மூன்றாம் பாவம்



சகோதரர், வேலைகாரர், தைரியம் ஆகியன பற்றி மூன்றாம் இடத்தில அறியகூடும்;

மேஷம் மூன்றாம் பாவமானால் படிப்பாளி, பரோபகாரி, சுகசரீரம் உள்ளவன்.

ரிசபம் மூன்றாம் பாவமானால் புகழ் பெற்றவன். வள்ளல். அரச செல்வாக்கு உள்ளவன்.

மிதுனம் மூன்றாம் இடமானால் வாகன சுகம் உள்ளவன். பெண்களிடத்தில் பிரியமாக நடப்பவன். அரசர்களின் நேசம் உடையவன்.

கடகம் மூன்றாம் இடம்மாக அமையும் போழுது நற்குணங்கள் வாய்க்கப் பெற்றவனாகவும், விவசாயத்தில் ஈடுபடுபவனாகவும் அமைகிறான்.

சிம்மம் மூன்றாம் இடம்மாக அமையும் போழுதுபிறரின் பணத்தில் ஆசையுள்ளவனாகவும் துஷ்டனாகவும் ஆகின்றான்.

கடகம் மூன்றாம் இடமாகும் போது நற்குணங்கள் வாய்க்கப் பெற்றவனாகவும், விவசாயத்தில் ஈடுபாடு உள்ளவனாகவுன் அமைகின்றான்.

சிம்மம் மூன்றாம் வீடாகும் போது ஜாதகன் பிறரின் பணத்தில் ஆசைவுள்ளவனாகவும் துஷ்டனாகவும் ஆகின்றான்.

கன்னி மூன்றாம் இடமாக அமைந்த ஜாதகன் சாஸ்திரத்தில் பற்று உள்ளவனாகவும், ஒழுக சீலனாகவும் விருந்தோம்பல் பண்பாடு கொண்டவனாகவும் அற்பரின் சிநேகம் கொண்டவனாகின்றான்.

துலாம் மூன்றாமிடமாக அமைந்தால் வெறுக்கத்தக்க சுபாவம் கொண்டவனாகவும் அற்பரின் சிநேகம் கொண்டவனாகவும் ஆகின்றான்.

விருச்சிகம் மூன்றாமிடமாக அமைந்தவனுக்கு செய்நன்றி மறந்த பாபர்களும், செலவு செய்வதையே குறியாக கொண்டவர்களும், வம்பிளழுப்பவர்களும் சேர்ந்து விரோதத்தை விளைவிப்பவர்கள்.

தனுசு மூன்றாமிடமாக அமைந்தவன் வீரர்கள், செல்வர்கள், தர்ம மார்க்கத்தில் இருபவர்களின் நட்பை அடைகின்றான்.

மகரம் மூன்றாம் இடமாக அமைந்தவனுக்கு எப்போதும் சுகம் கிடைக்கிறது. தெய்வ வழிபாடு; குருபக்தி; நிறைந்த செல்வம், ஒப்பற்ற பாண்டித்தியம் காரணமாக நல்ல குருமார்கள் அமைகிறார்கள்.

கும்பம் மூன்றாம் இடமாக பிறந்த மனிதன் பொறுமை, கீர்த்தி, சத்தியம் மிக்கவர்களோடு நண்பன் ஆகின்றான். சில சமயம் வஞ்சகர்களோடும் சிநேகம் கொள்ள நேரிடும்.

மீனம் மூன்றாமிடமாகும் போது மிகுந்த செல்வம் நிறைய பிள்ளைகள் உடையவனாகின்றான். புண்ணியவான். அதிதிகளிடம் பிரியம் உள்ளவன். எல்லா ஜனங்களுக்கும் பிடிதவனுமாகின்றான்.

3 ஆம் பாவதிபதி பன்னிரண்டு ராசிகளிலும் இருப்பதன் பலன்

3
க்கு உடையவன் லக்னதிலிருன்தால் பந்துகளின் இடையூருளால் இல்லற சுகத்தை அனுபவிக்க இயலாதவனாகின்றான். அடிமைத்தொழில்.

3க்கு உடையவன் இரண்டாம் இடத்தில இருந்தால் பிச்சை எடுக்க நேரிடும்.

3க்கு உடையவன் மூன்றாமிடதிலேயே இருந்தால் பிறரை நண்பனாக்கி கொள்வதில் சமர்த்தன்; குருவிடம் பற்றும் ராஜ சேவையும் மேலான் தனமும் உடையவன்.

3க்கு உடையவன் நான்காம் இடத்தில இருந்தால் உறவினர்கள் இருந்தால் பித்தம்; வயிற்றில் சாஸ்திர சிகிச்சை; தாயுடன் சண்டை; தந்தையினுடைய  பொருளை அழிப்பவன்.

3க்கு உடையவன் 5 ஆம் இடத்திலிருந்தால் உறவினர்கள் அதிகம், சுகவாசி; பிறருக்காக உதவி செய்பவன்; அழகிய சரீரம் உடையவன்; நீண்ட ஆயுள்.

3க்கு உடையவன் 6 ஆம் இடத்தில் இருந்தால் கண்ணில் ஏதாவது கோளாறு; சத்ருக்கள் நிறைந்தவன்; சகோதரர்களாகவும், விளங்குகளாலும், வியாதிகளாலும் சாதுக்களாலும் துன்பத்தை அடைவான்.

3க்கு உடையவன் 7 ஆம் இடத்தில இருந்தால் பெண்களிடம் சண்டை இடுபவன்; மனைவி நல்ல அழகுடன் அமைந்தவராயினும் வேறு ஸ்திரீயின் பாவம் நிறைந்த வீட்டை நாடிசெல்வான்.

3க்கு உடையவன் எட்டாம் இடத்திலிருந்து பாபகிரகங்களும் சேர்ந்திருந்தாலும் ஜாதகன் மிகுந்த கோபம் உடையவனாகவும் இறந்து போன சகோதரன் பந்துக்களுடைய குடும்பத்தில் பிறந்த்வானாகவும் இருப்பான்

3க்கு உடையவன் ஒன்பதாம் இடத்தில் இருந்தால் இளமையான தோற்றம்; சோலைகள் சூழ்ந்த பகுதிகளில் வாழவேண்டும் என்ற விருப்பம் உள்ளவனாகவும், நல்ல விசயங்களில் புத்தியை செலுத்துபாவனாகவும் இருப்பான்.

3க்கு உடையவன் 1௦ ஆம் இடத்தில் இருந்தால் தகப்பன் வழியிலும் அரச வழியிலும் சுகம் உண்டாகும். தூய்மையே விரும்புவான்.

3க்கு உடையவன்  11 ஆம் இடத்தில் இருந்தால் பராகிரமம் உடையவன். பந்துகளின் உதவி எப்போதும் கிட்டும். சிறந்த நிபுணன். சுகவாசி.

3க்கு உடையவன் 12 ல் இருந்தால் செலவாளி, நண்பனே சத்ருவாக மாறுவான்.

மூன்றாம் பாவத்திற்க்கு பிற கிரகங்களின் பார்வையால் ஏற்படும் பலன்கள்

3
ஆம் இடம் சூரியனால் பார்க்கப்பட்டால் முன் சகோதரன் இல்லாமல் போகின்றார்.

3 ஆம் இடம் சந்திரனால் பார்க்கப்படால் சகோதரிகள் அதிகம் உடல் வலு அற்றவர்.

3 ஆம் இடம் செவ்வாய்யால் பார்க்கப்பட்டால் பராகிரமம் உள்ளவர். சகோதர்களை இழப்பார்.

3 ஆம் இடம் புதனால் பார்க்கப்பட்டால் சகோதர சௌக்கியம் கொண்டவர்.

3 ஆம் இடம் குருவால் பார்க்கப்பட்டால் தகப்பன் மூலம் செல்வ வரவு ஆனாலும் தகப்பனை பிரிவார்.

3 ஆம் இடம் சுகிரனால் பார்க்கப்பட்டால் பெண் குழந்தை பிறப்பதனால் வேறு தேசம் செல்லுபவர்; அரசினால் உதவியுண்டு.

3 ஆம் இடம் சனியினால் பார்க்கப்பட்டால் பராக்கிரமம் உள்ளவர். பலவான்; சகோதர வர்கத்துக்கு சௌக்கியம் இல்லை.

3 ஆம் பாவாதிபதிக்கு வேறு கிரகங்களின் சேர்கையால் உண்டாகும் பலன்கள்.

லக்னத்தில் குரு 3 ஆம் இடத்ததிபனுடன் கூடி இருந்தால் நாற்கால் பிராணிகளுக்கு சேதம்.

3 ஆம் இடத்ததிபன் ராகுவுடன் கூடி லக்னத்தில் இருந்தால் பாம்பினால் பயம்.

3 ஆம் இடத்ததிபன் புதனுடன் சேர்ந்தால் கழுத்தில் ரோகம், கண்டமாலை, உள்நாக்கு படருதல் போன்ற நோய்கள் வரலாம்

3 ஆம் இடத்ததிபன் ஆறாம் இடத்தில் இருந்து பாபக் கிரகத்தால் பார்க்கப்பட்டால் விஷபயம்

3 ஆம் தனுசு ராசியாக இருந்து செவ்வாயின் சேர்கை இருந்தால் காதில் ரோகம்.

3 ஆம் இடத்ததில் சனியிருந்து மாந்தியுடன் கூடினால் வாயுரோகம்.

3 ஆம் இடம் பாபரின் வீடாகி பாபகிரகம் கூடுமானால் ஜாதகனுக்கு நாசம். அதுவே சுபரின் வீடானால் சகோதர ஒற்றுமை ஏற்படும்.

3 ஆம் இடத்ததிபனோடு ஸ்திரீகிரகங்கள் 9 ஆம் இடதிலிருந்தால் சகோதரிகளும், புருஷகிரகங்கள் அங்கிருந்தால் சகோதரர்களும் உண்டாவர்.

No comments:

Post a Comment