மகரம் ராசியினர் எப்படிப்பட்டவர்கள்..

தொழிலுக்கு அதிபதியான சனியின் ராசிக்காரர்கள்.கடுமையான உழைப்புக்கு சொந்தக்காரர்கள்..இவர்களின் பலவீனம், விரக்தி,சோம்பலுக்கும்,புதிதாக எதையும் முயற்சிக்காமல் விட்டுவிடக்கூடியவர்களாகவும் இருப்பவர்கள்..தாழ்வு மனப்பான்மையை,விரக்தியை கைவிட்டு இவர்கள் முயற்சித்தால் வெற்றி மேல் வெற்றி உண்டாகும்...

சர ராசி என்பதால் ஓரிடத்தில் இருக்க மாட்டார்கள்..அலைந்து திரிந்து காரியம் சாதிப்பவர்கள்...வண்டி வாகனங்களை அதிகம் பயன்படுத்துவர்.சனி ராசி என்பதால் அதிக சோதனைகளை சந்தித்து பக்குவப்பட்ட மனிதர்களாக அனுபவஸ்தர்களாக இருப்பர்...கடுமையாக உழைத்து குறைவான வருமானம் பெற்று சலிப்படைவர்..அதே சமயம் பெரிய பெரிய சாதனைகளை செய்து வரலாற்றில் இடம் பிடித்த மகரம் ராசியினரும் நிறைய உண்டு..உதாரணம் ரஜினிகாந்த்...நிறைய தொழில் அதிபர்களும் இந்த ராசியில் பிறந்தவர்களே..துணிந்து இறங்கினால் மலையையும் புரட்டக்கூடியவர் மகரம் ராசியினர்.


இந்த  ராசி  கால புருஷனுக்கு  பத்தாவது  ராசி,  பெண் ராசி,  நில ராசி,  சர ராசி,  பாதிபலனளிக்கும் ராசி,  சாந்தமான ராசி,  இறுக்கமான ராசி,  பண்பான ராசி,  உண்மையான ராசி,  வேகமான ராசி,  நாற்கால் ராசி,  குருட்டுத்தனமான ராசி,  உழைப்புத்தன்மையுள்ள  ராசி,  குறுகிய ராசி, நடப்பன  ராசி,  குள்ளமான ராசி.

நடுத்தரமான  நல்ல உயரம்,  சாய்ந்த  தோள்,  மெலிந்த கை  கால்கள்,  முட்டிகள்,  சதைப்பற்றற  கை  மெலிந்த  வசிகரமான  பார்வை  கொண்ட  முகம்,  குறைவான  கருத்த  மயிர்- கெட்ட  பற்கள்,  குனிந்த  கூன்  போன்ற  சுபாவம்,  பிரசித்தமான  மூக்கும்  உடையவர்கள்.  உஷ்ணம்  சம்பந்தமான  நோய்கள்,  வயிறு  மற்றும்  கால்களில்  வலித்தொல்லைகள்  வரலாம்.

சுய நலம்  இருக்கும்,  பிடிவாதம்,  பொறாமை,  இரக்கமான,  இரகசியமான வாயாடியான  விடாமுயற்சியுள்ள,  ஆடம்பரமான,  மனையாளுக்கின்பமான,  கவலையற்ற  சந்தோஷ  கரமான  குணங்கள்  உடையவர்கள்.  ஆரோக்கியக்  குறை,  ஏதாவது  இருந்து  கொண்டே  இருக்கும்.
எப்போதும்  ஆடம்பரமான  பேசும்  ஆர்பாட்ட  வீரராக  விளங்கிடுவர்.  எப்போதும்  சந்தேக  நோக்கு உடையாவர்களாகவும்,  கஞ்சன்,  எல்லாம்  கணக்காகவே  இருப்பார்.  தெளிவான  சிந்தனையும்  உடையவர்.  பகல்  பொழுதில்  பிறந்தவர்கள்  வலிமை  உடையவர்கள்.

கூர்மதி  மற்றும் மாறும்  மனநிலை,  சிறந்த அமைப்பாளர்,  எச்சிரிக்கை,  பதட்டம்  ஆசை  பிடிவாதம்  பாதுகாத்தல் காரியத்தை  துவக்கி விட்டால்  முடிக்காமல்  விட  மாட்டார் விட  முயற்சியுடையவர்,  காரியவாதி  என்று  சொல்லாம்.  வீட்டுக்குள்  புலி வெளியே  எலி  மற்றவர்களுடைய  குறைபாடுகளை  தமக்கு  சாதகமாகப்  பயன் படுத்திக் கொள்வதில்  வல்லவர்கள்.  பிடிவாத  குணத்திற்கு  சொந்தக்காரர். 
  பிறரை  உற்சாகப் படுத்துவதோடு,  தாமும்  உற்சாகமாக   இருப்பார்.  பிறர்  ஏதேனும்  ஒன்றைப்  பற்றி  சொல்லும்  போதோ  எனக்கு  இந்த  தகவல்  எப்போதோ  தெரியும்  என்று  பெருமையாகச் சொல்லுவர்.

திரிலோக  சஞ்சாரி.  அலைந்து  கொண்டே இருப்பார்,  காரியம்  சாதிக்கும்  வலிமை யுடையவர்.  எந்த  நிலையிலும்  தாழ்வடையாத  புத்தியும்  சமர்த்தியமும்  உடையவர்.  இவர்கள்  எந்த  சூழ்நிலைக்கும்  தங்களை  சரிப்படுத்திக்  கொள்ளவார்கள்.  வாழ்க்கையில்  முன்னேற  வேண்டும்  என்ற தீவிர  இலட்சியம்  உடையவர்கள்.  அதனால்  வசதி  குறைந்த  நேரத்தில்  கூட  இவர்களுக்கு  தரித்திர  புத்தி  ஏற்படாது. பல முறை போராடி  பிறகு  தான்  வெற்றியை  அடைய  முடியும்.
காரியத்திலேயே  கண்ணாக  இருப்பார்.  சதா  சர்வ  காலமும்  ஏதேனும் ஒரு  வேலையில்  ஈடுபடுவது  இவர்களது  இயற்கை  குணமாகும்.  விடா  முயற்சியும்,  ஒயாத உழைப்பும்  தான் விரைவான  முன்னேற்றத்திற்கு  வழி வகுக்கிறது.  மற்றவர்கள்  கவனம்  தம்மீது  படுபடியாக  இவர்களது  நடை,  உடை,  பாவனைகள்  இருக்கும்.  இவர்கள்  தனது  சுய  தேவைகளை  குறைத்துக்  கொண்டு  மற்றவர்களின்  தேவைகளைப்  பூர்த்தி  செய்வார்கள்.

இவர்களது  முன்னேர்கள்  முறையாக  வாழ்ந்து, செல்வ  செழிப்பு மேலோங்கி  வாழ்ந்திருப்பார்கள்.  இவர்  பிறந்த  போது  செழிப்பு  நிலை  மாறி  பராமரிப்புத்த்ன்மை  குறைந்திருக்கலாம்.  இவர்களது  சாமர்த்தியத்தினாலோ  அல்லது  தந்தை  வழி உறவினர்களின்  ஒற்றுமை  மூலமாகவோ  பாதி  நிலையாவது  அடைந்திருப்பார்கள்.  இவர்களுக்கு  தந்தையின்  அன்பு  குறைவாக  இருக்கும்.  ஆனால்  தாயின்  அன்பு  அதிகமாக  இருக்கும். சிந்தையில்  அமைதி  இருந்தால்  போதுமென்று நினைப்பார்கள்.
பூர்வீக சொத்துக்களில்  உள்ள பிரச்சனைகளை  இளமை காலத்தில்  தீர்த்துக்  கொண்டு,  பழைய  வீட்டையும்  புதுப்பிப்பார்கள்.  புதிய  வீடும்  கட்டி  கட்டி  குடியேறுவார்கள்.  இவர்கள்  கொடுத்த  வாக்கை காப்பாற்றுவதில்  சிரமங்கள்  ஏற்படும்.  ஆகவே  வாக்கு  கொடுக்கும்  முன்  யோசித்துச்  செயல்பட  வேண்டும்.  இவர்கள்  குடும்பத்திலும்  அருகில்  இருப்பவர்களையும்  அனுசரித்துச்  சென்றால்  குழப்பங்களில்  இருந்து விடுபடலாம்.  இவர்கள்  சமய  சந்தர்ப்பத்திற்கு  ஏற்றவாறு  மாற்றிக்  கொள்வர்.  பண  உதவி  பலரிடமும்  இருந்து  கிடைக்கும்.  ஆகவே  அதிலேயே  அக்கறையாக  இருந்தால்  கடனாளியாகி  வட்டி  கட்டும்   நிலை  ஏற்படும்.  ஆகவே  திட்டமிட்டு  செல்வு  செய்வது  கால சிறந்தது.

வியாபார  விஷயங்களில்  நிதானமாகவும்,  கண்ணியமாகவும்  நடந்து  கொள்வார்கள்.  மன உறுதியும்,  எதையும்  தாங்கிக்  கொள்ளும்  சக்தியும்  அற்புதமானவை.  துன்பம்  நேர்ந்த விடத்து  தளராமல்  அசைக்க  முடியாத  உறுதியோடு  நிற்பவர்கள்.  எவ்வளவு  எதிர்ப்புகள்  வந்தாலும்  தம்முடைய  குறிக்கோளை மாற்றிக்  கொள்ள  மாட்டார்கள்.  சொன்னதையே  திருப்பி  திருப்பி  சொல்லி  வற்றுத்துவர்.  பிடிவாத  குணத்தை  மட்டும்  விலக்கிக்  கொண்டால் ,  கடிவாளமில்லாத  குதிரையைப்  போல  மகிழ்ச்சியாக  வாழலாம்.

இவர்களுக்கு  சகோதரர்களால் பிரச்சனைகளும்,  விரையங்களும்  ஏற்படலாம்.  இவர்களுக்கு  தொழில்  படிப்பு  வாய்ப்பு  ஏற்படும்.  ஒரளவு  படித்தவுடன்  உத்தியோக  வாய்பைப்  பெற்று  அதில் இருந்தப்படியே  அஞ்சல்  வழி   கல்விகளை  கற்கும் வாய்ப்பு  அமையும்.  தொழில் முன்னேற்றம்  இருக்கும்.  இவர்கள்  இரும்பு,  இயந்திரம், மண், பூ, கலைத்துறை,  எழுத்துறை,  விவசாயம்,  உணவுப்பொருள்  ஆகிய  துறைகளில்  ஈடுபட்டால்  வெற்றி பெறலாம்.

இவர்கள்  விநாயகப்  பெருமானையும்,  சனீஸ்வரனையும்  விடாது  வழிபட்டு  வர  வேண்டும்.  கண்ணபிரான் பட்த்தை  இல்லத்தில்  வைத்து வழிபட்டால்  இனிய  வாழ்க்கை  அமையும்.

கும்பம் ராசியினர் எப்படிப்பட்டவர்கள்..

கும்பத்தான் சம்பத்தான் என்பார்கள்..ராசியில் கலசம் படம் இருக்கும்...கும்பம் ராசியினர் ஒருவரை அருகில் வைத்துக்கொண்டு சுபகரியம் செய்தால் சீரும் சிறப்பாக அமையும்...ஊர்ல கும்பாபிஷேகம் நடக்குதா..அதுல முக்கியஸ்தர்கள் பட்டியலில் முக்கிய இடம் பிடிப்பவர் கும்ப ராசிக்காரராகத்தான் இருப்பார்..கும்பம் ஸ்திர ராசி என்பதால் இவர் மூலம் செய்யப்படும் காரியம் நிலையான வெற்றி பெறும்..

இந்த ராசி  கால புருஷனுக்கு  பதினொன்றாவது  ராசி,  ஆண் ராசி, ஸ்திர ராசி,  காற்று ராசி,  சாந்தமான ராசி,  பண்பான ராசி,  வெறுமையான ராசி,  வீணான  விரையமான ராசி,  உண்மையான ராசி,  மாசற்ற ராசி,  குரலோசை ராசி,  குருட்டுத்தனமான ராசி,  குறுகிய ராசி,  மூன்றுகால் ராசி,  உயிரற்ற ராசி, குள்ளமான ராசி.

இந்த  ராசிக்காரர்கள்  கறுமை  கலந்த  நிறமுடையவர்கள்.  பருத்த  சாரீரம்   உடையவர்கள்.  சிவந்த  கண்கள்   உடையவர்கள்.  நல்ல  உயரமும்.  மெலிந்த  தேகமும்,  அழகும்  வசீகரமான  முகமும்  உடையவராக  விளங்குவார்கள்.  உயர்ந்த  நெற்றியும்  அகன்ற  கன்ன்ங்களும்,  பெரிய உதடுகளும்  உடையவர்கள்.  இடுப்பும்  பின் பாகமும்  பெரியதாக  இருக்கும்.

நளினமான  நடையுடை  பாவனைகள்  உடையவர்கள்.  நாசூக்காக  நடந்து  கொள்வார்கள்.  இந்த  ராசிக்காரர்கள்  மனோதிடம்  உடையவர்கள்.  எந்த விதமான  கஷ்டத்திற்கும்  அஞ்ச  மாட்டார்கள்.  தனக்கு  தெரிந்த வித்தையால்  மானத்துடனும்  புகழுடனும்  வாழ்வார்கள்.  ஒருவர் செய்த  உபகாரத்தை  மறக்காதவர்கள்.  மிகவும்  மதி நுட்ப  முடையவர்கள்.  வெகு  விரைவில்  நட்புச்  செய்து  கொள்வார்கள்.  சட்டென்று  கோபம்  கொண்டு  ஆக்ரோஷத்துடன்  பொங்கி  விடுவார்கள்.  ஆனால்  இவர்களுடைய  கோபம்  உடனே  தணிந்து  விடும்.  மனத்தூய்மை  உடையவர்கள்.  விஷயங்களை  நன்றாகத்  தெரிந்து  வைத்திருந்தால்  கூட  மற்றவர்கள்  எதிரில்  பேசுவதற்குத்  தயங்குவார்கள்.  இவர்களுடைய  பயந்த  சுபாவம்  கோழைத்தனமாகவும்  கருதப்படலாம். 

இலக்கியத்திறன்  மிக  சிறு வயது  முதலே  வெளிப்படத்  தொடங்கிவிடுகிறது.   ஆனால்  தங்களுடைய  திறமை  என்ன  என்பதை  இவர்களால்  அறிந்து  கொள்ள  முடிவதில்லை.  இவர்களுடைய  அறிவுத்திறன்  கண்டு  மற்றவர்கள்  எடுத்துச் சொன்னால்  ஆச்சிரியப்படுவார்கள்.   நம்பவும்  தயங்குவார்கள்.  நல்ல  கல்வியடையவர்கள்.   கல்வியார்வமுடையவர்.  ஆனால்  மற்றவகளை  ஒன்று  திரட்டும்  சக்தி இவர்களுக்கு   கிடையாது.  தங்களிடம்  நம்பிக்கை  வைத்த  எதிரியைக்  கூட  காட்டிக்  கொடுக்க  மாட்டார்கள்.  அவர்களுடைய  அரிய  குணங்களின்  காரணமாக  ஒரு முறை  தொடர்பு  கொள்பவர்கள்  பிறகு  மறக்கவே  முடியாது.  நல்ல  களத்திரமும்  அமையும்.

இவர்களுக்கு  ஞாபக  சக்தி  அதிகமாக  இருக்கும். பிறரை  எடைப்  போடுவதில்  கெட்டிக்காரர்கள்  வெளிப் புற  தோற்றத்தில்  ஏதும்  அறியதாவர்களை  போல  இருந்தாலும்  எல்லாவற்றையும்  நுட்பமாக  அறிந்து  வைத்துக்  கொண்டு  சமயம்   வரும்  போது  அடை  தயங்காமல்  வெளிப்படுத்துவார்கள்.  இவர்கள்  எதையும்   ஒரு முறைக்கு  இரு முறை  செய்த  பிறகு  தான்  வெற்றிக் கனியை  பிடிப்பார்கள்.  கேலியாகவும்,  கிண்டலாகவும்  பேசுவதில்  இவர்களுக்கு  இணையாரு  மில்லை  நண்பர்களை  உயிருக்கு  உயிராக  நேசிப்பர்.  எந்தவொரு  முக்கியமான  காரியமாக  இருந்தாலும்  அதில்  ஈடுபடுவதற்கு   முன்னால்  அனுபவசாலிகளிடம்  முன்யோசனை  கேட்பர்.

இவர்கள்  பனத்திற்காகவோ,  தரும்  பொருள்க்காகவோ  தங்கள்  கொள்கைகளை  சற்றும்  தளர்த்திக்  கொள்ள  மாட்டார்கள்.  எடுத்த முடிவுகளில்   தாமதம்  ஏற்பட்டாலும் தக்க  முடிவாக  இருக்கும்.  பணீயாளார்கள்  இவர்களிடம்  எவ்வளவு  நல்லபடியாக  நடந்து கொண்டாலும்  நல்ல  பெயர்  வாங்குவது  அரிது.  வீட்டுப்  பொறுப்பை  வாழ்க்கைத்  துணைவியிடம்  ஒப்படைத்துவிட்டு  மற்றவறையே  கவனிப்பர்.  எதிரிகளின்  தொல்லை  இவர்களுக்கு  அதிகமாகவே  இருக்கும்.  இவர்கள்  சுய  முயற்சியில்  குடும்பத்தினரை  பாதுகாக்க  வேண்டும்  என்ற  கொள்கையை  உடையவர்கள்.

இவர்கள்  ஆடம்பரமான  செலவு  செய்து  வாழ வேண்டுமென்று  குறிக்கோள்  கொண்டவர்கள்.  உறவினர்கள்  அதிசயிக்கும்  அளவிற்கு  வாழ்க்கைத்  தரம்  உயர  வேண்டுமென்று  விரும்பவர்.   வாழ்க்கையின்  மையப்  பகுதியில்  வாகன  வசதிகள்  அமையும்.  தாயின்  பாசம்  ஆரம்பரத்தில்  சிறப்பாக  அமையும்.  ஆனால்  பிற் பகுதியில்  எதிர்ப்பார்த்த  அளவுக்கு  இருக்காது.  உடன்  பிறப்பால்  ஒத்துழைபு  கிடைக்கும்.

இவர்களுக்கு  பூர்வீக  சொத்துக்கள்  இருந்தும்  அதை  உபயோகப்படுத்திக்  கொள்ள  இயலாமல்  திண்டாடுவர்.  இவர்கள் தான்  சம்பாதித்தை  தானே  விரயம்  செய்து  விடும்  சூழ்நிலை  உண்டாகும்.  ஆகவே   தான்  சம்பாதித்தை   குடும்பத்தினரின்  பெயரில்  வைத்துக்  கொள்ள  வேண்டும்.  தொழிலும்  குடும்ப  உறுப்பினர்களின்  பெயரில் தொழில்  செய்வது  நலம்.

ஜோதிடம்,  மாந்திரீகம்,  தத்துவம்  போன்றாவற்றிலும்  அவர்களுக்கு  ஆர்வம்   ஏற்படலாம்.  முழுமனதுடன்   ஈடுபட்டால்  நல்ல  திறமை  அடையவும்  முடியும்.  நேர்மையானவர்,  இரக்க  மனப்பான்மை யுடையவர்,  இலாபம்  கருதி  செயல்படுவர்,  சுய நலவாதியாகவும், காரியம்  இருந்தால்  மட்டும்  பேசக்  கூடியவராகவும்  இருப்பார்,

இவர்கள்  பொறியியல் துறை,  மருத்துவத் துறை,  ஆசிரியர் பணி,  வழக்கறிஞர்,  கட்டிட  இட விற்பனைத் துறை,  போன்றவற்றில் ஈடுபட்டால்  வெற்றி  காணலாம்.

இவர்கள்  விநாயகர்  பெருமானையும்,  அனுமனையும்  விடாது  வழிபட்டு  வந்தால்  சிறப்பாக  இருக்கும்.  சனீஸ்வர  சந்நிதியில்  சனி  கவசம்  பாடி  கோரிக்கையை  சொல்லாம்.  ராமர்  பட்டாபிஷேகப் படத்தை  வைத்து  வழிபாடு  செய்யாலாம்.

மீனம் ராசியினர் எப்படிப்பட்டவர்கள்..

மீனம் குருவின் ராசி..இந்த ராசியில் தான் சுக்கிரன் உச்சம் ஆகிறார் அதனால் வசியத்துக்கும் சுகத்துக்கும் குறைவில்லாதவர்கள்...அதனாலேயே பிரச்சினைகளையும் சந்திக்கக்கூடியவர்கள்..நிறைய அன்பும்,அறிவும் உடையவர்கள்....இரண்டாம் வீட்டில் மேசமாக இருப்பதால் பணம் வந்தவுடனே செலவாகிறது...சுபர் அங்கு இருந்தால் கட்டுப்படும்.சுக்கிரன் உச்சம் பெறுவதால் அதிர்ஷ்டம் நிறைந்தவர்கள்..உத்திரட்டாதி,ரேவதி போன்ற சுபகாரியம் செய்ய உத்தமமான நட்சத்திரங்கள் இவர்கள் ராசியில் இருப்பதால் மிகவும் ராசியானவர்கள்,முகவசியம்,கைராசி என புகழடைவார்கள்..

இந்த  ராசி  கால  புருஷனுக்கு  பன்னிரெண்டாவது  ராசி,  ஜல ராசி,  உபய ராசி,  பெண் ராசி,  மெளனமாக ராசி,  இயல்பான ராசி,  பண்பான ராசி,  சிந்திக்கும் ராசி,  மனமாற்றமுள்ள ராசி,  இரட்டை ராசி,  நீண்ட ராசி,  ஊர்வன ராசி,  குள்ளமான ராசி.

இந்த  ராசிக்காரர்கள்  சுமாரான  உயரமும்,  நல்ல  நிறமும்,  சற்று  பருமனான  தேகம் உடையவர்களாக  இருப்பார்கள்.  அழகான  தோற்றாம்  உடையவர்.  விசாலமான  கண்களை  உடையவர்கள்.  இவர்களுக்கு  கண்  பார்வைக்  கோளாறுகள்  மற்றும்  கட்டிகள்  போன்றவைகள்  வரலாம்.  சுக  போகங்களில்  அதிக  அளவில்  ஈடுபாடு  காரணமாக  நரம்பு  தளர்ச்சிகள்  சிலருக்கு  வரலாம்.
இவர்கள்  நம்பிக்கைக்கு  பாத்திரமாக  விளங்குவார்கள்,  எதையும்  திட்டமிட்டு  ஆற,  அமர  யோசித்துச்  செய்வார்கள்.  ஆகவே  தான்  எடுத்த  காரியத்தை  எளிதில்  கச்சிதமாக  முடிக்கும்  வாய்ப்பு  அமையும்.  தன்னடகத்திற்கு  சொந்தக்காரர்கள்.  

 மறதி என்பது  இவர்களிடம் எள்ளளவும்  இருக்காது.  பேச்சைக் காட்டிலும்  செயலுக்கு  முக்கியத்துவம்  அளிப்பார்கள்.  சிக்கனம்  இவர்களது  உடன்  பிற்ப்பாக  இருக்கும்.  பொது  பணத்தை  கையாளுவதில்  அதிகமான  கவனம்  செலுத்துவார்கள்.  நாணய  பாதிப்பு  ஏற்படாமல்  நடந்து  கொள்ளுவதில்  கெட்டிக்காரர்.  செலவு  செய்யும்  முன்  நியாமான  செலவா?  என  யோசித்து  செயல் படுவார்கள்.பண வசதி  தேவைக்கேற்ற  விதத்தில்  தேவைக்கேற்ற  நேரத்தில்  வந்து  கொண்டேயிருக்கும்.
.                   
பொது  பதவிகளுக்கு  இவர்  பெயர்  இடம்  பெறு.  பொதுவாக  சண்டைக்கு  போக  மாட்டார்  ஆனால்  வந்த  சண்டையை  விட  மாட்டார்.  உடல்  உழைப்பு  இல்லாத  தொழிலில்  ஈடுபடுவார்.  தீர்க்க   யாத்திரைகளிலும்  பயணங்களிலும்  அதிகம்  பிரியம்  உடையவர்.  குழந்தைகளை  அதிகம்    நேசிக்கும்  குணம்  உடையவர்.  மற்றாவர்களுக்கு  நல்ல  அறிவுரைகளை  சொல்லுவதில்  வல்லவர்.  பிறரை  தன் வசமாக்கிக்  கொள்வதில்  கெட்டிக்காரர்கள்.  விட்டுக்  கொடுப்பது  போல்  செயல் பட்டு  பிறகு  எதிரிகளை  தன்  வழிக்கே  கொண்டு  வருவார்.

சத்துவ  குணம்  உடையவர்  தத்துவ  ஞானம்,  சன்மார்க்க  சிந்தனை  உயர்ந்த  ஒழுக்கம்,  உண்மையானவர்.   மத நம்பிக்கை.  தெய்வ பக்தி  உடையவர்.  ஆன்மீக  ஆற்றல்  உடையவர்.  உள்ளுணர்வால்  அறியப்படுவர்.  சுத்தமாகவும்   தூய  ஆடைகளை  அணியக்  கூடுயவர்.  வாழ்க்கையை  விளையாட்டாக  எடுத்துக்  கொள்ளக்  கூடியவர். மிகவும்  தயாள  குணமுடையவர்.  பின்னால்  வரப் போவதை  முன்பாகவே  நிதானித்து  அறியக் கூடியவர்.  சில  சமயங்களில்  மூர்க்க  குணம்  உடையவர். 
தைரியசாலி,  செல்வம்  அதிகமாக  இருக்கும்.  பந்துக்களிடம்  பாசம்  உடையவர். தன்  குடும்ப  உறுப்பினர்களின்  சொற்களுக்கு  மதிப்பும்  மரியதையும் அளிப்பார்.  குடும்ப  பெருமையைக்  காப்பாற்றும்   தன்மை  உண்டு.  எல்லாக்  காரியங்களிலும்  தான்  முன்பாக  இருக்கு  வேண்டும்  என்று  விரைந்து  செல்பவர்.   இவருக்கு  உடன்  பிறப்புகள்  அதிகம்  இருப்பார்கள்.  உடன்   பிறப்புகளால்  இவருக்கு   நல்ல  முன்னேற்றம் கிடைக்கும்.  பெண்  சகோதிரிகள்  இவருக்கு  தக்க  சமயத்தில்  கை கொடுத்து  உதவுவார்கள்.

சகுனம்  பார்ப்பது  போன்ற  மூட  நம்பிக்கை  உடையவர்களாயும்  இருப்பார்கள்.  பழைய  கோட்பாடுகள்,  நம்பிக்கைகள்  எல்லாவற்றையும்   மிக  உறுதியாக  பற்றிக்  கொண்டு  இருப்பார்கள்.  வேறு  எதை  வேண்டுமானலும்    விட்டு  விடுவார்களே  தவிர  பழமைப்  பற்றை  மாத்திரம்   விட மாட்டார்.

இவர்களுக்கு   திருமண  வாழ்க்கைப்  பிறகு  செல்வ  நிலை  மேலோங்குவதோடு  செல்வாக்கும்  உயரும்.   மாமன்,  மைத்துனர்  வழி  ஒத்துழைப்பில்   மகத்தான  பலனைக்  காண்பர்.  இவருக்கு  தாயின்  ஆதரவு  அதிகம்  இருக்கும்.  குடும்பத்தில்  செல்லப்  பிள்ளையாக  வளருவர்.  அவர்  வளர,  வளர  தாயின்  உடல்  நலத்தில்  குறைபாடுகள்  வந்து  கொண்டே  இருக்கும்.  கவலையற்ற  வாழ்க்கை  தான்  லட்சியமாக  இருக்கும்.

சிறு  வயதில்  இருந்தே  நவீன  வசதி  களுடன்  கூடிய  அழகிய  வீடு  கட்ட   வேண்டுமென்று  ஆர்வம்  இருக்கும்.  மற்றவர்கள்  ஆச்சர்யப்படும்   விதமான   வாகன  வசதிகள்   வைத்துக்  கொள்ள  ஆசைப்படுவார்.  வீடு,  இடம்,  தோட்டம்  போன்றவைகளை  வாங்கி  அதன்  மூலம்  செல்வத்தை  சேமிப்பார். புகழ், செல்வாக்கு, அந்தஸ்து, கவுரவம் அனைத்தும் கடைசி வரை  இருக்கும்.  இவர்களுக்கு  அரசு  வழி  தொல்லைகள்  உருவாகும்.  அடுத்தவர்களுக்கா  வாங்கி  கொடுத்த  தொகைக்காக  பிரச்சினைகள்  உருவாகும்.

ஒரளவு  பிடிவாத  குணம்  உடையவர்கள்.  ஆனாலும்  மற்றவர்கள்  ஏதாவது  சொல்லி  விடுவார்களோ  என  நினைப்பார்கள்.   எதைப்பற்றியும்   அவராகவே  ஒரு முடிவைச்  செய்துக்  கொண்டு  அப்படித்தான்  நடக்கும்  என்ற்  நினைத்துக்  கொண்டு  செயல்படுவார்கள்.  எப்போழுதும்  தங்களுடைய  கல்வி  மற்றும்  திறமைகள்  பற்றி  ஒரு  அசாதரணமாக  தன்னம்பிகை  இருக்கும்.  ஆனால்  மிகவும்  உண்மையான  நண்பர்களாக  இருப்பாகள்.  வாசனை  திரவியங்கள்  மேல்  ஆசையுடையவர்.  போஜனப்  பிரியர்.

இவர்கள்  மிகப் பெரிய  அதிகாரியாகவும்,  ஆராய்ச்சியாளராகவும்,  போதிக்கக்   கூடியவராகவும்,   கல்வித்  துறை  மற்றும்  வழக்கறிஞர்  துறையைத்  தேர்ந்தெடுக்கக்  கூடியவர்களாகவும்   இருப்பார்கள்.  அரசு  வழி  அலுவலர்கள்,  நிதி  சேமிப்பு  நிலையங்கள்,  கணக்கு  பார்க்கும்  பணிகள்,  பேச்சாளர்கள்  போன்ற  துறைகளிலும்  தேர்ந்தெடுத்து  அதில்  ஈடுபட்டால்  வெற்றி   காணலாம்.

இவர்களுக்கு  இயற்கையிலேயே  குருவருளும்,  திருவருளும்  துணையாக  இருக்கும்.  இருப்பினும்  வியாழக்கிழமை  தோறும்  விநாயக  பெருமானையும்,  குரு  தெட்சிணாமூர்த்தியையும்  வழிபட  வேண்டும்.  குரு  கவசம்  படி  வழி பட்டால்  குறைகள்  நிவர்த்தியாகும். 

ஜாதகத்தில் சூரியன் தரும் பலன்கள்

சூரியன்

கிரகங்களில்   முதன்மையானவர்   சூரியன்.   சூரியனை  மையமாக   வைத்துக்  கொண்டு              அனைத்துக்   கிரங்களும்   சுற்றுகிறது.   சூரியன்   தலைமை    தாங்கும்          தகுதியைத்   தருகிறார்.  ஆண்மையைத்     தருகிறார்.  நிர்வாகத்    திறமை   அளிக்கிறார்.   சூரிய  ஒளி  அனைவருக்கும்   பாகுபாடு    இன்றி   அளிப்பது   போல்   எல்லோரையும்   சமமாக   நினைப்பவர்,    தயாள   தன்மை   உடையவர்.      பேதம்   கிடையாது,   சாதி  பாகுபாடு   கிடையாது.   எல்லோரையும்   சரி சமமாக     நடத்துவர்.     இரகசியம்   கிடையாது.   வெளிப்படையாக   பேசுவர்.   வள்ளல்  தன்மை  உடையவர்.   இல்லை  என்று   சொல்லாத   தன்மை   பேரும்  புகழும்  உடையவர்.

சூரியனின்    கதிர்களால்   தழுவாத   உயிர்   இனங்கள்    இல்லை.   சூரியன்   ஒளிக்கு   அதிபதி,    சூரியனிடமிருந்து   வெளிப்படும்  கிரணங்களும்,  குருவிடமிருந்து   வெளிப்படும்  மீத்தேன் என்ற   ஒளியும்  கலந்து   உலகில்   ஜீவ   ராசிகளின்   உற்பத்திக்குக்    காரணமாகின்றன.
சூரிய  ஒளியின்றி  எந்த  கரு [ உயிர்] தோன்ற   முடியாது,    உயிர்   வாழ   முடியாது.   அதனால்  சூரியனை  பித்ரு காரகன் என்று   பெயர் பெறுகிறார்.

சூரியன்   தனது   ஈர்ப்பு   சக்தியால்  மற்ற  கிரகங்கள்  ஒன்றோடு  ஒன்று  மோதிக்  கொள்ளாமல்   காப்பாற்றுகிறது.   சூரியன்   உஷ்ணத்திற்கு   அதிபதி,   உஷ்ணம்   இல்லையேல்   உயிர்   தத்துவம்  இல்லை.   சூரியன்   பிராணனைக்   கொடுக்கக்    கூடியவன்.     அதனால் தான்  சூரியன்  ஆத்மாகரகன்  என்று  அழைக்கப்படுகிறார்.

சூரியனின்   உஷ்ண    கதிர்களால்   தழுவாத    எந்த   உயிர்  இனங்களும் இல்லை.    வெளிச்சம்   [சூரியன்]   இருந்தால்தான்   கண்களால்   பார்க்க   முடியும் . ஆகவே   சூரியன்   வலது  கண்.    மனித  உடலை    தாங்கி    பிடிப்பது  எலும்பு,   சூரியன்   எலும்புக்கு  அதிபதி   சூரியனின்  ஆதிக்கம்  உடையவருக்கு    முகஸ்துதி   பிடிக்காது.  எளிமையான    தோற்றம்  உடையவ்ர்.   நம்பிக்கைக்குரியவர்.    வாக்கு   தவறாதவர்.     தந்தை    மகனுக்கு   உதவி   செய்வது   போல்   வாக்கு   கொடுத்தவருக்கு   உதவி   செய்பவர்.

அரசன்   [சூரியன்]    தன்  தளபதியான    செவ்வாயின்   வீட்டில்   உச்சம்   பெறுகிறார்.   சூரியன்   ஒருவர்     ஜெனன   ஜாதகத்தில்     நீசம்  பெற்றிருந்தால்,     அந்த    ஜாதகர்  எவ்வளவு      பாரம்பரிய   செல்வம்,   செல்வாக்கு,  அதிகார   பலம்   பெற்று    இருந்தாலும்   கால போக்கில்   குறைந்து   விடும்.

ஒருவரின்   ஜெனன  ஜாதகத்தில்   மேசத்தில்   முதல்  10   பாகைக்குள் சூரியன்  உச்சம்   பெற்று   இருந்து       ,குரு ,செவ்வாய் பார்வை பெற்றிருந்தால் அந்த  ஜாதகர்  ஒரு  நிறுவனத்தில்   அல்லது  ஒரு  இயக்கத்தில்   தலைவராக இருப்பார்.  மேலும்  அவருக்கு  பேரும்  புகழும்  கிட்டும்.  ஜாதகருக்கு  ஆன்மீக   ஞானம்   உண்டாகும்.
  
ஜாதகர்   தனி   சிறப்புடையவராக   திகழ்வார்.   ஜாதகரிடம்   துணிச்சல்  அதிகமாக  இருக்கும்   கண்டிப்புடன்    நடந்துக்  கொள்வார்.   அடித்துப்   பேசுவார்.   ஏராளமான   செல்வம்   இருக்கும்.   சுகமான   பிராயணம்,   இராஜ  வாழ்வு  அமையும்.  வியாபார    வெற்றி,  வேலையில்   அதிக   ஈடுபாடு,   மலைப்பகுதி   மற்றும்   காட்டுப்பகுதியில்    சுற்ற   நேரிடும். 
  
சூரியன்   உஷ்ணமயமானவர்.   ஆகவே       ஜாதகருக்கு     உஷ்ணாதிக்கத்தால்   பல  உபாதைகள்   வரும்.   ஆகவே   இதில்   எச்சரிக்கையாக   இருப்பது   நல்லது.   ஒருவருக்கு  ஆன்ம   பலம்  அளிப்பவர்   இவர்.      ஒரு  ஆணின்    ஜெனன   ஜாதகத்தில்    சூரியன்   பலம்    பெற்று   இருந்தால்  அந்த   ஜாதருக்கு        ஆண்மை   ஆற்றலில்    அவர்  சிறந்து   விளங்குவார். ஒரு  பெண்   ஜாதகத்தில்   சூரியன்   பலம்  பெற்றிருந்தால்      அந்த   ஜாதகியிடம்   ஆகர்ஷன   சக்தி    ஓங்கி  இருக்கும்.   அவள்   சிறந்த   கற்பு டையவளாகத்   திகழ்வாள்.

மேசத்தில்   10  பாகை   முதல் 30   பாகைக்குள்  சூரியன்  இருந்தால்  முதல்   10  பாகைக்குள்    அளிக்கக்   கூடிய    அளவுக்கு    நற்பலன்கள்    அளிக்கமாட்டார்.

சூரியன்   முக்குணம்  உடையவர்.  அதாவது  பிரம்மா,  விஷ்ணு,  மகேஸ்வரன்  ஆவார்.   சூரியனின்    ஆட்சி  வீடான   சிம்மத்திற்கு   7வது  ராசியான     கும்பம்.  இந்த   ராசி   சூரியனின்    மனைவியான  சாயா  தேவி  வீடு.  இந்த  ராசியில்   தான்    சூரியனின்   மகன்  சனி  பிறந்தார்.    [இந்த   ராசியின்  சின்னம்  குடமாகும்.  குட்த்தின்   உள்ளே    நிழல்  [சாயா தேவி]   உள்ளது.  பகல்  பொழுது   சூரிய  ஓளி   குடத்தில் விழுவதால்     சாயா  தேவி   வலு  பெற்றதால்   சனி  பிறந்தார்.   சனிக்கு   இந்த   ராசியில்   பலம்  அதிகம்   சனிக்கு   மூலதிரிகோன   ராசியாகும்]

அரசுக்குரிய    கிரகமான   சூரியன்   எப்போதும்   தன்னுடன்   அறிவுக்காரன்   புதனையும்,   செல்வத்திற்கு   காரகனான  சுக்ரனை  அருகில்  வைத்திருக்கிறார்.   மாசி,  பங்குனி,   சித்திரை,  வைகாசி,   ஆகிய  மாதங்களில்    சூரியனுடன்   புதன்  கூடி  இருப்பார். ஆனி,  ஆடி,  ஆவணி,  பூராட்டாசி  ஆகிய    நான்கு   மாதங்களில்    சூரியனுக்கு    முன்  ராசியில்    புதன்   செல்வார்.  ஐப்பசி,  மார்கழி,  கார்த்திகை,  தை  ஆகிய   நான்கு   மாதங்களில் சூரியனுக்கு பின்   செல்வார்.

சூரியன்   ஒரு  நாளில்  செல்லும்   தூரம்  58  கலை, 8 விகலை  ஆகும்.  சூரியன்  ஒரு  நட்சதிர  பாகத்தைக்   கடக்கும்   காலம்  3  நாள்   22  நாளிகை   55  விநாடி   ஆகும்.  புதிதாக    பிரவேசித்த   ராசியில்   சூரியன்  பூரண   பலன்  தர  எடுத்துக்  கொள்ளும்    கால  அளவு     5  நாட்கள்.

சூரியனைக்  கொண்டு  ஒருவரின்   தந்தையைப்  பற்றியும்,   ஜாதருடைய     செயல்   திறன்   தொழில்  அல்லது   வியாபாரம்   அல்லது   உத்தியோகம்   இவைகளை  அறிய  முடிகிறது.  அரசு   வழியில் நல்ல  பொருளீட்டும்  யோகமும்.  தலைமை   பதவி   வகிக்கும்   தகுதி   அமையும்.   நல்ல  நோக்கு  உடையவர்.   ஆழந்த   கருத்துடையவராகவும்,  எவருக்கும்  அடங்கிப்  போகும்   இயல்பு இல்லாதவராகவும்   இருப்பார்கள். 

சூரியன்  அக்கினிக்குரியவர்,   சூரியனின்   நிறம்  இளம்     சிவப்பு  அதாவது    ஆரஞ்சு    நிறம்,  கிழக்கு   திசைக்குரியவர்.  பகல்   நேரத்தை  ஆள்பவர்,  கோதுமைப்  பிரியர்.  எருக்கு   சமித்து  மூலம்   திருப்பதிப்படுபவர்,   செந்தாமரையை  மலர  வைப்பவர்,     மாணிக்க    கல்லுக்குரியவர்,  செம்பு   உலோகத்தைப்  பிரதிப்பலிப்பவர்.   செம்பட்டு  உடையால்  அலங்கரிக்  கப்படுகிறார்.  சிவப்பு   நீலப்  பொருட்களால்  நலம்   அளிப்பவர்.  சத்தியர்,  வீர   புருஷர்,   ஞாயிற்றுக்  கிழமைக்குரியவர். 
   
இத்தனைக்கும்   சிறப்பு      முத்திரையாக  ருத்ரனை  அதிதேவதையாக்  கொண்டவர்.   சூரியனின்  அனுகிரகத்தைப்  பெற   வேண்டுமானால்   அவருக்குரிய    மேலே   குறிப்பிட்ட   பொருட்களைக்   கொண்டு     சிரத்தையுடனும்,  முழு   ஈடுபாடும்,   நம்பிக்கையும்     கொண்டு  ஆராதிக்க  வேண்டும்.   மேலும்   அதிதேவதையான   ருத்ரனையும்    வழிபட   வேண்டும்.  இவ்வாறு    செய்தால்   சூரிய  பலனை  பெறலாம்.  சூரியனுடைய    அதிகாரத்துக்குட்பட்டவை  அனைத்திலும்  அனுகூலம்  கிடைக்கும்.

ஜாதகத்தில் சந்திரன் தரும் பலன்கள்

சந்திரன்

சூரியனின்   ஒளி   கிரணங்களை  பெற்று   பிரகாசிப்பவர்   சந்திரன்  ஆவார்.  இவர்  இரவுக்கு  அதிபதியாகிறார்.  உயிர்  சக்தியாக  இயங்க   சூரியன்  எவ்வளவு   முக்கியமோ   அது  போல்   உடலுக்கு   சந்திரன்   அவசியம்  ஆகிறார்.   இவர்   மதிகாரகன்   ஆகிறார்.   ஞானம்   பெறவும்   இவர்  தேவை,   சந்திரன்    மாத்ருகாரன்.   சந்திரன்   சலன  புத்தி.  சந்திரனுக்கு  மூன்று  விதமான     சலனம்  உண்டு.  ஒன்று    தன்னைத்தானே    சுற்றிக்  கொள்கிறது.   இரண்டாவது    சுற்றுவதுடன்    பூமியையும்   சுற்றுகிறது.   மூன்றாவது  பூமியோடு   சூரியனையும்   சுற்றுகிறது.   கை  குழந்தையுடைய   தாய்    மனது   எப்போதும்   குழந்தையைச்    சுற்றிக்   கொண்டு   இருப்பது  போல்   சந்திரன்   பூமியையும்  சூரியனையும்   சுற்றிக்  கொண்டே  இருக்கும். 

மனதுக்கும்   சந்திரனுக்கும்  ஒரு  தொடர்பு   உண்டு.  சந்திரன்  வளர்ந்து     தேயும்   தன்மையுடையவர்.  ஆகவே    மனிதனின்    மன்நிலையிலும்   அடிக்கடி   மாற்றம்   ஏற்படுகிறது. 
  
பெளர்ணமி   காலங்களில்    கடலில்   மாற்றங்கள்    ஏற்படுகிறது.   பெளர்ணமி  மற்றும்  அமாவாசை   காலங்களில்  அறுவை  சிகிச்சை  செய்யக்  கூடாது.   பெளர்ணமியில்  ரத்தம்  அதிகமாகவும்.  அமாவாசையில்  ரத்தம்   குறைந்தும் போகும்.   அமாவாசை  மற்றும்  பெளர்ணமி   காலங்களில்  தியானம்  செய்வது  சிறப்பானது.

சந்திரன் மனம்,  ஒவ்வொரு  மனிதனிடம்   பெண்  தன்மை  உள்ளது.  ஒவ்வொரு   பெண்ணிடமும்  ஆண்  தன்மை  உள்ளது.   ஒரு  மனிதனுக்கு   பின்னால்  ஒரு  பெண்  உள்ளாள். மனிதனின்  மனம்  சுத்தமாக  [சந்திரன்]  இருக்கிறது. ஆனால்  சந்திரனுக்கு   கிடைக்கும்.கிரகத்தின்   சேர்க்கை   பார்வைக்கு  ஏற்ப   மன  நிலை   மாறுதல்  அடைகிறது.   உதாரணமாக   நீர் [சந்திரன்] சுத்தமாகவும்   நிறமில்லாமலும்,   வாசனையற்ற   நிலையிலும்,    சுவையற்ற   நிலையிலும்  இருக்கிறது.    நீருடன்   சேரும்    கெமிகல்   மினரல்  ஏற்ப   அதன்  நிறம்,  வாசனை,  சுவை  எல்லாம்  ஏற்படுகிறது.  ஆனால்  எந்த   ஒரு  செயலும்   சந்திரனின்றி       நடைபெறாது.  ஆகவே   சந்திரன்  உடல்காரகன்    என  அழைக்கப்படுகிறார்.  உடல்  அழகு  உடல்  கவர்ச்சி  அளிக்கிறார்.   வட்டமான   முகம்  அனைவரையும்   கவரும்    தன்மையை   அளிக்கிறார்.   ஒருவர்     உடல்   இன்றி     எந்த  செயலும்   செய்ய  முடியாது.

  இடப்பெயர்ச்சி,  இடமாற்றம்,  பிராயணம்  போன்றவைகள்    நடை  பெற   சந்திரன்   காரணம்  ஆகிறார்.ஜெனன   ஜாதகத்தில்   சந்திரன்    ரிஷிபத்தில்  முதல்  3  பாகைகள்  இருந்து  ,   நட்பு   கிரகங்களின்   தொடர்பும்,  பகை   கிரகங்களின்  தொடர்பு  இன்றி    இருந்தால்  அந்த  ஜாதகரின்  சரீர ஆரோகியத்திற்கு    உத்திரவாதம்   உண்டு.  முக  வசீகரம்,  இரத்த  புஷ்டி  அளிப்பவர்.  உள்ளத்தின்   உறுதிக்கும்   வாய்ப்புண்டு.   மன வளம்,  பொருளாதார  நிலையில்   உயர்வும்  கிட்டும்.   
பார்வையில்  கவர்ச்சியும்,  பெருந்தன்மையும், பெரும்  புகழ்,   பெரு வாழ்வு,  பேரானந்தம்,   பேருள்ளம், என  மகிழ   வைப்பார்,   தாயின்  நல்வாழ்த்துக்கள்  கிடைக்கும்  ,சயன்   சுகம்  உண்டு.

சந்திரனை  மையமாகக்   கொண்டு   திதி,  கரணம்,  யோகம்,   திதிசூன்யம்  போன்ற  அமைப்புகள்  ஏற்படுகிறது.   சந்திரனைக்  கொண்டு  விரதங்கள்  அனுசரிப்பதும்,  பண்டிகைகள்  கொண்டாதலும்   கோயில்களில்   திருவிழாக்கள்   உற்சவங்கள்,  சுப   காரியங்கள்   நிர்ணயிக்கப்படுகிறது.    திருமணங்கள்  நிர்ணயம்   செய்வதும்    சந்திரனின்   ஓட்டத்தை  வைத்து   முடிவு   செய்யப்படுகிறது.

moon herbals சந்திரனின்  ஒளியில்  மூலிகைகள்   வளர்கிறது.   சந்திரன்  வெண்மை  நிறம்,   வெண்மை   நிறப்  பொருட்கள்   அனைத்தும்   சந்திரன்    காரகன் ஆகிறார்.  இரவில்   சந்திரனைக்  கண்டு   மயங்காதவர்கள் பூமியில்     யாராவது உண்டா?  குளிர்ச்சிக்கு அதிபதியான சந்திரனின் நிலவொளி  எவ்வளவு   குளிர்ச்சியாய்   இருக்கிறது.   மனதில்  மகிழ்ச்சியும்  அளிக்கிறது.  தாம்பத்திய  சுகத்திற்கு  துண்டும்   காலமாகவும்  இருக்கிறது.

ஜோதிட  உலகத்தைப்  பொறுத்த வரையில்   சந்திரன்   தாய் காரகம்  பெறுகிறார்.  தாயிடமிருந்து   தான்  உடல்  தோன்றுகிறது.   ஆகவே  சந்திரன்   உடல் காரகன்  ஆகிறார்.   ஜெனன   ஜாதகத்தில்   சந்திரன்  நிலையைப் பொறுத்து தான்   சரீரம்  [உடல்]  பருத்தும்,   இளைத்தும்   காணப்படும்.   ஒருவர்   ஜெனன     ஜாதகத்தில்   சந்திரன்   வலு  பெற்று   அமைந்திருந்தால்  அந்த  ஜாதகர்  தனது  மதியால்   அனைத்தையும்   வெல்லக்   கூடிய  நிலை  உண்டாகும்.

சூரியன்   கால  புருஷனுக்கு   முதல்   வீட்டில்  [மேசத்தில்]   உச்சம்  பெறுவது  போல்  சந்திரன்    கால   புருஷனுக்கு   இரண்டாம்  வீட்டில் [ரிஷிபத்தில்]  உச்சம்  பெறுகிறார்.

சந்திரன் பலம் இழந்தவர்கள் முதியோர் இல்லத்தில் இருக்கும் முதிய்வர்களுக்கு சேவை செய்வதன் மூலமும் தாய்க்கு மனம் குளிர பார்த்துக்கொள்வதன் மூலமும்,திருப்பதி வருடம் ஒருமுறை சென்று நடந்து மலை ஏறி ஏழுமலையானை தரிசித்து  சந்திரனின் அருளை பெறலாம்..