மூலிகை சாப நிவர்த்தி

மூலிகை எடுக்க உரிய நாளில் மூலிகை இருக்கும் இடத்திற்கு சென்று மூலிகையை சுற்றி உள்ள இடத்தை சுத்தம் செய்து அதன்பின் அந்த இடத்தை கோமியம் அல்லது மஞ்சள் நீர் தெளிக்கவும். பின் தேங்காய், பழம், ஊதுபத்தி வெற்றிலை பாக்கு, சூடம், சாம்பிராணி இவைகளை வைத்து ஒரு மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து பின் விக்னம் நீக்கும் வினாயகரை மனமாற துதித்து பின் எந்த காரியத்திற்காக மூலிகை எடுக்கிறோமோ அதற்குறிய திசை பார்த்து அமர்ந்து கன்னி நூல் [மஞ்சள் நிற நூல்] காப்புகட்டி தேங்காய் உடைத்து சாம்பிராணி தூபம் தீபம் காட்டி எலுமிச்சை காவு கொடுத்து  பொங்கல் நைவேத்யம்  வைத்து மூலிகை சாப நிவர்த்தி மந்திரம் "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம், ஐம் க்லீம் ஸெளம், ஸர்வ மூலி சாபம் நாஸய நாஸய சித்தர் சாபம் நாஸய நாஸய, தேவ முனி அசுர முனி சாபம் நாஸய நாஸய ஹூம் பட் ஸ்வாஹா- என 108 உரு சொல்லியும், மூலிகை சாப நிவர்த்தி மந்திரம் சிங்வங்சிவயநம சங்வங் சரஹணபவ - என்று ஒரு முறை சொல்லி பின் இரும்பு ஆயுதங்கள் படாமலும், சுண்டு விரல்களும், நகங்கள் பத்தும் படாமலும் இலையை கிள்ளுவதோ செடியை பிடுங்குவதோ எப்படி செய்தாலும் பலிக்கும். இது என் அனுபவ ரீதியில் கைகண்டது.

     மூலிகை பறிக்க உகந்த கிழமைகள் :

                 வசியத்திற்கு - ஞாயற்றுகிழமை,
                 மோகனத்திற்கு - திங்கள்கிழமை,
                 ஏவலுக்கு - செவ்வாய்கிழமை
                 தம்பனம் - புதன்கிழமை,
                 உச்சாடனம் - வியாழன்,
                 ஆகர்ஷ்ணம் - வெள்ளி,
                 மாரணம் - சனி

   மூலிகை பறிக்க உகந்த திசைகள் :

                  வசியம் - கிழக்கு பார்த்து அமரவும்,
                  மோகனம் - தெற்கு,
                  உச்சாடனம் - மேற்கு,
                  பேதனம் - வடக்கு,
                   ஏவல், தம்பனம் - தென்மேற்கு,
                 
மேலும் சில காரிய்களுக்கு உரிய நட்சத்திரமும் கிழமையும் கூடும் போது எடுக்க வேண்டி வரும் அந்த நாளில் செய்ய பலிதம் ஆகும்.

No comments:

Post a Comment