Showing posts with label பூராடம். Show all posts
Showing posts with label பூராடம். Show all posts

நட்சத்திரத்திற்கான அதிர்ஷ்ட வழிபாட்டு முறைகள்!

ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இவற்றை தலா மூன்று நட்சத்திரமாகக் கொண்டு ஒன்பதாக பிரிப்பர். அதன்படி, நட்சத்திரத்திற்கேற்ற அதிர்ஷ்ட வழிபாட்டு முறைகள் இங்கே தரப்பட்டுள்ளன. உங்களின் நட்சத்திரம் எதில் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். வாழ்வில் வளம் பெறுங்கள்.

அசுவினி, மகம், மூலம்
நட்சத்திர அதிபதி கேது ஆவார். கேது திசையில் பிறந்த உங்களின் அதிர்ஷ்ட தெய்வம் விநாயகர். எப்போதும் விநாயகரை வழிபட்ட பின் பணிகளைத் துவக்குங்கள். சதுர்த்திநாளில் விநாயகர் கோயிலுக்குச் செல்ல மறக்காதீர்கள். அதிர்ஷ்டநிறம் சிவப்பு. சிவப்போடு பல நிறமும் கலந்த ஆடைகள் அணிவது யோகம் தரும். அதிர்ஷ்ட எண் 5,7,9. இந்த தேதிகளில் தொடங்கும் முயற்சிகள் எளிதாக நிறைவேறும். நவரத்தினத்தில்
வைடூர்யத்தை அணிந்து கொள்வது நன்மை தரும். மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனராசியினர் நல்ல நண்பர்களாக அமைவர்.

பரணி, பூரம், பூராடம்
சுக்ரனே உங்களின் நட்சத்திர அதிபதி. சுக்ர திசையில் பிறந்த உங்களின் அதிர்ஷ்ட தெய்வம் மகாலட்சுமி. காலையில் கண் விழிக்கும் போதே மகாலட்சுமி படத்தை பார்த்து வணங்குங்கள். வெள்ளிக்கிழமையில் லட்சுமி சந்நிதியில் நெய்தீபமிடுங்கள். அதிர்ஷ்ட நிறம் வெள்ளை. வெண்ணிற ஆடைகளை அணிவது யோகம் தரும். அதிர்ஷ்டம் தரும் எண்கள் 3,6,8. இந்த தேதிகளில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் எளிதில் முடியும். அதிர்ஷ்டக்கல் வைரம். எல்லோராலும் வாங்கமுடியாது. வைரத்திற்குப் பதிலாக, ஸ்படிக மாலை வாங்கி அணிவதும் நல்லது. மிதுனம், தனுசு, மகரம், கும்பம் ராசியினரோடு நல்ல நட்பு மலரும்.

கிருத்திகை, உத்திரம், உத்திராடம்
சூரியனே உங்கள் நட்சத்திர நாதனாக விளங்குகிறார். நீங்கள் சூரிய திசையில் பிறந்தவர். சிவபெருமானைத் தொடர்ந்து வழிபடுவதால் அதிர்ஷ்டம் உங்களைத் தேடிவரும். பிரதோஷ நாளில் சிவாலய தரிசனம் செய்வது சிறப்பு. அதிர்ஷ்ட நிறம் சிவப்பு. சிவப்பு நிற ஆடை அணிவது யோகம் தரும். 1,5,7 ஆகிய எண்கள் அதிர்ஷ்டத்தை உங்களுக்கு வரவழைக்கும். இந்த தேதிகளில் ஆரம்பிக்கும் செயல்களில் கிடைக்கும். அதிர்ஷ்டக்கல் மாணிக்கம். கடகம், விருச்சிகம், தனுசு, மீனராசியினர் நண்பர்களாக அமைந்தால் நட்பு நீண்ட காலம் தொடரும்.

ரோகிணி, அஸ்தம், திருவோணம்
உங்களின் நட்சத்திர நாதனாக சந்திரன் இருக்கிறார். சந்திரதிசையில் பிறந்த நீங்கள், அம்பிகையை வழிபடுவதால் நன்மை பெறுவீர்கள். பவுர்ணமியில் அம்மனுக்கு தீபமேற்றி வழிபட யோகம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம் வெள்ளை. வெண்ணிற ஆடைகளை அணிவதன் மூலம் வெற்றி வந்து சேரும். அதிர்ஷ்டம் தரும் எண்கள் 2,3,9. இந்த தேதிகளில் தொடங்கும் செயல் எதுவானாலும் வெற்றி உங்களுக்கே. முத்து பதித்த
ஆபரணங்கள் அணிய நன்மை உண்டாகும். மிதுனம், சிம்மம், கன்னி
ராசியினரோடு பழகினால் நட்பு வாழ்வில் வளம் சேர்க்கும்.

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்
நவகிரகங்களில் செவ்வாய்க்குரிய நட்சத்திரம் உங்களுடையது. செவ்வாய்திசையில் பிறந்த உங்களுக்கு, அதிர்ஷ்டதெய்வம் முருகன். செவ்வாயன்று முருகனுக்கு பாலபிஷேகம் செய்வது சிறப்பு. அதிர்ஷ்டநிறம் இளஞ்சிவப்பு. சிவப்புநிற ஆடை அணிவதால் நலம் பெருகும். அதிர்ஷ்ட எண்கள் 3,6,9. இந்த தேதிகளில் தொட்ட செயல்கள் யாவும் இனிதே முடியும். அதிர்ஷ்டக்கல் பவளம். பவளத்தை மோதிரமாகவோ, டாலராகவோ அணிந்துகொள்ளலாம். சிம்மம், தனுசு, மீனராசியினர் நண்பராக அமைய அனுகூல பலன்கள் உண்டாகும்.

திருவாதிரை, சுவாதி, சதயம்
ராகுவிற்குரிய இந்த மூன்று நட்சத்திரங்கள் இவை. ராகுதிசையில் பிறந்த நீங்கள் வழிபடவேண்டிய அதிர்ஷ்டதெய்வம் துர்க்கை. ராகுவேளையில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபடுவது நன்மைதரும். அதிர்ஷ்டநிறம் கருமை. ஆடையில் கருப்பு புள்ளிகள், கோடு இருந்தாலும் போதுமானது. அதிர்ஷ்ட எண்கள் 1,4,7. இந்த தேதிகளில் தொடங்கும் விஷயம் எளிதில் நிறைவேறும். அதிர்ஷ்டக்கல் கோமேதகம். கோமேதகத்தை மோதிரத்தில் பதித்தும், டாலராக அணிந்து கொள்ளலாம். மிதுனம், கன்னி, தனுசு, மகரம், மீனராசியினர் நல்ல நண்பர்களாக அமைவர்.

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
நவகிரகங்களில் பூரணசுபரான குரு உங்களுக்கு நட்சத்திராதிபதியாவார். குருதிசையில் பிறந்த உங்களின் அதிர்ஷ்டதெய்வம் தட்சிணாமூர்த்தி. வியாழனன்று இவருக்கு நெய்தீபம் ஏற்றி, கொண்டல்கடலை மாலை சாத்தி, வழிபட்டு வந்தால் சுபபலன் உண்டாகும். அதிர்ஷ்டநிறம் மஞ்சள். இந்நிறத்தில் கைக்குட்டையாக வைத்துக்கொள்ளுங்கள். அதிர்ஷ்ட எண்கள் 2,3,9. இந்த தேதிகளில் புதிய பணிகளைத் துவங்குவது நன்மை தரும். அதிர்ஷ்டக்கல் புஷ்பராகம். மேஷம், சிம்மம், கன்னி, விருச்சிக ராசியினரின் நட்பு கொள்வதால் நற்பலன் உண்டாகும்.

பூசம், அனுஷம், உத்திரட்டாதி
உங்களின் நட்சத்திராதிபதியாக இருப்பவர் சனி. முதல் திசையாக சனியில் பிறந்த நீங்கள், வழிபடவேண்டிய அதிர்ஷ்டதெய்வம் சாஸ்தா. காலையில் எழுந்ததும் இவரை தரிசிப்பது சிறப்பு. குலதெய்வ வழிபாடும் உங்களுக்கும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இயன்ற போதெல்லாம் சாஸ்தா கோயிலுக்குச் சென்று வழிபட்டு வருவது நன்மை தரும். அதிர்ஷ்டநிறம் கருநீலம். அதிர்ஷ்டஎண்கள் 5,6,8. இத்தேதிகளில் தொடங்கும் செயல்கள் இனிதே நிறைவேறும். அதிர்ஷ்டக்கல் நீலம். ரிஷபம், மிதுனராசியினரிடம் நட்பு கொண்டால் நன்மை ஏற்படும்.

ஆயில்யம், கேட்டை, ரேவதி
கிரகங்களில் புதன் உங்களின் நட்சத்திராதிபதி. புதன்திசையில் பிறந்த உங்களுக்கு அதிர்ஷ்டம் அருள்பவர் மகாவிஷ்ணு. சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி, நெய் தீபம் ஏற்றி வழிபடுவது யோகம் தரும். ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது மிகவும் சிறப்பு. அதிர்ஷ்டநிறம் பச்சை. அதிர்ஷ்டஎண்கள் 1,5,8. இத்தேதிகளில் செய்யும் செயல்கள் அனைத்தும் நற்பலன் தரும். அதிர்ஷ்டக்கல் மரகதம் என்னும் பச்சைக்கல். ரிஷபம், சிம்மம், துலாம் ராசியினரிடம் உண்டாகும் நட்பு உண்மையானதாகவும், ஆழமானதாகவும் இருக்கும்

தனுசு ராசியினர் எப்படிப்பட்டவர்கள்..

தனுசு ராசி குருவின் ராசி..குருவுக்கு அதிக பலம் இந்த ராசியில்தான்...குருபகவானின் சொந்த வீட்டுக்குண்டான ராசிக்காரர்கள் என்றால் குருவின் அருள் பார்வை கிடைக்காமலா போகும்..? குருதான் ஊர்ல பெரிய மனுசன் அந்தஸ்து வாங்கி கொடுப்பவர்...நல்ல குழந்தைகளை தரக்கூடியவர்..கெளரவம் தருபவர்...ஊர்ல நடக்குற நல்லது கெட்டது எல்லாத்துக்கும் இந்த தனுசு ராசிக்காரங்க தயவு வேணும்..ஏன்னா அவங்கதான் பிரதிபலன் பார்க்காம எதார்த்தமா உழைக்க கூடியவங்க...பணம் கொடுத்தா கூட என்னப்பா ..நான் என்ன அந்நியனா..? பணம் கொடுத்து அசிங்கப்படுத்துறியேப்பா என கோவித்து கொள்வார்கள்..இதனாலேயே இந்த ராசிக்காரர்களை பிறர் ஏமாற்றிவிடுவதுண்டு...கடன் வாங்கி ஏமாற்றுவதுண்டு....

சீக்கிரம் பணக்காரன் ஆகனும் எனும் ஆசை இவர்களுக்கு அதிகம் உண்டென்பதால் ஷேர்மார்க்கெட்,ஃபைனான்ஸ்,கந்து வட்டி,ரியல் எஸ்டேட் துறைகளில் இவர்களை அதிகம் பார்க்கலாம்..நிறைய நஷ்டம் ஆகிவிட்டு வீட்டுக்குள் இருக்க முடியாமல் நண்பர்களிடம் புலம்பிக்கொண்டும்,பிறருக்கு அட்வைஸ் செய்து கொண்டும் இருப்பதை காணலாம்..இவர் அறிவுரை கேட்டால் யாராக இருந்தாலும் முன்னேறிவிடலாம்..ஆனா இவர்களில் பெரும்பாலும்  அப்படியே இருக்கிறார்கள்..
எல்லோரையும் நன்கு கவனிப்பார்...குடும்ப வாழ்க்கை எப்படி எனில்...ஸ்..அதை ஏன் சார் கேட்குறீங்க..நமக்கு அப்படியே ஆப்போசிட்டா கொடுத்துட்டான் ஆண்டவன் என கையை மேலே காட்டுவார்கள்....புத்தி மாறிக்கிட்டே இருக்கும் ஓரிடத்தில் இவர்களால் இருக்க முடியாது..மனைவி தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்கனும்...இல்லைன்னா எலியும் பூனையும்தான்..

இந்த  ராசி கால புருஷனுக்கு  ஒன்பதாவது  ராசி, நெருப்பு ராசி, ஆண் ராசி,  உபய ராசி,  பாதிப்பலனளிக்கும்,  சாத்வீகமான ராசி,  பாசமான ராசி, கடமையான ராசி,  ஆதிக்கமான ராசி,  உண்மையான ராசி,  சித்திக்கும் ராசி,  சீற்றமுள்ள ராசி,  சினம் கொண்ட ராசி, மனித தன்மை ராசி,  இரு  மடிப்புள்ள ராசி,  குறுகிய ராசி,  லட்சியமான ராசி,  உறுதியான ராசி,  பறப்பன ராசி,  உயரமான ராசி.
தொடையைக்  குறிக்கும்  ராசியாகும்.  இந்த  ராசியில்  பிறந்தவர்கள் நல்ல  உயரமும்  சற்று  பருமனான  உடலும்,  கூன்  முதுகும்,  அகன்ற நெற்றியும்,  பெரிய  பற்கள்  உடையவர்கள்.  இவர்களின்  கைகால்கள்  உடம்போடு  சம்பந்தம்  இல்லாது  போல் காட்சியளிக்கலாம்.  அழகிய   கண்கள்யுடையவர்கள்,  சிவந்த  முடியுடையவர்கள்,  எலும்பு,  நரம்பு  சம்பந்தப்பட்ட  வகையில்  சிறுசிறு  கோளாறுகள்  மூட்டுப் பிடிப்பு,  வாயுத்தொல்லை, ஜலதோஷம்,  மூல நோய்  போன்றவைகள்  ஏற்படலாம்.
மத நம்பிக்கையில்  அசைக்க  முடியாத  நம்பிக்கை  உடையவர்கள். மனத்தூய்மை யுடையவர்கள்.  கம்பீரமும்  பிரகாசமும்,  நளினமான  நடையுடையவர்கள்.  சுறுசுறுப்பு  மிக்கவர்,  உணவு  பானங்களில்  விஷயத்தில்  கண்டிப்பாக  கட்டுப்பாடு   உடையவர்கள்.  பெண்களிடம்  மனக்கட்டுப்பாடுடன்  பழக  கூடியவர்கள்.  மற்றவர்களுக்குக்  கெடுதல்  செய்ய  வேண்டிமென்று  கனவிலும்  விரும்ப  மாட்டார்கள்.  தெய்வ  பக்தியும்  தெய்வ  பயமும்  உடையவர்கள்.  எதையும்  எளிதில்  கிரகித்துக் கொள்ளும்  ஆற்றல்  உடையவர்.  முன்கோபக்காரர்,  அவசரக்காரர்,  கோபம்  தணிந்த பின்  உண்மையை  உணரும்  சுபாவம்  உண்டு.  வெளிப்படையாக  எதையும்  பேசக் கூடியவர்  என்பதால்  எந்த  இரகசயமும்  இவரிடம்  தக்காது.
தனக்கு  தெரிந்ததை  மற்றவர்களுக்கு  எடுத்து  சொல்லுவார்,  மற்றவர்களுக்கு  தெரிந்ததை  அறிந்து  கொள்ள  வேண்டும்  என்ற  எண்ணம்  உடையவர்.  இவர்கள்  அன்புக்கு  கட்டுப்பட்டவர்.  நீதி  கருத்துக்களைப்  போதிக்கும்  குணம்  ஆரம்பத்திலேயே  இருக்கும்.  இவர்  குருவை  நாடி  சென்று  அவர்  ஆலோசனைப்படி  செயல்படுவார்.  அதன்  மூலம்  வெற்றி  அடைவார்.   
பிறரைத் தட்டிக்  கொடுப்பதில்,  புகழ்ந்து  பெருமைப்படத்துவதில்  இவர்  திறமைசாலி.
இவர்கள்  வசதியான  குடும்பத்தில்  பிறந்தவர்களாக  இருப்பார்.  எளிமைக்கு  முக்கியத்துவம்  கொடுப்பார்.  தாய்  தந்தை  மீது  பாசம்  வைத்திருப்பார்.  சிறுவயது  முதல்  பணப்புழக்கம்  உடயவர்.  ஆனால்  கையில்   பணம்  நீண்ட  நாட்கள்  தங்காது.  பூர்வீக  சொத்துக்கள்  தங்குவது  அரிது.  பாதி  வயதிற்ககு  மேல்  பகட்டான  வாழ்க்கை  வாழ பிரியப்படுவர்.  பதவிகளும்   இவர்களுக்கு  வந்து  சேரும்.
உணவு பானங்கள்  விஷயத்தில்  கண்டிப்பாக  கட்டுப்பாடு  உடையவர்கள்.  பெண்களிடம்  மனக்கட்டுப்பாட்டுடன்   பழக்கூடியவர்கள்.  மற்றவர்களுக்கு  கெடுதல்  செய்ய  வேண்டுமென்று  கனவிலும்  விரும்பமாட்டார்கள்.  தெய்வ பக்தியும்  தெய்வ தெய்வ பயமும்  உடையவர்கள்.  பழைய  சடங்கு,  சம்பிரதயங்களில்  மிகுந்த  பற்று  வைத்திருப்பதை   வெளிக்காட்டி கொள்ள  மாட்டர்கள்.
தனது  சகோதரர்களில்  மூத்தவர்களிடம்  மிகவும்  பாசமுடையவர்.  இவரது  முன்னேற்றத்திற்கு  மூத்த சகோதரர்  வழி வகுத்துக்  கொடுப்பார்.  இளைய  சகோதரர்கள்  இவரை  எதிரியாக  பார்ப்பார்கள்.  புகழ்,  சுகம்  உடையவர்கள்  விரோதிகளை  வெல்லக்  கூடியவர்.  எதையும்   விரைவில்  கிரகித்துக்  கொள்ளக்  கூடியவர்.
அதிகமாக  உழைத்து  சம்பாதிப்பது  என்பது  பிடிக்காது.  குறைந்த   காலத்தில்  சுலபமான  முறையில்  அதிகம்  சாம்பாதிக்க  வேண்டும் என்ற  எண்ணம்  உடையவர்.  கடன்  வாங்க  நேரிடும்.  வாங்கிய  கடனுக்காக  வருமானத்தைப்  பெருக்கிக்  கொள்ள  முன் வருவர்.  உயர்  கல்வி  கற்பார்.  வெளி பிரதேசங்களில்  பிரயாணம்  செய்ய  விருப்பமுடையவர்.  செல்வத்தை   அனுபவிக்க   கூடியவர்.
இவர்கள் பிறருடைய  குற்றங்களை  எடுத்துக் காட்டி  குறை  சொல்லிக் கொண்டே  இருப்பர்.  அரசியல் ஈடுபாடு  அடிமனதில்  இருக்கும்.  ஆரம்பத்தில்  அடிப்படை  உறுப்பினராக  சேர்ந்து  அதன் பின்  அரசாளும்  யோகம்  வரை வந்து  சேரும்.
அறிவும்  ஆராய்ச்சியும்  மட்டுமே  இவர்களைக்  கவரக்  கூடிய  விஷயங்கள்.  தத்துவம்  விஞ்ஞானம்,  சாஸ்திர  ஆராய்ச்சி  இவற்றில்  ஈடுபட்டு  நிபுணத்துவம்  பெறுவார்கள்.  மிகவும்  சிந்தித்து  பேசுவார்கள்.  அனைவரிடமும்   மரியாதையாக  நடந்துக்  கொள்வார்.  மன ஒறுமைப்பாடு  உடையவர்,  உள்உணர்வு  உடையவராகவும்,  ஆன்மிக  நாட்டம்  உடையவராகவும்  இருப்பார்கள்.
இவர்கள்  தென்முகக்   கடவுள்  வழிபடலாம். நதிக்கரையோரம் இருக்கும் முருகனை வழிபடலாம்