குழந்தை பாக்யம் தரும் குரு பகவான்

குழந்தைச் செல்வம், காசு பணம். இந்த இரண்டையும் விரும்பாதவர்களே இருக்க முடியாது. தனம், புத்திரம் இந்த இரண்டுக்கும் அதிபதி குரு பகவான். நம் ஜாகத்தில் குரு பலமாக இருந்தால் இந்த இரு யோகமும் தங்குதடையின்றி அமையும். கிரகங்களிலேயே சுப கிரகம் குரு. இவர் இருக்கும் இடம்தான் சங்கடங்களுக்கு ஆளாகுமே தவிர, இவரது பார்வை மிகவும் சக்தி வாய்ந்தது. இவரது பார்வை பல தோஷங்களை அகற்றிவிடும் வல்லமை கொண்டது. குரு 5, 7, 9 பார்வையில் பார்க்கும் இடங்கள் சுபிட்சம் பெறும். ‘அந்தணன் தனித்து நின்றால் அவதிகள் மெத்த உண்டு’ என்ற ஜோதிட வாக்கு இவரை குறிப்பதுதான். சமூக அந்தஸ்து, ஆன்மீக ஈடுபாடு, தர்ம காரியங்கள், நற்பணி நிலையங்கள், ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள் அமைத்தல், பள்ளி, கல்லூரிகள் கட்டுதல், வங்கி, அரசு கஜானா போன்ற இடங்களில் வேலை கிடைத்தல் நிதி, நீதித்துறையில் பணிபுரிவது, நீதிபதி, அரசு உயர்பதவிகள் போன்றவற்றை அளிக்கும் வல்லமை உடையவர் குரு பகவான்.

குருவின் அம்சங்கள் (ஆதிக்கம்)
கிழமை: வியாழன்
தேதிகள்: 3, 12, 21, 30
நட்சத்திரம்: புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
ராசி: தனுசு, மீனம். கடகத்தில் உச்சம்
நிறம்: மஞ்சள்
ரத்தினம்: புஷ்பராகம்
தானியம்: கொண்டைக்கடலை
ஆடை: தூய மஞ்சள்

குருவுக்கு உரிய தேதிகள், கிழமைகள், நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு பல யோகங்கள் உண்டாகும். மேலும் ஜாதகத்தில் கேந்திர, கோணங்களில் இருப்பதும் சிறப்பானதாகும்.

பிறந்த லக்னமும் குரு தரும் யோகமும்
எந்த லக்னம்/ராசியில் பிறந்தவர்களுக்கு குரு பகவான் எந்த வகையான யோகங்களை தருவார்?
மேஷ லக்னம்/ராசி & பாக்ய ஸ்தான பலன்கள், கல்வியில் உயர் நிலை, நிதி, நீதித்துறையில் பணிபுரியும் யோகம்.
மிதுன லக்னம்/ராசி & வெளிநாடு செல்லும் வாய்ப்பு, மனைவி வகையில் யோகம், தொழில் மூலம் உயர்வு.
கடக லக்னம்/ராசி & வெளிநாட்டு தொழில் யோகம். பள்ளி, கல்லூரிகள் அமைக்கும் யோகம்.
சிம்ம லக்னம்/ராசி & திடீர் அதிர்ஷ்டங்கள். பிள்ளைகளால் யோகம்.
கன்னி லக்னம்/ராசி & கல்வி, கலை ஆகியவற்றில் யோகம். வெளிநாட்டு தொடர்புகள் உண்டாகும்.
விருச்சிக லக்னம்/ராசி & வங்கி, நீதித்துறையில் உயர் பதவிகள். சொந்த நிறுவனம், பைனான்ஸ் கம்பெனி தொடங்கும் யோகம்.
தனுசு லக்னம்/ராசி & கல்வியில் மேன்மை, நிலபுலன்களால் யோகம்.
கும்ப லக்னம்/ராசி & சொல்லாற்றல், நிதி, நீதி போன்ற துறைகளில் யோகம்.
மீன லக்னம்/ராசி & கவுரவ பதவிகள். தொழில், வியாபாரத்தால் செல்வச் செழிப்பு, அந்தஸ்து, புகழ் உண்டாகும் யோகம்.
எந்த லக்னம், ராசியில் பிறந்தாலும் குரு நீச்சம் பெறாமலும் 6, 8, 12&ம் இடத்திலும் 6, 8, 12 ஆகிய அதிபதிகளுடன் சேராமல் இருக்க வேண்டும். வழிபாடு, பரிகாரம்
கும்பகோணம் அருகே உள்ள ஆலங்குடி குரு ஸ்தலமாகும். அங்கு பரிகார பூஜைகள் செய்து வழிபடலாம். நவ திருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரி குரு ஸ்தலமாகும். அங்கும் வழிபாடு செய்யலாம். திருச்செந்தூரில் முருகப் பெருமான் குரு வடிவாகவே அருள்புரிகிறார். எல்லா சிவன் கோயில்களிலும் தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடத்தி வழிபடலாம்.

‘ஓம் விருஷப த்வஜாய வித்மஹே
க்ரூணி ஹஸ்தாய தீமஹி
தந்தோ குரு பிரசோதயாத்’
அல்லது ‘ஓம் குரு தேவாய வித்மஹே
பிரம்மானந்தாய தீமஹி
தந்நோ குரு பிரசோதயாத்’

என்ற குரு காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம்.
‘ஓம்பிம் சிவய வசி குரு தேவாய நம’ என்ற மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம். வியாழக்கிழமை விரதம் இருந்து மாலையில் சிவன் கோயிலுக்கு செல்லலாம். அங்கு தட்சிணாமூர்த்திக்கு நடக்கும் சிறப்பு பிராத்தனையில் கலந்துகொண்டு பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும் கொண்டைக்கடலை சுண்டல் வழங்கலாம்.

No comments:

Post a Comment