எதிர்மறை சக்தியை விரட்டும் உப்பு நீர் பரிகாரம்

தொடர்ந்து துரத்தும் எதிர்மறை எண்ணங்கள், கோபம் அல்லது அதுபோன்ற வேறு உச்சக்கட்ட உணர்ச்சிகள் மனஅழுத்தம், திடீர் உடல்நலக்கோளாறு, திருஷ்டியால் ஏற்படும் பல கஷ்டங்கள், செய்வினை கோளாறுகள் போன்ற துன்பங்கள் நம்மை துரத்தும் போது கீழ்கண்ட பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறலாம்...
இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வந்தால் அனைத்து கஷ்டங்களும் விலகி ஓடும். மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரம். இதை தினமும் செய்யலாம்...
இந்த பரிகாரம் செய்ய தேவையான பொருட்கள் :
ஒரு பெரிய வாளி
தண்ணீர்
ஹிமாலயன் ராக் சால்ட் (himalayan rock salt) 1 பாக்கெட்
செய்முறை :
வாளியில் 1 பாக்கெட் ஹிமாலயன் ராக் சால்ட்டை (himalayan rock salt) கொட்ட வேண்டும். நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு கால்களை வாளியின் உள்ளே விட்டு முட்டிக்கு சற்று கீழே வரை தண்ணீர் ஊற்ற வேண்டும். கால்களை தண்ணீரில் வைத்தபடி சிறிது நேரம் கண்களை மூடி அமர வேண்டும். பின்னர் மனதில் ‘என் உடம்பில் மனதில் உள்ள அனைத்து எதிர்மறை சக்திகளும் வெளியேற வேண்டுமென’ பிரார்த்திக்கொண்டே இரண்டு கால்களை நன்றாக கால் பாதங்களால் தேய்த்து சுத்தப்படுத்த வேண்டும். இவ்வாறு மனதில் நினைத்தபடி 15 நிமிடம் கால்களை தேய்க்க வேண்டும். 15 நிமிடம் செய்த பின்னர் தண்ணீரை பார்த்தால் சிலருக்கு தண்ணீர் மிகவும் கருப்பாக மாறியிருக்கும்.
சிலருக்கு தண்ணீரில் நாற்றம் எடுக்கும், சிலருக்கு ஏதும் இல்லாமலும் போகலாம். சிலர் இதை செய்து முடித்ததும் மிகவும் களைப்பாக உணருவார்கள். இது உங்களை சுற்றி இருந்த எதிர்மறை சக்திகள் விரட்டி அடிக்கப்பட்டிருப்பதை குறிக்கும். இதை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் வாழ்க்கையில் நல்ல செயல்கள் நடக்க ஆரம்பிக்கும். ஹிமாலயன் ராக் சால்ட்டை (himalayan rock salt) கிடைக்காதவர்கள் கவலைப்பட வேண்டாம். இந்துப்பு மற்றும் கல் உப்பு அல்லது கடல் உப்பை பயன்படுத்தலாம். ஹிமாலயன் ராக் சால்ட்டை பயன்படுத்தும் போது 100%மும், மற்ற உப்பு பயன்படுத்தும் போது 60%மும் பலன் கிடைக்கும்.

No comments:

Post a Comment