பத்தாம் பாவம்



பத்தாம் பாவம் முக்கியமாக தொழிலைப் பற்றிஅறிய உதவுவது என அறிவோம்.

மேச ராசி பத்தாம் பாவமாக அமையுமானால் அதில் பிறந்த ஜாதகன் தொழிலில் சிறந்தவன். துப்பு கண்டு பிடிப்பதில் வல்லவன், அரசாங்க பணியில் ஈடுபடுபவன், மகிழ்ச்சி மிக்கவன். சாதுக்களின் கோபத்திற்கு ஆளாகுபவன்.

ரிஷப ராசி பத்தாம் பாவமாக அமையுமானால் செலவாளி, பெரியோர்களை சாதுக்களை பூஜிப்பவன். ஞானம் மிக்கவன்.

மிதுனம் பத்தாம் இடமாக அமைந்தால் காரியத்தில் கான்னாயிருப்பவன். மந்திரங்கள் அறிந்தவன். மக்களின் மத்தியில் செல்வாக்கு உடையவன். தேகப்போலிவுடையவன்.

கடகம் பத்தாம் பாவமாக அமையுமானால் தண்ணீர்ப் பந்தல், பூந்தோட்டம் முதலியவற்றை அமைத்தல், குளம் வெட்டுதல் போன்ற தர்ம காரியங்களில் ஈடுபடுவான்.

சிம்மம் பத்தாம் பாவமாக அமையுமானால் ஜாதகன் எல்லா பாவங்களையும் செய்யதக்க கொடூரமுள்ளவனாகின்றான். பொருளை கடத்தல், நாடு விட்டு நாடு செல்லுதல் ஆகிய மறைமுகமான தொளில்களில் துணிச்சலுடன் ஈடுபடுவான். கொலை செய்யவும் அஞ்சாதவன்.

கன்னி பத்தாம் இடமானால் ஜாதகன் எப்போதும் முட்டாள்களின் நண்பனாகவே ஊர் சுற்றித் திரிவான். பெரும்பாலும் பெண்களுடைய சொத்துக்கு மேலாளராக இடம்பிடித்து, தானும் சொத்து சேர்த்துக் கொள்ளும் வல்லவனாகின்றான்.

துலாம் பத்தாம் இடமாக அமைந்தால் பல்வேறு தொழில்களில் ஈடுபடுகின்றான். நேர்மையுடையவன். சாதுக்களுக்கு பிடித்தமானவன்.பல தர்ம காரியங்களில் ஈடுபட்டு மேலான பதத்தை அடையக்கூடிய பாக்கியம் பெற்றவன்.

விருசிகம் பத்தாம் இடமானால் பிராமணர்கள் குருமார்கள், மேலோர் ஆகியவர்களை துன்புருத்துபவனாகின்றான். துஷ்டர்களுடைய சிநேகிதம் இவனுக்கு விருப்பமானதாகும்.

தனுசு பத்தாம் பாவமாக அமையுமானால் எப்பொழுதும் அடிமை தொழிலை செய்ய நேரிடுகின்றது. திருட்டும், பிறருக்கு தீங்கு செய்தலும் இவனுக்கு கை வந்த கலை.

மகரம் பத்தாம் பாவமாக அமையுமானால் உறவினர்களுடன் அன்பு கொண்டவன். வித்வான்களை நேசிப்பவன். இருப்பினும் சில நேரங்களில் துஸ்டத்தனமான காரியங்களிலும் இவன் ஈடுபடக் கூடும்.

கும்பம் பத்தாம் பாவமாக அமையுமானால் பிறரை ஏமாற்றிப் பிழைப்பவன். பயணம் செய்வதில் விருப்பம் உடையவன். தனக்கு ஒரு பொருள் தேவை என்றால் அதை எந்த வழியிலும் அடைந்தே தீர வேண்டும் என்று முரட்டுத் தனம் கொண்டவன். இதனால் சமுக விரோதியாகவும் இவன் மாறுவதற்கு இடம் உள்ளது.

மீனம் பத்தாம் இடம் ஆனால் தெய்வ வழிபாட்டில் சிந்தையை செலுத்தக் கூடியவன். குருபக்தி மிக்கவன். அதனால் குருவின் உபதேசம் பெற்று கீர்த்தி உடையவனாகின்றான். தர்ம காரியங்களில் பெரும்பாலும் நாட்டம் உடையவன் ஆகின்றான்.

பத்துக்கு உடையவன் ஒவ்வொரு ராசியிலும் இருப்பதால் ஏற்படும் பலன்கள்.

பத்துக்குடையன் லக்னத்தில் இருந்தால் தாயினிடத்தில் அன்பு மிக்கவன். தந்தையிடத்தும் பக்தியுடையவன். சுகத்துடன் வாழ்பவன். பாபக்கிரகங்களுடன் கூடினால் துக்கம் உடையவன். துஷ்டன். தந்தைக்கு ஏமாற்றத்தை தருபவன்.

பத்துக்குடையன் இரண்டாம் இடத்தில் சுப கிரகங்களுடன் கூடி இருந்தால் தாய் தந்தையரை சுகத்துடன் வைத்திருப்பான்.கடின வார்த்தை பேசுபவன்.திடகாத்திரமான சரீரம் உள்ளவன். தனவான்.

பத்துக்குடையன் மூன்றாம் இடத்தில இருந்தால் உறவினர்களுக்கும் பெற்ற தாய்க்கும் விரோதியகின்றான். பெரும்பாலும் அடிமை தொழில் செய்பவன்.

பத்துக்குடையன் நான்காம் இடத்தில் இருந்தால் மிகுதியாக சுக போகங்களில் ஈடுபடகூடியவன். தாய் தந்தையரை நலமாக வைத்துக் காப்பவன். மனித சமுதாயம் நலம் பெற வேண்டும் என்ற பரந்த நோக்கம் உள்ளவன். அரச சன்மானம் பெறக் கூடியவன்.

பத்துக்குடையன் ஐந்தாம் இடத்தில் இருந்தால் கலை ஆர்வம் மிக்கவன். அரசால் ஆதாயம் பெறக் கூடியவன். மிகுந்த யோகி, சிறந்த சங்கீத மேதையாகவும் இவன் திகழக் கூடும்.

பத்துக்குடையன் ஆறாம் இடத்தில் இருந்தால் அரசுப் பகையை தேடிக் கொள்வான். காமம் மிக்கவன். எல்லோரிடத்திலும் எப்போதும் சண்டை இடுபவன். திருடர்களுக்கு மத்தியில் இவன் ஜீவனம் சிறப்பாக அமையும்.

பத்துக்குடையன் ஏழாம் இடத்தில் இருந்தால் நல்ல அழகன்; பெண்களிடத்தில் எப்போதும் பிரியமாக நடந்து கொள்வான். இவனது மகனாலும், இவன் தந்தையின் அன்புக்குரிய பிற ஸ்திரியாலும் நலம் பெறுவான்.

பத்துக்குடையன் எட்டாம் இடத்தில் இருக்கப் பிறந்தவன் மிக்க ஏமாற்றத்தை தரும் பொய் வார்த்தை பேசுபவன். கபடம் உள்ளவன். திருட்டு வித்தையில் சமர்த்தன். தந்தைக்கு இடைவிடாமல் தொல்லை தருபவன்.

பத்துக்குடையன் ஒன்பதாம் இடதில் இருந்தால் தொழிலில் விருத்தி உள்ளவன். தோற்றப் பொலிவு கொண்டவன். அன்பான் சகோதர்களும், நண்பர்களும் நிறைந்தவன். பராக்கிரமம் மிக்கவன். உண்மையில் நாட்டம் உடையவன்.

பத்துக்குடையன் பத்தாம் இடத்திலேயே இருந்தால் தந்தையை சுகமாக வைத்திருப்பவன். சாமர்த்தியசாலி. புகழ் மிக்கவன். அரசு வருமானத்தை சன்மானங்களை அடையக் கூடியவன்.

பத்துக்குடையன் பதினொன்றாம் இடத்திலிருகப் பிறந்தவன் எதிலும் வெற்றியும் லாபத்தையும் ஈட்டக் கூடியவன். ஆண்களும், பெண்களும் ஆன குழந்தைகளைப் பெற்றவன். பணியாளர்கள் நிரம்பப் பெற்ற தனவான்.

பத்துக்குடையன் பணிரெண்டாம் இடத்திலிருந்தால் அரசுப் பணியில் இருபதோடு சுயமாகவும் பொருள் ஈட்டக் கூடியவன். தந்தையால் சௌக்கியம் அற்றவன். வக்கிரமான புத்தி உள்ளவன். இயற்கை அழகில் ஈடுபாடு கொண்டவன். பெரும்பாலும் வெளிநாடுகளில் இவனுடைய வாழ்க்கை கழிகின்றது. நல்ல செலவாளி.

பத்தாம் இடத்தை சூரியன் முதலிய கிரகங்கள் பார்பதால் ஏற்படும் பலன்கள்.

பத்தாம் இடத்தில் சூரியனுடைய பார்வை இருக்குமானால் ஜாதகன் எப்போதும் காரிய சித்தியுல்லவன். முதல் வயதிலேயே இவருடைய தாயார் இறந்துவிட வாய்ப்பு உள்ளது. சூரியன் சொந்த வீட்டிலோ, உச்ச வீட்டிலோ இருந்து பார்த்தால் தாய்க்கு சுகம் உண்டாகும்.

பத்தாம் இடம் சந்திரனால் பார்க்கப்பட்டால் கால்நடைகள் நிறைந்த சூழ்நிலைகளில் அது தொடர்பான தொழிலை உடையவன். மகன் மனைவி இவர்களால் சுகத்தை அடையக் கூடியவன். ஆனால் தந்தையாலோ, உறவினர்களாலோ சுகம் கிடைப்பதில்லை.

பத்தாம் இடம் செவ்வாயினால் பார்க்கப்பட்டால் ஜாதகன் எந்தவித சிரமமும் இல்லாமல் காரியத்தில் வெற்றி அடைபவன். செவ்வாயின்  தசை மூன்றாவது தசையாக வந்தால் ஜாதகன் மிகுந்த சுகத்தையும், பாக்கியத்தையும் அடைகின்றான்.

பத்தாம் இடம் புதனால் பார்க்கப் பட்டால்ஜாதகன் வேலை செய்து பிழைப்பவனாகவும், மக்களின் தலைவர்களால் நேசிக்கப் பட்டவனாகவும், எதிலும் முயற்சி உள்ளவனாகவும் ஆகின்றான்.

பத்தாம் இடம் குருவினால் பார்க்கப் பட்டால் அரண்மனையில் (இக்காலத்தில் அமைச்சர்களின் அலுவலகத்தில் அல்லது வீட்டில் பணி செய்யக் கூடியவன்) பணி செய்யக் கூடியவன். மகன், மனைவி இவர்களிடம் அன்பு மிக்கவன். அவர்களால் சுகமும் பெறுகின்றான். இவனுக்கு முன்னதாக பிறந்தவர்களை காட்டிலும் இவனிடத்தில் செல்வம் மிகுதியாக சேர்கின்றது. மாட மாளிகை கட்டி வாழ்பவன்.

பத்தாம் இடம் சுக்கிரனால் பார்க்கப் பட்டால் தனது ஊரிலேயே அரசு வழி தொடர்பால் ஆதாயம் உண்டு. புத்திரர்கலாலும், பந்துகளாலும் நேசிக்கப் படுபவன். தலைவலி இவனை விட்டு நீங்காத நோய்.

பத்தாம் இடம் சனியினால் பார்க்கப் பட்டால் இவனுடைய தந்தை விரைவில் அழிகின்றார். தாய் மூலமும் அவ்வளவு சுகம் இல்லை. அதிக காலம் வாழ்ந்திருக்க மாட்டன். ஜீவித்தால் பாக்கியமுள்ளவனாக இருப்பான்.

No comments:

Post a Comment