மேல் நிலை தண்ணீர் தொட்டி (வாட்டர் டேங்க்)

கிணற்று நீர், போர்வெல் நீர், மற்றும் சம்ப் நீர் போன்றவற்றை பைப்புகள் மூலம் மேலேற்றி மேல்நிலை தொட்டிகளுக்கு (அதாவது கீணீtமீக்ஷீ ஜிணீஸீளீ) அனுப்பி அதிலிருந்து பல குழாய்களை இணைந்து ஒரு மனையில் எத்தனை வீடுகள் உள்ளதே அத்தனை வீடுகளுக்கும் விநியோகம் செய்கிறார்கள். இப்படி அமைக்கப்படும் மேல்நிலை தொட்டிகளில் நீர் சேமிக்கப்படுவதால் வீட்டின் மேற்புறத்தில் எடை கூடுதலாகிறது. பொதுவாக கட்டிடங்கள் கட்டும் போது தென் மேற்கு மூலையானது உயர்ந்தும். மற்ற மூலைகள் தாழ்ந்தும் இருந்தால் தான் நற்பலன் உண்டாகும் என்பது வாஸ்துவின் விதி. மேல்நிலை தொட்டியானது தென்மேற்கு மூலையில் அமைக்கலாம் என பலர் கூறி வந்தாலும் ஆராய்ச்சி பூர்வாக வாஸ்துப்படி பார்க்கின்ற போது மேல் நிலை தொட்டியினை (கீணீtமீக்ஷீ ஜிணீஸீளீ) வடமேற்கு அல்லது தென்கிழக்கு மூலையில் அமைத்து விட்டு, இந்த தண்ணீர் தொட்டியை விட உயரமாக இருப்பது போல ஒரு வீட்டையோ அல்லது ஒரு அறையையயோ தென்மேற்கு மூலையில் அமைப்பது சிறப்பு, ஏனென்றால் வீட்டின் கட்டிடமானது தண்ணீர் தொட்டியை விட உயரமாக இருப்பது தான் வாஸ்துப்படி நல்லது. ஆக ஷ்ணீtமீக்ஷீ tணீஸீளீ-ஐ வீட்டின் தெற்கு, மேற்கு, தென்மேற்கு, தென்கிழக்கிலோ, வடமேற்கிலோ அமைப்பது உத்தமம். கண்டிப்பாக ஒரு கட்டிடத்தில் அதிக எடையானது வடகிழக்கில் இருக்க கூடாது. இது மட்டுமின்றி வடகிழக்கு பகுதி உயரமாகவும் இருக்க கூடாது.

No comments:

Post a Comment