மேசம் ராசியினர் எப்படிப்பட்டவர்கள்..

கிறிஸ்வர்களின் கடவுளான யேசுநாதர் கையில் ஆட்டுக்குட்டி இருக்கும்..இந்து மத கடவுளான முருகனின் வாகனங்களில் ஒன்றாக ஆடு இருக்கிறது...அக்னி புராணத்தில் குபேரனை கோயிலில் பிரதிஷ்டை செய்தால் ஆடு வாகனத்துடன் தான் செய்யவேண்டும் என சொல்லப்பட்டிருக்கிறதாம்..இப்படி ஆடு ஒரு அதிர்ஷ்ட சின்னமாகவும்,இருக்கிறது...அந்த ஆட்டை சின்னமாக வைத்திருக்கும் இவர்கள் மேசம் ராசிக்காரர்கள்..மேசம்,ரிசபம்,சிம்மம்,மகரம் எல்லாம் நான்கு கால் ராசிகள் என்பதால் நான்கு கால்கள் கொண்ட விலங்குகள் படங்களை சின்னமாக கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் சொல்லலாம்.

லட்சியமான ராசி,உறுதியான ராசி,நடப்பன ராசி,வீட்டில் வாழ்வன ராசி,ஆண்ராசி,தாதுராசி.இந்த ராசியின் சின்னம் ஆடு.இடம் காடு போன்ற சிறுவனப்பகுதி,இராசியின் நிறம் சிவப்பு,அதிபதி செவ்வாய்.

இந்த ராசிக்    குறியவர்  சராசரி உயரம் உடையவர்,அதிக பருமனாகவோ மிகவும் ஒல்லியாகவோ இருக்கமாட்டார் சமமாக இருப்பார்.உடம்பில் காய தழும்பி இருக்கும்.மூக்குதட்டையாக கண்கள் வட்டமாகவும் செவ்வரி படர்திருக்கும்.  சற்று நீண்ட கழுத்தும்,அகன்ற மார்பும்,கம்பீரமான தோற்றம். உடம்பில் மச்சம் இருக்கும்.அடிப்பட்டக் காயங்கள் ஏறப்பட்ட வடுவும் இருக்கும். வயதாகியும் இளமையின் ஜாடைஇருந்துகொண்டிருக்கும்.

வேகமாக சாப்பிடுவார்.சூடான உணவுபிடிக்கும்.வெய்யில் காலத்திலும் சூடாகவோ சாப்பிட பிரியப்படுவார்.காய்கறிகளை விரும்பி சாப்பிடுவார். சுவையான உணவில் விருப்பம் உடையவர்.இவருக்கு தண்ணீர் அலர்ஜி.மூல நோய் மற்றும் உஷ்ணாதிக்க நோய்கள் வரலாம்.

பரபரப்பாக செயல்படுதல்,தீடீர் என உணர்ச்சி அடைதல்,ஓய்வு இன்றிசெயல்படுதல், விரைவில் கோபப்படுதல், ஆனால் அந்தக்கோபம் சில விநாடியில் சமாதானம்  ஆகிவிடும்.இரும்பு இதயத்தைப்பெற்றவர்கள் போலவும் எல்லோரிடமும்  கடுமையாக  நடந்து கொள்வர் போலவும்  காணப்படுவர்.  ஆனால் உண்மையில்  இவர்கள்  இரக்கம் மிக்கவர்கள் .சண்டைப்பிரியன், கலகபிரியன் ,யாருடையப் பேச்சுக்கும்  கட்டுப்பாடதவர், அடங்காதவர், தைரியசாலி, அதிகாரம், புகழ்விரும்பி.


பின்விளைவுகளைப் பற்றி கவலைப்படாதவர்,.வயதானலும் இளமையின் ஜாடை இருக்கும் வயதை கணிக்க முடியாத அளவுக்கு இளமையின் தோற்றமிருக்கும். எவ்வளவு வயதானலும் குழந்தைதனம்கூடவே இருக்கும்.

நடை உடை பேச்சில் ஒருவித மிடுக்கு காணப்படும்.சிக்கனமனவர்,கஞ்சத்தன மானவர்,என்றுபெயரும் எடுப்பார்.ஆனால் அவசியம் என்று வரும்போது தாராளமாகச் செலவு செய்வார்.எதிலும் நிதானமாகவே நடந்து கொள்ளமாட்டார். அவசரப்பட்டு மற்றவர்களுக்கு உதவி செய்யப் போனால் விவகாரத்தில் மாட்டிக்கொள்ளும் நிலைமை அடிக்கடி உருவாகும்.எதையும் கவனிக்காதவர்கள் போல தோற்றத்திருந்தலும் சுற்றுப்புறத்தில்.நடப்பது முழுவதையும் கவனித்துக்கொண்டிருப்பார்.

வினோதமான குணங்கள் பலவற்றை பெற்றவராக இருப்பார்.பிறர் கூறும் அபிப்ராயத்தை அப்படியே ஏற்றுகொண்டு அங்கீகரிக்கமாட்டார். சொந்த அபிப்பிராயம் தோன்றிக் கொண்டே இருக்கும். அதன் படியே செயல்பட்டு  வெற்றி காண்பார்.  இரகசியமாக பேச வேண்டிய விஷயத்தை மனம் திறந்து பேசிவிடுவார். காதல் விவகாரங்களில் கொஞ்சம்கூடஒளிவு மறைவின்றி      வெளிப்படையாக      இருப்பார்கள். கலப்பு மணம் செய்து கொள்ளகூடும்.

தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களைக் கடைசிவரை ஆதரிப்பர். அவர்களுக்காக எதுவும் செய்ய தயங்கமாட்டார்.  இவர் நன்மை செய்தவர்களை கூட வெறுக்கும் படி நடந்து கொள்வார்.  காரணம்  தன்னுடைய கருத்துக்களை               அவர்கள்          ஏற்றுக்கொள்ளாமைதான்.

சிரித்துப்பேசுவது குணமாக இருந்தாலும் சமயம் பார்த்து சொல் அம்புகளை பிறர் மீதுவீசுவார்.பிறரது புகழ்ச்சிக்குசெவி சாய்க்கமாட்டார்.ஆசைகள் அதிகம் இருக்கும்.சம்பாத்தியாத்தைச் சேமிக்க இயலாது.சமயோஜித புத்தியும் சாதுர்யமும்மிக்கவர்களாக விளங்குவர்.ஒரளவு கல்வி விருத்தி இருக்கும் .ஆனால் அனுபவ அறிவு அதிகமிருக்கும்,சிறந்த அறிவாளி,தைரியசாலி,விவேகம்துணிவு,நம்பிக்கை அதிகம் உடையவர்.மற்ற வர்களை அதிகாரம் செய்யக் கூடியவர்.எப்போது எதையும் விரைவாகசெய்ய நினைப்பவர்.கர்வம் சுயகவுரத்திற்கு முதலிடம் அளிப்பவர்.

பெரும்பாலும்இவர்கள் மணவாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்தாக இராது. மனைவியுடன் அடிக்கடி சண்டை போடுவார்.சில சமயங்களில் மனைவியைப் பிரிந்திருக்கவும் செய்வார்.


இளமையில் பெற்றோரிடமிருந்து பிரிந்துவாழ்வார்.பொதுவாக இவர் பெரிய குடும்பத்தில் பிறந்து இருப்பார்.குடும்பத்தினரிடம் பாசமாக நடந்து கொள்வார். ஆனால் சில சமயங்களில் சுதந்திரமாக வாழவேண்டும் என்னும் ஆசையில்பெற்றோரைப் பிரிந்து வாழ்வார்.சகோதரர்களால் பலன் கிடைப்பது அரிது. ஆனால் சகோதரர்களுக்கு இவரால் பலன் உண்டு.நண்பர்களிடம் அன்பாகவும் கலகலபாகவும் பழகுவார்.ஆனால் யாராவது துரோகம்செய்துவிட்டால் மன்னிக்கவே மாட்டார்,தொடர்பைத் துண்டித்துக்கொள்வார்,ஆன்மிகத் தொண்டுகளில் அதிக ஆர்வம் இருக்கும்.


மேற்சொன்ன அமைப்புகள் சுபாவங்களும் கூடுதலாகவோ அல்லது
குறைவாகவோ அமையக்கூடும்.

இந்த ராசிக்குரிய கிரகம் செவ்வாய் எங்கே எப்படியிருந்து யாரால் பார்க்கப்படுகிறார் என்பதைப் பொறுத்து முடிவு செய்ய வேண்டும்.

 பிறந்த நட்சத்திரம் வரும்  நாளில் முருகன் ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்து வழிபட்டு வந்தால் சிறப்பாக இருக்கும்.திருச்செந்தூர்,பழனி,பச்சைமலை,பழமுதிர்சோலை,திருத்தணி,
திருப்பரங்குன்றம்,சிவன் மலை,சென்னிமலை,வடபழனி,குன்றத்தூர் என அருகில் இருக்கும் முருகன் ஆலயத்தில் வழிபடலாம்....

மேசம் ராசிக்கு 6,8 ராசிகளான கன்னி,விருசிகம் ராசியினரோடு கவனமாக பழகவும்..உறவுகளில் இருந்தால் பாதிக்காது...தொழில் பங்குதாரர் என இருந்தால் கவனம் அவசியம்.
வசியமான ராசிகள் எனில் சிம்மம்...கும்பம்,மிதுனம்,கடகம் எல்லாம் லாபம் தரும் ராசிகள்..

அதிர்ஷ்ட எண்கள்;1,3,9
பகை எண்கள் ;8,2
அதிர்ஷ்ட நிறம்;மஞ்சள்,ஆரஞ்ச்,ரோஸ்,

No comments:

Post a Comment