணங்களின் தன்மையைப் பொறுத்து நன்மை தீமை வரும். பொருளாதார வாழ்க்கைக்கு நல்ல எண் அல்ல. மனவளர்சிக்கு அன்று பொருள் வளர்ச்சிக்கு மதிப்புத் தரமாட்டார்கள். அதிக தனிமை உணர்ச்சியும் மற்றவர்களோடு உறவாடாத உள்ளமும் கொண்டவர்கள்.

எண்41- மாந்திரீக சக்தி கொண்ட எண். உறுதியான எண்ணம் கொண்டால் வெற்றி. இல்லையென்றால் மற்றவர்களின் பிடிவாதத்தால் முட்டாள் தனத்தினால் கெடுதல் தோன்றும். எதிர்கால நல்ல எண்

எண்42- அதிர்ஷ்டமான எண். உயர்ந்தோர் உதவி, காதலினால் வருவாய், எதிர் பாலியியல் செல்வம் கிடைக்கும்.

எண்43- புரட்சி, வீழ்ச்சியை குறிக்கும். எதிர்காலத்திற்கு நல்ல எண் அல்ல

எண்44- சவகாசங்களால் அபாயம் ஏற்படும். வியாபாரக்கூட்டு, சூது ஆகியவற்றால் அபாயம் தரும்.

எண்45- புகழ், பதவி, வெற்றி, செல்வம் ஏற்படும். சுய அறிவையும் திட்டங்களைக் கொண்டு செயல்பட்டால் வெற்றி. அதிர்ஷ்ட எண்.

எண்46- காதலினாலும் எதிர் பாலியராலும் பொருள் வரவும் வெற்றியும் வரும். கூட்டு வியாபாரத்திற்கு நன்மையானது. எதிர்கால நல்ல எண்.

எண்47- எதிர் பாலியர்களால் ஏற்படும் கஷ்டங்கள் நிறைந்தது. நண்பர்களாலும் துன்பங்கள் வரும்.எதிர்காலத்திற்கு நல்ல எண் அல்ல.

எண்48- எண்ணங்களின் தன்மையைப் பொறுத்து நன்மை தீமை வரும். எதிர்கால பொருளாதார வாழ்க்கைக்கு நல்ல எண் அல்ல. மனவளர்சிக்கு அன்று பொருள் வளர்ச்சிக்கு மதிப்புத் தரமாட்டார்கள்.

எண்49- எண்ணங்களின் தன்மையைப் பொறுத்து நன்மை தீமை வரும். பொருளாதார வாழ்க்கைக்கு நல்ல எண் அல்ல. மனவளர்சிக்கு அன்று பொருள் வளர்ச்சிக்கு மதிப்புத் தரமாட்டார்கள். அதிக தனிமை உணர்ச்சியும் மற்றவர்களோடு உறவாடாத உள்ளமும் கொண்டவர்கள்.

எண்50- மாந்திரீக சக்தி கொண்ட எண். உறுதியான எண்ணம் கொண்டால் வெற்றி. இல்லையென்றால் மற்றவர்களின் பிடிவாதத்தால் முட்டாள் தனத்தினால் கெடுதல் தோன்றும். எதிர்கால நல்ல எண்.

எண்51- எந்த துறையிலும் திடீர் முன்னேற்றம் கிடைக்கும். இராணுவத்தில் நல்ல வெற்றியடைவர். எதிரி ஆபத்தால் கொலை செய்ய வாய்ப்புண்டு.

எண்52- புரட்சி, வீழ்ச்சி யை குறிக்கும். எதிர்காலத்திற்கு நல்ல எண் அல்ல.

கலப்பு பெயர் எண்கள்
ஒருவர் எப்பெயரால் எல்லோராலும் அழைக்கப் படுகின்றார்களோ அப்பெயரையே எடுத்துக் கொள்ளவேண்டும். உதாரணமாக பெயர் கோவிந்தராஜன் என்றிருந்தால் எப்படிக் கையெழுத்திடுகிறாரோ அப்படியே எடுக்க வேண்டும். கோவிந்தராசன் என எடுக்கக்கூடாது. தந்தை பெயர் பழனியப்பன் என்றிருந்தால் ப. எனச் சேர்த்திருந்தாலும் அதற்குரிய ஆங்கில எழுத்தைக் எடுக்க வேண்டும். மேலும் சுவாமி என்பதை SWAMY எனவும் SAMY எனவும் எழுதுவர். அதில் வரும் ஒரு எழுத்து பலனை மாற்றக் கூடியது. அதனால் எப்படி கையெழுத்து போடுகின்றார்களோ அப்படியே எடுத்துக் கொள்ளவும்.
ஆங்கில எழுத்துக்களுக்குச் சரியான மதிப்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

A-1, B-2, C-3, D-4, E-5, F-8, G-3, H-5, I-1, J-1, K-2, L-3, M-4, N-5, O-7, P-8, Q-1, R-2, S-3, T-4, U-6, V-6, W-6, X-5, Y-1, Z-7 அல்லது
1--A,I,J,Q,Y; 2--B,K,R; 3-C,G,L,S; 4--D,M,T; 5--E,H,N,X; 6--U,V,W; 7--O,Z; 8--F,P என்று வைத்துக் கொண்டு உங்கள் பெயருக்கு உள்ள எழுத்துக்களுக்குச் சரியான எண்களை எழுதிக் கொள்ளவும். P.GOVINDARAJAN என்பதற்கு P-8, G-3, O-7, V-6, I-1, N-5, D-4, A-1, R-2, A-1, J-1, A-1, N-5 என்று எழுதி 8+3+7+6+1+5+4+1+2+1+1+1+5=45=9 கூட்டவும். 9 வரும். பிறந்த எண்ணும் பெயர் எண்ணும் ஒன்றாக வந்தால் நன்மை. பெயர் எண்ணை மாற்ற விரும்பினால் எந்த எண் என்று கணக்கிட்டு பெயரில் தேவைப்படும் இடத்தில் A வை சேர்த்துக்கொண்டு கணக்கிடவும். அல்லது முன்னால் ஊர், தந்தையின் தகப்பனார் முதல் எழுத்தைச் சேர்த்து கணக்கிடலாம். அதன்பின் அவ்வாறே பெயரைச் சொல்லி கையெழுத்திடவேண்டும். அதற்குரிய மாற்றங்களை அரசாங்கத்திற்கு முறைப்படி தெரிவிக்க வேண்டும். எழுத்துக்களைச் சேர்த்து அதிர்ஷ்ட எண் வராதவர்கள் வேறு பெயருக்கு எழுத்துக்களைக் கணக்கிட்டு அந்தபெயரை மாற்ற தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பெயர் எண் தான் ஒவ்வொருவருக்கும் அதிர்ஷ்ட எண். இது எல்லாவற்றிற்கும் அதிர்ஷ்டமானது. வீடு, கார், டெலிபோன், வியாபார அலுவலக எண் ஆகியன இந்த எண்ணில் அமைந்தால் நன்மை பயக்கும். கலப்பெண்ணின் பலனும் நல்லதாக அமையவேண்டும்.

தினப்பலன்கள்-
ஒரு காரியத்தை ஆரம்பிக்க அந்த நாளின் வருடம், மாதம், தேதி, கிழமை, மணி இவைகளைக்கொண்டே அந்த நாளின் பலன் அறியலாம். அதற்கு அந்த நாளின் வருடம், மாதம், தேதி, கிழமை, மணி இவைகளைக் தனித்தனியே கூட்டி பின் மொத்தமாக கூட்டி வரும் எண்ணுடன் பெயர் எண்ணையும் கூட்டி ஒற்றைபடையாக இருந்தால் வெற்றியடையும். இரட்டைப்படையானால் தாமதம் அடையும். அதைக் கீழ்கண்டவாறு அறியவும்.

நீங்கள் ஒரு காரியம் ஆரம்பிக்க நினைக்கும் நாளின் வருடத்தை 1945 மே மாதம் 27ம்தேதி வெள்ளிக்கிழமை காலை1030மணி என வைத்துக்கொண்டால் 1030மணியை 10ஐ தாண்டியதால் 11எனவும். வெள்ளிக்கிழமை வாரத்தின் 6வது நாள் பெயர்எண்- 9 என கொள்ளவும். அதாவது 1945 வருடத்துடன், 5 மாதம்+ 27 தேதி+ 6 வெள்ளி+ 11 மணி+ பெயர் எண் 9 கூட்டினால் 1945+5+27+6+11+9=2003=5. 5 ஒற்றைப்பட எண் ஆதலால் அன்று எடுக்கும் காரியம் கைகூடும் என அறிக.

உதாரணம்-காரியம் ஆரம்பிக்க நினைக்கும் நாளின் வருடத்தை 1971 மேமாதம் 15ம்தேதி புதன்கிழமை காலை1130மணி என வைத்துக்கொண்டால் 1130மணியை 11ஐ தாண்டியதால் 12எனவும். புதன்கிழமை வாரத்தின் 4வது நாள் பெயர்எண்- 1 என கொள்ளவும். அதாவது 1971 வருடத்துடன், 5 மாதம்+ 15 தேதி+ 4 புதன்+ 12 மணி+ 1 பெயர் எண் கூட்டினால் 1971+5+15+4+12+1=2008=1. 1 ஒற்றைப்பட எண் ஆதலால் அன்று எடுக்கும் காரியம் கைகூடும் என அறிக. மேலும் பிறவி எண்ணும் இதுவும் ஒத்து வந்திருப்பதால் காரியம் சிறப்பாக நிச்சயம் வெற்றிபெரும்.

இதில் சந்தேகங்களுக்கு இடமில்லை என்றாலும் ஏதேனும் சந்தேகம் தோன்றின் இனையதள மின்னஞ்சலின் மூலமாகவோ தொடர்பு கொள்ளவும். இந்த பகுதிதனை உபயோகித்து உங்கள் வாழ்க்கைச் சம்பவங்கள் நடந்த நாளுக்கும் உங்கள் எண்ணுக்கும் உள்ள தொடர்பை புரிந்து உண்மையை உணரந்து எதிர்கால குழப்பங்களிலிருந்து தெளிவடைய அன்புடன் –குருஜி.

அன்பு கொண்டவர்களே! எண் 1 லிருந்து 9 வரைபலன்களை அறிய உங்களுடைய சரியான எண்ணைத்தெரிந்து கொண்டு கீழ்கண்ட எண்களைத் தேர்வு செய்து பலன்களைப் பார்பீர்களாக! 
எண் ஒன்று (சூரியன்)
எண் இரண்டு (சந்திரன்)
எண் மூன்று (குரு)
எண் நான்கு (இராகு, சுக்கிரன்)
எண் ஐந்து (புதன்)
எண் ஆறு (சுக்கிரன்)
எண் ஏழு (கேது, சனீஸ்வரன்)
எண் எட்டு (சனி)
எண் ஒன்பது (செவ்வாய்)

அனைத்து கஷ்டங்களும் விலக பரணி நட்சத்திர அன்பர்கள் கூற வேண்டிய மந்திரம்

ஓம் ஹ்ரீம் தும் ஜ்வல ஜ்வல துர்கே தூம்ரலோசனீ
சண்ட சம்ஹாரி ஐம் ஹ்ரீம் க்லீம் நமோ பகவதீ
மஹா துக்கே ஹூம் பட் ஸ்வாஹா :

சத்ரு பயம், பெரும் பகை, மறைமுக எதிர்ப்புகள், ஜாதக ரீதியான தொல்லைகள் அனைத்தும் மேற்கண்ட மந்திரத்தை துர்கையை தியானித்து 108 முறை கூறி வர பனி போல் விலகும்.

நினைத்த பணம் வந்து சேர அமானுஷ்ய பரிகாரம்

காலையில் பல் துலக்கியதும் கிழக்கு முகமாக அமர்ந்து சிறிய வெள்ளை தாளில் வெள்ளை  நிற பேனா கொண்டு (மூடி வேறு கலரில் இருக்கலாம்)    ' ஏராளம் எண்ணிக்கை 3300' என 33 முறை மனதினுள் கூறிக்கொண்டே எழுதவும், பின் அதை மடித்து பர்சில் வைத்து கொள்ளவும். பண வரவை திடீர் என ஏற்படுத்தும் அற்புத முறை இது. நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அதை எடுத்து பார்த்து 33 முறை கூறி வரலாம் (அதிகபட்சம் 6 முறை). மறு நாள் அந்த தாளை அப்புறப்படுத்தி  விட்டு, வேறு புதிதாக எழுதி கொள்ளவும். தினசரி தேவைகள் உள்ள வரை தொடர்ந்து செய்து வரலாம்-ஒவ்வொரு நாளும் புதிதாக !! 

பண தட்டுப்பாடு நீங்க

அடிக்கடி பணத்தட்டுபாடுகளில் சிக்கி கொள்வோர் 20 துளசி இலைகளை கொதிக்கவைத்து அதை குளிக்கும் நீரில் இட்டு "ஓம் தன ப்ரதாயை நம" எனும் மந்திரத்தை மனதினுள் கூறி கொண்டே குளித்து வர, நாட்பட்ட பணபிரச்சனைகள் நீங்கும். தேவைப்படும் வரை செய்து வரலாம். 

புதையல் மற்றும் எதிர்பாராத பண வரவை தரும் எள்

புகழ் பெற்ற 'திறந்திடு 'சீசேம்' (ஆங்கிலத்தில்) வாசகத்திற்கு பெயர் பெற்ற எள்ளிற்கு எதிர்பாராத பணவரவு மற்றும் அதிர்ஷ்டத்தால் பண வரவை ஏற்படுத்தும் தன்மை உண்டு. சிறிய கண்ணாடி குப்பியில் எள் நிரப்பி வீட்டில், தொழில் செய்யும் இடத்தில் திறந்த படி வைத்திருக்க மேற்கண்ட நன்மைகளை எதிர்பார்க்கலாம். மாதம் ஒரு முறை பழையதை ஓடும் நீரில் விட்டு புதிதாக மாற்றி வரவும்.

அன்றாடம் பண வரவு பெற

காலை எழுந்து பல் துலக்கியதும் வெறும் வயிற்றில், ஒரு டம்பளர் நீரை கையில் எடுத்து கொண்டு வட கிழக்கு திசை நோக்கி, நாவை வாயின் மேல் புறம் படுமாறு மடக்கி வைத்து கொண்டு வாய் மூடி, மனதினுள்       "ஏராளம் தனம் தான்யம் தாராளம் தாராளம்"  என்ற மந்திரத்தை 6 முறை ஜெபித்து பின் கண்கள் மூடிய நிலையில் வாய் திறந்து நீரில் ஊதவும். பின் அந்த நீரை குடித்து விடவும்.

நாள் முழுதும் எதிர்பார்த்த, எதிர்பாராத பணவரவு, நற்செய்திகள் மற்றும் உயர்வுகள் கொடுக்கும் சக்தி வாய்ந்த முறை இது. அனுதினமும் தேவைகள் உள்ள வரை செய்து வரலாம். 

இழந்த செல்வம், சரிந்த புகழ் , கை நழுவிய சொத்து, மறைந்த கௌரவம்- அனைத்தையும் திரும்ப பெற

வாராஹி அம்மனுக்கு  8 சனிக்கிழமைகள் காலை 6-7 அல்லது இரவு 8-9 மணியளவில் மண் அகலில் கரு நீல துணியில் சிறிது வெண் கடுகை இட்டு முடிந்து அதில் நல்லெண்ணெய் விட்டு தீபமிட்டு மனமார வேண்டுதல் வைத்தால் மேற்கண்ட அனைத்தையும் திரும்ப பெறலாம். கோவிலுக்கு செல்ல முடியாதோர் வீட்டிலேயே அம்மனின் படத்தை வைத்து தனி பரிகார தீபமாக ஏற்றி வரலாம்.

கண் திருஷ்டி மறைமுக எதிரிகள் தொல்லைகள் அகல

5 கிராம்புகளுடன் சிறிதளவு பூண்டின் உரித்த தோல்கள் சேர்த்து வீட்டில் வியாபாரம் செய்யும் இடத்தில் வாரம் ஒரு முறை தூபமிட்டு வர மறைமுக எதிரிகள் தொல்லை மற்றும் கண் திருஷ்டி அடியோடு அகலும்.

காரிய வெற்றிக்கு

முக்கியமான காரியங்களுக்கு செல்லும் சமயம், அந்த காரியம் வெற்றியடைய சிறு வெள்ளை துணி அல்லது பேப்பரில் 5 கிராம்பு 5 பூண்டுகள் முடிந்து பாக்கெட்டில் வைத்து எடுத்து செல்ல, காரியம் பலிதமாகும். 

செல்லும் பணம் திரும்பி வர சூட்சும பரிகாரம்

நாம் அன்றாடம் செலவழிக்கும் பணமானது, நம்மிடமே பன்மடங்காக திரும்பி வர நாம் கொடுத்து வரும் 'மணி தெரபி' யில் இருந்து ஒரு பயிற்சி.

அன்றாடம் நாம் பிறருக்கு பணத்தை கொடுக்கும் பொழுது, அதாவது செலவழிக்கும் பொழுது பெரும்பாலும் பணத்தை அப்படியே எடுத்து கொடுத்து விடுகிறோம். மாறாக, பணத்தை நன்கு கைகளால் தடவி, உணர்ந்து பின்பு "சென்று வா-திரண்டு வா" என்ற மந்திரத்தை 3 முறை மனதினுள்கூறியவாறே பணத்தை கொடுக்க, கொடுக்கும் பணம், பன் மடங்காக நம்மிடம் திரும்பும் என்பது உறுதி. முடிந்தால் பணத்தை நெற்றி பொட்டருகே மடித்து வைத்து மந்திரம் கூறியும் கொடுக்கலாம்.

மாந்திரிகத்தின் எட்டு நிலை

வசியம் - ஓம் யநமசிவ அரிஓம் ஐயும் கிலியும் சுவாகா.
இது மற்றவர்களைத் தன் வசப்படுத்தல்.

மோகனம் - ஓம் மசிவயந கிலியும் சவ்வும் ஸ்ரீயும் சுவாகா.
இது பிறரை தன்மீது மோகம் கொள்ளச் செய்தல்.

தம்பனம் - ஓம் நமசிவய ஐயும் கிலியும் சவ்வும் சுவாகா.
இது எந்த வொரு இயக்கத்தையும் அப்படியே ஸ்தம்பிக்கச் செய்வது.

உச்சாடனம் - ஓம் வயநமசி ஸ்ரீயும் அரிஓம் ஐயும் சுவாகா.
இது தீய சக்திகள் அனைத்தையும் தன் இடம் விட்டு விரட்டுவதாகும்.

ஆக்ருசணம் - ஓம் வசிமநய ஸ்ரீயும் சவ்வும் கிலியும் சுவாகா.
இது துர் தேவதைகளை தன்முன் பணிய வைப்பது.

பேதனம் - ஓம் யவசிமந அரிஓம் ஸ்ரீயும் சவ்வும் சுவாகா.
இது சுயநினைவற்றுப் பேதலித்துப் போகச் செய்வது.

வித்துவேடணம் - ஓம் நமசிவய ஐயும் கிலியும் ஸ்ரீயும் சுவாகா.
இது ஒருவருக்கொருவர் பகையை உண்டாக்கிப் பிரிப்பது.

மாரணம் - ஓம் சிவயநம சவ்வும் ஸ்ரீயும் அரிஓம் சுவாகா.
இது உயிர்கள் அனைத்திற்கும் கேடு விளைவிப்பது.

சகலத்திர்கும் கட்டு மந்திரம்.

ஓம் பஹவதி ப்ய்ரவி என்னை எதிர்த்து வந்த எதயும் கட்டு
கடுகென பட்சியை கட்டு மிருகத்தைகட்டு
ஓம் காளி ஓம் ருத்ரி ஓங்காரி ஆங்காரி
அடங்கலும் கட்டினேன் சபையை கட்டு
சத்ருவை கட்டு எதிரியை கட்டு
எங்கேயும் கட்டு சிங்க் வங்க் லங்க் லங்க்
ஸ்ரீம் ஓம் சிவாய நம சிவாய நம

சிவன்மந்திர உச்சாடணங்கள்

மந்திரங்களை கைளாளும் முறையாவது, அமைதியான காற்றோட்டமுள்ள இடம் அல்லது கோவில் போன்ற இடங்களில் அமர்ந்து மனதை வெறுமையாக்கி, முதலில் தங்கள் குலதெய்வத்தினை வணங்கி, பின் பெற்றோரையும், குருவினையும் மனதால் துதித்து மூலமந்திரத்தை மனதில் உச்சரிக்க வேண்டும்.முதலில் குறைந்தது 108 அல்லது 1008 முறை விடாது உச்சரித்தல் அவசியம்.

அதன் பின் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனதினை ஒரு நிலைப்படுத்தி மந்திரங்களை உச்சரிக்கலாமென்கிறார்கள். எண்ணிக்கை கணக்கிற்காக ஜெப மாலைகளை உயயோகிக்கலாம்.இவ்வாறு தொடர்து உச்சரிக்கும் போது அந்தமந்திரங்கள் நமக்கு சித்திக்கின்றன என்கிறார்கள்.பின் எப்போது தேவையேற்படுகிறதோ அச்சமயத்தில்தேவையான மந்திரங்களை 9 அல்லது 21 தடவை உச்சரிக்க மந்திரம் பலிக்குமாம்.

இனி மந்திரங்கள்....தத்புருஷ மந்திரம்
இதன் மூல மந்திரம் 'நமசிவாய' இதை விடாது உச்சரிக்க உச்சாடணம் ஏற்படும். தத்புருஷத்தில் கருவூரார் 25 மந்திரங்களைச் சொல்கிறார், பதிவின் நீளம் கருதி ஐந்தினை தருகிறேன்.

"நமசிவாயம் லங்க நமசிவாய" என உச்சரிக்க மழை பெய்யுமென்கிறார்.

"அலங்கே நமசிவாய நமோ" என உச்சரிக்க புகழ் உண்டாகுமாம்.

"அங் சிவாய நம" என உச்சரிக்க குழந்தைப் பேறு உண்டாகுமாம்.

"ஊங்கிறியும் நமசிவாய நமா" என உச்சரிக்க மோட்சம் கிட்டுமாம்.

"ஓம் நமசிவாய" என உச்சரித்தால் காலனை வெல்லலாம்.அகோர மந்திரம்
இதன் மூல மந்திரம் "நமசிவ",

"சங் கங் சிவாயநமா" என உச்சரிக்கஜீவனில் சிவத்தைக் காணலாம்.

"மங் மங் மங்" என உச்சரித்தால் உணவை வெறுத்து பசியை துறக்கலாம்.

"வசாலல சால்ல சிவாய நமா" என உச்சரித்தால் மழையில் நனையாமல் செல்லலாம்.

"சரனையச் சிவாய நம" என உச்சரிக்கவானில் பறக்கலாமாம்.

"கேங் கேங் ஓம் நமசிவாயம்" என உச்சரிக்க எல்லோரும் வசியமாவர்.

"ஓங் சருவ நம சிவாய" என உச்சரிக்க மழை உண்டாகும்
வாமதேவ மந்திரம்

"கங்கங்ணங் நிஷர் சிவிங்கம்" என உச்சரித்தால் காமதேவன் அருள் கிட்டுமாம்.

"வங் வங் சிங் சிவாய நம"என உச்சரிக்க உலகின் எப்பாகத்திற்கும் வழி தெரியுமாம்.

"சதா சிவாய நம" என உச்சரிக்க நான்கு வேதத்தின் பொருள் அறியலாம்.

"ஓம் அங்கிஷ ஊங் சிவாயநம" என உச்சரிக்க நினைத்த இடத்தில் மனதினை விரைவாக செய்யலாம்.சத்யோசாத மந்திரங்கள்

"சிவாய ஓம்" என உச்சரிக்க திருமாலில் ஆற்றல் கிட்டும்.

"ஓங் உங் சிவாய ஓம்" என உச்சரிக்க குண்டலினியின் சக்தியை காணலாம்.

"கிருட்டிணன் ஓம் சிவாய நம" என உச்சரிக்க இராவணன் மலையைப் பெயர்த்த பலம் கிட்டும்ஈசான மந்திரங்கள்

"சிமிறியும் ஊங்சிவாய ஊங் அங் நம ஓ" என உச்சரிக்க சிவதத்துவத்தை காணலாம்.

"மங் நங் சிவ சிவாய ஓம்" என உச்சரிக்க நந்தியின் தத்துவத்தை உணரலாம்.

"வங் யங் சிங் ஓம் சிவாய" என உச்சரிக்க எதிரியின் உடல் தனலாகும்.

"சிங் சிங் சிவாய ஓ" என உச்சரிக்க முக்காலத்தையும் உணரலாம்.

"மய நசிவ சுவாக" உச்சரிக்க ஆகாயத்தில் பறந்து செல்லும் சித்தர்களின் ஆசி கிட்டும்.நேரம் கிடைத்தால்/மனமிருந்தால் இவற்றை முயற்சித்துப் பாருங்கள்.

ஓம்நமசிவாய!
ஓம்நமசிவாய!

சிவ மந்திரங்கள்

சிவ மந்திரங்களைப் பார்ப்போம்:
ஓம் ஜகங் என தினமும் 108 முறை ஜபித்தால் கணபதியின் அருள் கிட்டும்.

ஓம் நமசிவாய என்று ஜெபித்தால் காலனை வெல்லலாம்.

ஓம்நமசிவாய நமா என ஜெபித்தால் பூதக்கூட்டங்கள் வசமாகும்.
 துஷ்ட தேவதைகள் அழியும். மன்னர்கள் அருள் கிடைக்கும்.

ஓம் நூம் பயப்யுஞ் சிவாய நமா என்ற மந்திரத்தை ஜபித்தால் துன்பங்கள் விலகும்.ஆறு சாஸ்திரங்களையும், நான்கு வேதங்களையும் அறிய உதவும்.

சிவாய ஓம் என்று சொன்னால் திருமாலின் ஆற்றல் கிட்டும்.

மய நசிவ சுவாகா என ஓதினால் ஆகாயத்தில் பறந்து செல்லும் சித்தர்கள் கீழிறங்கிவந்து சுமனக்குளிகை தருவார்கள்.

இங் சிங் ச்ங் ஓம் என்ற ஈசான மந்திரத்தை தனக்கு ஆபத்தான வேளைகளில் சூரியனுக்கு எதிராக நின்று கைகளை மேலே உயர்த்தி ஜபிப்பவன் எல்லா பாவங்களிலிருந்து முழுமையாக நீங்குவான்.

சிங் சிங் சிவாய ஓ எனஜபித்துவந்தால் முக்காலமும் அறியும் ஆற்றல் உண்டாகும்.

ஓங்கிறியும் ஓம் நமச்சிவாய என சொன்னால் வியாபாரம் நன்றாக நடக்கும்.

லீங்க்ஷும் சிவாய நம என ஜபித்தால் பெண்கள் வசியம் உண்டாகும்.

சவ்வும் நமசிவாயநமா என ஜபித்தால் அரச போகம் கிட்டும்.

மந்திர ஜபம் பற்றி சித்தர்கள் கூறியிருப்பது.

மசிவயந ஜபித்தாலும்,நயவசிம ஜபித்தாலும் மோகனம் உண்டாகும்-அகத்திய மகரிஷிசிவாயநம ஜபித்தால் மோகனம் உண்டாகும்-

சிங் நமசிவய என்று உச்சரிக்க - பயிர்களால் நன்மை.

துங் நமசிவாய என்று உச்சரிக்க - வித்துவான் ஆகலாம்.

ஓங் கங்சிவய என்று உச்சரிக்க - சக்தி அருள் உண்டாம்.

ஓம் சிங்சிவாய என்று நம என்று உச்சரிக்க - நினைப்பது நடக்கும்.

ஓம் பங்சிவாய நம என்று உச்சரிக்க - தடைகள் நீக்கும்.

ஓம் யங்சிவாய நம என்று உச்சரிக்க - துன்பங்கள் விலகும்.

ஓம் மாங்நமசிவாய என்று உச்சரிக்க - செல்வம் செழித்தோங்கும்.

ஓம் மங்சிவாயநம என்று உச்சரிக்க- கவலைகள் வற்றும்

கெங்ஓம் நமசிவாய என்று உச்சரிக்க - வசிய சக்தி மிகும்

ஓம் மங்யங் சிவாய என்று உச்சரிக்க - விஷங்கள் இறங்கும்.

அங் ரங்ஓம்சிவாய என்று உச்சரிக்க - சாதனை படைக்கலாம்.

ஓங் அங் சிங் சிவாயநம என்று உச்சரிக்க - சப்த கன்னியர் தரிசனம்.

ஓங் வங்சிங் சிவாயநம என்று உச்சரிக்க - முக்குணத்தையும் வெல்லலாம்.

ஹிரீம் நமசிவாய என்று உச்சரிக்க- அரிய பேறுகள் கிடைக்கும்.

ஐயுஞ் சிவாயநம என்று உச்சரிக்க - ஆறு சாஸ்திரம் அறியலாம்.

வங்சிங் ஓம்சிவாயா என்று உச்சரிக்க - தேவர்கள் தரிசனம் காணலாம்.

சங் சிவய நம என்று உச்சரிக்க - விஷ பாதிப்பு நீக்கும்.

ஓம் துங்சிவாய நம என்று உச்சரிக்க - முத்தொழிலும் சிறக்கும். ஸ்ரீலம்ஹரீம்

ஓம் நமசிவாய என்று உச்சரிக்க- பெரியபூமிகள் கொடுக்கும்.

சிங் நமசிவய என்று உச்சரிக்க - பயிர்களால் நன்மை.

வங் சிவய நம என்று உச்சரிக்க - மழை நனைக்காது.

சிவாய ஓம்ஸ்ரீ என்று உச்சரிக்க - மழை நிற்கும்.

கலியுங் சிவாய என்று உச்சரிக்க - வெள்ளம் பெருக்கெடுக்கும்.

ஓம் கங்சிவ்வுங்சிவய என்று உச்சரிக்க - பெரியகாரியங்களில் வெற்றி.

சங்யவ் சி மந என்று உச்சரிக்க - தண்ணீரில் நடக்கலாம்.

மங் நங் சிங் சிவய என்று உச்சரிக்க - பிசாசு, பேய் சரணம் செய்யும்.

பஞ்சாட்சர தத்துவம்

திருமூலர் திருமந்திரத்தில் இதைப் பலவாறு விளக்குவார்! பஞ்சாட்சரமே மொத்தம் ஐந்து வகையாய் இருக்கு!
ஆமாம் மொத்தம் ஐந்து வகையான ஐந்தெழுத்து! இதோ.....
நமசிவாய = ஸ்தூல பஞ்சாட்சரம்
சிவாயநம = சூட்சும பஞ்சாட்சரம்
சிவாயசிவ = கரண பஞ்சாட்சரம்
சிவாய = மகா கரண பஞ்சாட்சரம்
சி = முக்தி பஞ்சாட்சரம்
எங்கும், எப்போதும், எந்தக் காலத்திலும், ஆண் பெண் பேதமின்றி, சாதி மத பேதமின்றி, தீட்டு/பூட்டு என்றெல்லாம் பேசிக் கொண்டிராமல், யார் வேண்டுமானாலும் துதி செய்யவல்லது இந்தத் திருவைந்தெழுத்து!
குளித்தோ, குளிக்காமலோ, உடுத்தியோ உடுத்தாமலோ, உண்டோ, உண்ணாமலோ எப்போது வேண்டுமானாலும் ஜபிக்க வல்ல மந்திரம் இது!
இதன் பெருமையைப் பலரும் போற்றி உள்ளனர். திருமூலர் சிவசிவ என்றுசிந்தித்து இருந்தால் தீவினை எல்லாம் தீரும் என்கிறார்.
சிவசிவ என்கிலர் தீவினையாளர்
சிவசிவ என்றிடத் தீவினைமாளும்
சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே

சிவ மந்திரமும்-பலன்களும்

நங்சிவயநம என்று உச்சரிக்க - திருமணம் நிறைவேறும்

அங்சிவயநம என்று உச்சரிக்க - தேகநோய் நீங்கும்

வங்சிவயநம என்று உச்சரிக்க - யோகசித்திகள் பெறலாம்.

அங்சிவயநம என்று உச்சரிக்க - ஆயுள் வளரும், விருத்தியாகம்

ஓம் அங்சிவாய என்று உச்சரிக்க - எதற்கும் நிவாரணம் கிட்டும்.

கிலி நமசிவய என்று உச்சரிக்க - வசிய சக்தி வந்தடையும்

ஹிரீநமசிவய என்று உச்சரிக்க - விரும்பியது நிறைவேறும்

ஐயும் நமசிவய என்று உச்சரிக்க - புத்தி வித்தை மேம்படும்.

நம சிவய என்று உச்சரிக்க - பேரருள், அமுதம் கிட்டும்.

உங்யுநமசிவய என்று உச்சரிக்க - வியாதிகள் விலகும்.

கிலியுநமசிவய என்று உச்சரிக்க - நாடியது சித்திக்கும்

சிங்வங்நமசிவய என்று உச்சரிக்க - கடன்கள் தீரும்.

நமசிவயவங் என்று உச்சரிக்க - பூமி கிடைக்கும்.

சவ்வுஞ் சிவாய என்று உச்சரிக்க -சந்தான பாக்யம் ஏற்படும்.


சிங்றீங் என்று உச்சரிக்க - வேதானந்த ஞானியாவார் உங்றீம்

சிவயநம என்று உச்சரிக்க - மோட்சத்திற்கு வழி வகுக்கும்.

அங்நங் சிவாய என்று உச்சரிக்க - தேக வளம் ஏற்படும்.

அவ்வுஞ் சிவயநம என்று உச்சரிக்க - சிவன் தரிசனம் காணலாம்.

ஓம் நமசிவாய என்று உச்சரிக்க - காலனை வெல்லலாம்.

லங் ஸ்ரீறியுங் நமசிவாய என்று உச்சரிக்க - தானிய விளைச்சல் மேம்படும்.

ஓம் நமசிவய என்று உச்சரிக்க - வாணிபங்கள் மேன்மையுறும்

ஓம் அங்உங்சிவயநம என்று உச்சரிக்க - வாழ்வு உயரும், வளம் பெருகும்.

ஓம் ஸ்ரீறியும் சிவயநம என்று உச்சரிக்க - அரச போகம் பெறலாம்.

ஓம் நமசிவய என்று உச்சரிக்க - சிரரோகம் நீங்கும்.

ஓங் அங்சிவாய நம என்று உச்சரிக்க - அக்னி குளிர்ச்சியைத் தரும்.

எந்த ராசிக்காரங்ககிட்ட எப்படி பேசனும்..?

எந்த ராசிக்காரங்ககிட்ட எப்படி பேசனும்..?
மேசம்‬ ராசிக்காரங்க கிட்ட எச்சரிக்கையா பேசனும்..பாராட்டி பேசலாம் ஆனா வாக்குவாதம் செய்யக்கூடாது.
ரிசபம்‬ ராசிக்காரங்க கிட்ட கனிவா பக்குவமா பேசனும்....
மிதுனம்‬ ராசிக்காரங்க கிட்ட அதிகமா வெச்சிக்காதீங்க..லைட்டா பேசுவாங்க ஹெவியா உங்களை ஆராய்ச்சி பண்ணுவாங்க...
கடகம்‬ ராசிக்காரங்ககிட்ட பாசமா பேசலாம் எல்லா உதவியும் கிடைக்கும்..
சிம்ம‬ ராசிக்காரங்கக்கிட்ட பொறுமையா பேசனும்..படபடன்னு பேசிட்டு போய்ட்டே இருப்பாங்க..நேர்மையா பேசலைன்னா கட்டம் கட்டிடுவாங்க...
கன்னி‬ ராசிக்காரங்க நட்பை முறிச்சிக்க கூடாது அவர்களால் நிறைய ஆதாயம் உண்டு அதுவே உத்திரம் கன்னின்னா கொஞ்சம் எச்சரிக்கையா பார்த்து பேசுங்க...
துலாம்‬ ராசின்னா ஜாலியா பேசலாம்..சுவாதி கம்பீரமா நடந்துக்குவாங்க..கொஞ்சம் கவனமா இருங்க.உங்களை எடை போட்டு நீங்க இவ்வளவுதான்னு மார்க் போட்ருவாங்க
விருச்சிகம்‬ :- அன்பா‬ அனுசுரனையா‬ பேசலாம்‬..கொஞ்சம் சால்ட்டா கிண்டலடிச்சா நீங்க வாழ்க்கையில வாங்காத நோஸ்கட் வாங்கிக்குவீங்க..
தனுசு‬ ராசிக்காரங்க கிட்ட அன்பா பேசி காரியம் சாதிக்கலாம்,..நாலு வார்த்தை பாராட்டுங்க...அன்புக்கு நான் அடிமை என்பது தனுசுவின் குணம்...அர்ஜுனன் கிருஷ்ணர் மீது வைத்திருந்தது சாதாரண அன்பு இல்லை..அந்த அன்புக்குத்தான் பகவானே மயங்கி கிடந்தார்..தேரோட்டியாக வந்தார்...வில்லுக்கு அர்ஜுனன் தனுசு ராசி.
மகரம்‬ ராசிக்காரங்க நிறைய புலம்புவாங்க..அப்படியே நம்ப வேண்டாம். அவங்க இயல்பு அது.கடுமையான உழைப்பாளிகள் பேச்சுதான் முன்ன பின்ன இருக்கும்.
கும்பம்‬ ..அடுத்த அம்பானி இவர்தான்னு நம்புற மாதிரி பேசுவாங்க..உம் கொட்டிட்டு நீங்களும் உங்க சாதனைகளை சொல்லுங்க...
மீனம்‬..அசந்தா ஆத்துல இல்ல காத்துல கூட மீன் பிடிப்பாங்க..மத்தவங்க ரகசியங்கள் எல்லாம் இவர்கிட்ட தெரிஞ்சிக்கலாம்..
நண்பர்களே!!! நீங்கள் இதில் என்ன இராசி?

எளிய கடன் நிவர்த்தி முறை :-

கடன் பெற்றான் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்பதை போல கடன் என்பது கொடிய விஷமே தவிர வேறில்லை. இதில் எல்லோரும் அவதிப்பட்டு ொண்டு தான் இருக்கின்றார்கள். நாம் கண்ட பலருக்கு கொடுத்து பயன் பெற்ற கடன் நிவர்த்தி முறைகளை கீழே கொடுத்துள்ளேன். பயன்படுத்தி பலன் பெறுவீர்களேயானால் மகிழ்ச்சியுருவேன்.

(1) புளிய மரத்தின் சிறு கிளையை வீட்டில் பணம் வைக்கும் இடத்தில், வியாபார இடத்தில், பண பெட்டியில் வைத்து வரவும்.

(2) வெல்லத்தால் பாயசம் செய்து தொடர்ந்து 5 நாட்களுக்கு உங்களின் கையால் பசுவிற்கு வழங்கி வரவும்.

(3) தொடர்ந்து 5 நாட்களுக்கு பசியால் வாடும் ஒருவருக்கேனும் உணவு உங்கள் கையால் வாங்கி கொடுக்கவும்.

(4) வியாழக்கிழமை அன்று கொஞ்சம் குங்குமம் வாங்கி அதை வெள்ளிக்கிழமைகளில் அம்பாள் அல்லது தாயார் சன்னதியில் கொடுத்து வரவும். தொடர்ந்து 11 வாரங்கள் செய்ய வேண்டும்.

(5) கோதுமையை அரைக்க கொடுக்கும் பொழுது அதில் 7 துளசி இலைகள் மற்றும் சிறிது குங்குமப்பூ சேர்த்து அரைக்க கொடுத்து வாங்கவும். அந்த மாவு வீட்டில் உள்ளவரை பண பிரச்சனைகள் குறைந்து இருப்பதை அனுபவத்தில் காணலாம். (கோதுமையாக வாங்கி செய்யவும்)


(6) தொடர்ந்து 5 வெள்ளிக்கிழமைகள் மஹாலக்ஷ்மி சன்னதியில் மல்லிகை மாலை சாற்றி வழிபடவும்.

எதிர்மறை சக்தியை விரட்டும் உப்பு நீர் பரிகாரம்

தொடர்ந்து துரத்தும் எதிர்மறை எண்ணங்கள், கோபம் அல்லது அதுபோன்ற வேறு உச்சக்கட்ட உணர்ச்சிகள் மனஅழுத்தம், திடீர் உடல்நலக்கோளாறு, திருஷ்டியால் ஏற்படும் பல கஷ்டங்கள், செய்வினை கோளாறுகள் போன்ற துன்பங்கள் நம்மை துரத்தும் போது கீழ்கண்ட பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறலாம்...
இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வந்தால் அனைத்து கஷ்டங்களும் விலகி ஓடும். மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரம். இதை தினமும் செய்யலாம்...
இந்த பரிகாரம் செய்ய தேவையான பொருட்கள் :
ஒரு பெரிய வாளி
தண்ணீர்
ஹிமாலயன் ராக் சால்ட் (himalayan rock salt) 1 பாக்கெட்
செய்முறை :
வாளியில் 1 பாக்கெட் ஹிமாலயன் ராக் சால்ட்டை (himalayan rock salt) கொட்ட வேண்டும். நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு கால்களை வாளியின் உள்ளே விட்டு முட்டிக்கு சற்று கீழே வரை தண்ணீர் ஊற்ற வேண்டும். கால்களை தண்ணீரில் வைத்தபடி சிறிது நேரம் கண்களை மூடி அமர வேண்டும். பின்னர் மனதில் ‘என் உடம்பில் மனதில் உள்ள அனைத்து எதிர்மறை சக்திகளும் வெளியேற வேண்டுமென’ பிரார்த்திக்கொண்டே இரண்டு கால்களை நன்றாக கால் பாதங்களால் தேய்த்து சுத்தப்படுத்த வேண்டும். இவ்வாறு மனதில் நினைத்தபடி 15 நிமிடம் கால்களை தேய்க்க வேண்டும். 15 நிமிடம் செய்த பின்னர் தண்ணீரை பார்த்தால் சிலருக்கு தண்ணீர் மிகவும் கருப்பாக மாறியிருக்கும்.
சிலருக்கு தண்ணீரில் நாற்றம் எடுக்கும், சிலருக்கு ஏதும் இல்லாமலும் போகலாம். சிலர் இதை செய்து முடித்ததும் மிகவும் களைப்பாக உணருவார்கள். இது உங்களை சுற்றி இருந்த எதிர்மறை சக்திகள் விரட்டி அடிக்கப்பட்டிருப்பதை குறிக்கும். இதை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் வாழ்க்கையில் நல்ல செயல்கள் நடக்க ஆரம்பிக்கும். ஹிமாலயன் ராக் சால்ட்டை (himalayan rock salt) கிடைக்காதவர்கள் கவலைப்பட வேண்டாம். இந்துப்பு மற்றும் கல் உப்பு அல்லது கடல் உப்பை பயன்படுத்தலாம். ஹிமாலயன் ராக் சால்ட்டை பயன்படுத்தும் போது 100%மும், மற்ற உப்பு பயன்படுத்தும் போது 60%மும் பலன் கிடைக்கும்.

108ன் சிறப்பு தெரியுமா?

படைத்த கடவுளுக்கும் அவனது படைப்புக்கும் உள்ள தொடர்பை விளக்கும் எண்ணாக 108 திகழ்கிறது என்கிறார்கள். பிரார்த்தனை, வேண்டுதல் என்று அன்றாடம் நாம் 108 என்று எண்ணைப் பயன்படுத்துகிறோம், அதற்கு இதோ ஒரு சில உதாரணங்கள்.

* வேதத்தில் 108 உபநிடதங்கள்.

* பஞ்சபூதத் தலங்கள், அறுபடை வீடுகள் என்பதுகோல சைவ, வைணவ திவ்ய ÷க்ஷத்திரங்கள் 108.

* பிரபஞ்ச அமைப்பில், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் சந்திரனின் விட்டத்தைப் போல் 108 மடங்கு.

* பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் சூரியனின் விட்டத்தைப் போல 108 மடங்கு.

* நடராஜரின் கரணங்கள் 108. தாளங்கள் 108

* அர்ச்சனையில் 108 நாமங்கள்

* அரமரத்தையும் பல தெய்வங்களையும் வலம் வருவது 108 முறை.

* சூரியனின் விட்டம் பூமியில் விட்டத்தைப் போல 108 மடங்கு.

ஒர் எண் சிறப்பான இடம் பெறும்போது அதே எண்ணிக்கையில் பல விஷயங்களும் அமைகின்றன.
 
* தாவோ தத்துவத்தில் 108 தெய்வீக நட்சத்திரங்கள்.

* திபெத்திய புத்த சமயப் பிரிவில் பாவங்களின் எண்ணிக்கை 108

* ஜப்பானிய ஷிண்டோ சமயத்தில் புது வருடம் 108 மணி ஓசைகளால் வரவேற்கப்படும். இந்த ஓசை 108 வகை மனத் தூண்டுதல்களை நாம் வெற்றி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

* மகா நிர்வாணத்தை அடைய 108 படிகள் உள்ளதாக புத்தமதம் கூறுகிறது.

* முக்திநாத் ÷க்ஷத்திரத்தில் 108 நீரூற்றுக்கள்.

* உத்தராகண்டில் ஜோகேஸ்வரர் சிவன் கோவிலில் 108 சிவசந்நிதிகள்.

* உடலில் 108 மர்ம ஸ்தானங்கள் என வர்மக்கலை கூறுகிறது.

* குங்ஃபூ கலை உடலில் 108 அழுத்தப் புள்ளிகள் இருப்பதாகக் கூறுகிறது.

* மனித மனதின் ஆசைகளும் 108 விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

* சீக்கிய குருமார்கள் 108 முடிச்சுகள் உள்ள கம்பளி ஜபமாலையையே பயன்படுத்துவார்கள்.

* 108 சக்தி நாடிகள் உடலின் பல்வேறு பாகங்களிலிருந்து இருதய ஸ்தானத்தில் குவிவதாக தந்திர சாஸ்திரம் கூறுகிறது.

108 என்பது வரையறைக்குட்பட்ட எண்ணாக இருந்து கொண்டு வரம்பற்ற நிலையை உணர்த்துகிறது.

"1 என்பது கடவுளை அல்லது உயர் உண்மையையும் "0 என்பது சூன்யத்தை அல்லது ஆன்மிகச் சாதனையில் முழுமையையும், 8 என்பது எட்டுத் திக்குகளிலும் உள்ள எல்லையற்ற ஆகாயத்தையும் குறிக்கும்.
ஜபமாலையில் 108 மணிகள் ஏன்?
 
ஜபமாலையில் 108 அல்லது 54 அல்லது 27 மணிகள் கொண்ட மாலைகளும் உண்டு. இந்த எண்ணிக்கைகளைக் கூட்டினால் ஒன்பது வருகிறது. (1+0+8: 5+4 : 2+7).

சூரிய நமஸ்காரம்

ஒளி தரும் பொருட்களில் நான் கதிர் நிறைந்த ஞாயிறு என்கிறார் பகவத் கீதையில் பகவன் விஷ்ணு. கதிர் நிறைந்த ஞாயிறு என்பது ஆயிரம் ஒளிக்கதிர்களை உடைய சூரியனைக் குறிக்கும்.

சூரிய நமஸ்காரம்

முறைப்படி செய்யும் சூரிய நமஸ்காரத்தால் சரும நோய்களில் இருந்து குணம் பெறலாம்.

ஆதித்ய ஹிருதயம்

அகத்தியர், ஸ்ரீ ராமபிரானுக்கு, ஆதித்ய ஹிருதயம் என்ற நூலை உபதேசித்தார். இந்த நூலை பாராயணம் செய்து பலம் பெற்றமையால் மிகச்சுலபமாக ராவணனை ராமன் வெற்றி பெற முடிந்தது. பகை, அச்சம் விலக பகலவன் அருள் செய்வான்.

தினமும் சூரியனை வணங்கவேண்டும்.

எந்த மந்திரமும் தெரியாவிட்டாலும் காலை எழுந்தவுடன் உடலை தூய்மை செய்து கொண்டு சூரியன் இருக்கக்கூடிய திசையைப்பார்த்து ' ஓம் நமோ ஆதித்யாய புத்திரி பலம் தேஹிமே சதா " என்று சொல்லி மூன்று முறை வணங்கினால் போதும். ஆதவன் அளவில்லாத பலன்களை அள்ளி வழங்குவான் என்பது உறுதி.

சூரியன்தான் இப்பூவுலகில் உயில் வாழும் அனைத்து ஆற்றல்களுக்கும் மூலம். சூரியன் இல்லாவிட்டால் இப்பூலவுகில் வாழ்க்கையே இருக்காது. பல் ஆயிரம் ஆண்டுகளாக சூரியனிடம் இருந்து ஆற்றல் பெறுவதை நம் முன்னோர்கள் ஒரு விஞ்ஞானமாக வளர்த்து வந்துள்ளார்கள். இந்த விஞ்ஞானம் யோகம் எனப்படுகின்றது. சூரிய நமஸ்காரப் பயிற்சியும் யோகா முறைகளுள் ஒன்றாக கருதப்படுவதால் இன்றும் பலர் அதனை கற்றுக்கொள்கின்றனர்.

சூரிய நமஸ்காரத்தில் உடல் அசைவுகளும் மூச்சு ஒட்டமும் இணக்கமாக நடைபெறுகின்றன. நுரையீரல்களில் காற்றோட்டம் தாராளமாகின்றது. இரத்தம் உயிர்க்காற்றால் நலம் பெறுகின்றது. ஏராளமான கரியமில வாயுவையும் பிற நச்சுப் பொருள்களையும் மூச்சு மண்டலத்திலிருந்து வெளியேற்றுவதன் மூலம் சூரிய நமஸ்காரம் உடலுக்குப் பெரும் நன்மை விளைவிக்கின்றது.

சூரிய நமஸ்காரம் ஜீரண மண்டலத்திற்கு உயிரூட்டி ஆற்றலை அளிக்கின்றது. கல்லீரல், வயிறு, மண்ணீரல், குடல்கள் எல்லாம் நன்றாக மசாஜ் செய்யப்படுகின்றன. இதனால் மலச்சிக்கல் மறைகின்றது. வயிற்று உறுப்புக்களில் இரத்தம் தங்ககுவதில்லை என்பதால் உடல் உறுதியடைகின்றது.

நினைவாற்றல் அதிகரிக்கும்:

உடலின் ஆரோக்கியத்தை நிலைநாட்டுவதில் சூரிய நமஸ்காரம் சிறந்த இடம் பெறுகின்றது. இது இரத்தக் கொதிப்பை மட்டுப்படுத்தும். இதயத் துடிப்பைச் சமன் செய்யும். கை, கால் போன்ற உறுப்புகளுக்குச் சூடு கொடுத்துக் காக்கும்.

நரம்பு மண்டலத்தை விழிப்புடனிருக்க வைப்பதில் சூரிய நமஸ்காரத்திற்கு இணையானது வேறு ஒன்றுமில்லை. சிம்பதட்டிக், பாராசிம்பதட்டிக் நரம்புகளின் செயல்களை நெறிப்படுத்துவதன் மூலம் நல்ல ஒய்வுக்கும் உறக்கத்திற்கும் உதவுகின்றது. இதனால் நினைவாற்றல் அதிகரிக்கின்றது.

உடல் பொலிவடையும்:

சூரிய நமஸ்காரத்தை முறைப்படி செய்யும் போது வியர்வை உண்டாகும். ஏராளமாக உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் தோலின் வழியே வெளியேறும். நன்றாக வியர்க்கும் வரை இப்பயிற்சி செய்வது நல்லதென சூரிய நமஸ்காரத்தைப் பிரபலப்படுத்திய அவுண்ட் அரசர் கூறுகின்றார். வியர்வை பத்துப் பதினைந்து நிமிடங்களிலேயே வெளிவருவதை அனுபவத்தில் அறியலாம். தோலின் மூலம் வியர்வை வெளிவரும் அளவுக்கு உடல்நலம் ஒங்கும்.சூரிய நமஸ்காரத்தில் கழுத்து முன் பின் வளைகின்றது. இதனால் தைராயிட், பாராதைராயிட் சுரப்பிகளுக்கு இரத்தம் கிடைக்கின்றது. அவை செயல்படுவதனால் எல்லா எண்டோக்கிரைன் சுரப்பிகளும் தமக்குரிய இயல்பான காரியங்களைச் செய்கின்றன. தோல் புத்துணர்வு பெற்றுப் பொலிவடைகின்றது.

சூரிய நமஸ்காரம் செய்வதற்கு ஒரு நாளில் மூன்று முதல் பத்து நிமிடங்களே போதும். இது உடம்பு முழுமைக்கும் பயிற்சி அளிக்கின்றது.

சூரிய நமஸ்கரத்திற்குச் செலவொன்றுமில்லை. பளுவான கருவிகள் எதுவும் தேவையில்லை. வேண்டியதெல்லாம் நான்கு சதுர மீட்டர் இடம் தான்.

சூரிய நமஸ்காரத்தைப் பழகப் பழக இன்பம் அதிகரிக்கும். முதலில் சுலபமான உடல் நிலைகளைப் பழக வேண்டும். ஆரம்பத்தில் பூர்ண வெற்றியை எதிர்பார்க்க கூடாது. போகப் போக இலகுவாக இயக்கங்கள் முழுமையான கைவரும்.

சூரிய நமஸ்காரம் ஆண், பெண், சிறுவர், சிறுமியர் அனைவரும் செய்யலாம். தனியாகவும் கூட்டாகவும் செய்யலாம். ஆண்டு முழுவதும் செய்யலாம். அரங்கிலும் செய்யலாம். அறையிலும் செய்யலாம். காலை நேரம் சிறந்தது. முடியாதவர்கள் மாலையிலும் செய்யலாம். சாப்பிட்ட பின் குறைந்தது இரண்டு மணி நேரமாவது கழித்து தான் செய்ய வேண்டும். அலுவலக வேலையால் களைத்துப் போனவர்களுக்குக் கூட பத்து பன்னிரெண்டு நமஸ்காரங்கள் டானிக் போல உயிரூட்டும். தனி அறையில் அமைதியில் செய்வது புத்துணர்வை வளர்க்கும். வேண்டியதெல்லாம் ஒரு சிறு ஜமுக்காளமும் துண்டும் தான்.