நவாம்ச பலன்கள் – துலாம்


சாமர்த்தியம் மிக்கவர். முதலீடு செய்ய யோசிப்பவர். நண்பர்களும், உறவினர்களும் இவரதுயோசனையை கேட்டு கிடுகிடுவென முன்னேற்றம் அடைவர். அப்படி முன்னேறியவர்கள் இவரிடம் நன்றி பாராட்ட மாட்டார்கள். மாறாக இவருக்கே புத்தி சொல்வார்கள். பிறர் தந்த துன்பங்களை மறந்து சமாதானமாக இருக்க விரும்புவர். ஆனால் இந்த மறப்போம், மன்னிப்போம் கொள்கையால் பிரயோஜனம் இருக்காது.

சாமர்த்தியமாக சம்பாதித்து விடுவர். சுகபோகத்திற்கே செலவழிப்பவர். நல்ல எடுப்பான தோற்றம் இருக்கும். ஆடம்பரமான துணிமணிகள், அலங்கார பொருட்கள், வாசனை திரவியங்கள் என்று உயர்ந்த பொருள்களை அதிக விலை கொடுத்து வாங்குவார். கொஞ்ச நாளில் தூர எறிந்துவிடுவார்.

இவரது எளிய தோற்றமே காண்போரை வசீகரிக்கும். மலர்ந்த முகத்துடன் காட்சி அளிப்பதும் இவரது இயல்பு. மேற்கொண்ட பொறுப்பை அக்கறையுடன் நிறைவேற்றுவார். அடுத்தவர் தலையீட்டை அனுமதிக்க மாட்டார். சராசரி நபராக இருக்க மாட்டார். தனித்தன்மை இருக்கும். இவரது பாணியைபிறர் கடைபிடிப்பார்கள் என்று வேண்டுமானால் கூறலாம்.

இவரது சாமர்த்தியம் பிறருக்கு பயன்படும் என்பதால் ஆதாயமும், ஆலோசனையும் இணைந்த கன்சல்டிங் தொழில் துவங்கலாம்.

திருமணத்திற்கு பிறகு சம்பாத்தியம் அதிகரிக்கும், இருந்தாலும் செலவும் கூடி வரும். மனைவி வழி உறவில் அன்பும் ஆதரவும் உண்டு. மனைவிக்கு சுதந்திரம் குறைவே. சபலபுத்தி உடையவர். பெண்கள் வட்டாரத்தில் பேசப்படுவார். இருதாரமோ வெளியில் சிநேகிதமோ ஏற்படும். மனைவிக்கு கர்ப்ப சம்மந்தமான நோய்கள் ஏற்படும்.

துலாம் நவாம்ச பெண்கள் வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கணவன், பெற்றோர் தவிர பிற ஆடவர்களால் ஆபத்தே அதிகம். பலத்காரதிற்கும், ஏமாற்றதிற்கும் ஆளாக நேரும். ஆண்களுடன் தனித்து இருபதும், அதிகம் பேசுவதும் தவறு. அது துயரத்தில் வீழ்த்தி விடும்.

தகபனாருக்கு ஆயள் தீர்க்கம். ஜாதகருக்கு பாரமாக இருக்க மாட்டார். கல்வி வளர்ச்சியில் அக்கறை காட்டுவார். தாயாரின் பற்றுதல் குறைவே. ஒரு சிலருக்கு கல்வி முடியும் முன்னே தாயாரின் காலம் முடிந்து விடும்.

நவாம்சத்தில் துலாம் சூரியன்

எதிர்காலத்தை கணித்து வரும்முன் செயல்படுவார். தனது விருப்பபடியே வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்.

இவரது விசித்திரமான போக்கு நண்பர்களையும் உறவினர்களையும் விலகும். ஆபதுக்குதவாத நண்பர்களை பெற்றிருப்பார்.

பணம் சம்பாதிக்க சிரமம் தான். தவறு செய்யும் தைரியம் இருக்காது. நீதி, நேர்மை, நியாயம் என்று விஸ்தாரமாக பேசுவார். ஆசைகளை மறைக்க தெரிந்தவர்.

நவாம்சத்தில் துலாம் சந்திரன்

பழகுவதற்கு ஏற்றவர். சூழ்நிலைக்கு தகுந்தபடி தனது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வார். யாரையும் எளிதில் நம்பி விடுவார். அதிலும் புகழ்ச்சிக்கு ஆசைபடுவது அதிகம். மற்றவர்களை கேட்டே எதையும் செய்வார். யாரையாவது நம்பி விட்டால் என்ன பிரச்சனை வந்தாலும் அந்நபரை விட்டுக் கொடுக்க மாட்டார்.

நிர்வகிக்கும் திறமையுள்ள மனைவி அமைந்தால் தான் குடும்பம் சீராக இருக்கும். இவரது போக்கில் குடும்பத்தை விட்டு விட கூடாது. மற்றபடி பலரால் அறியப்பட்ட மனிதராக இருப்பார்.பொழுது போக்கு துறைகளிலும், சின்ன திரை, பெரிய திரைகளிலும் இவரை காணமுடியும்.

நவாம்சத்தில் துலாம் செவ்வாய்

பெண்களின் பெருந்தொண்டர் மலருக்கு மலர் தாவுவார். சிறுவயதிலேயே பெண்களால் கவரப்படுவார். காதலில் பிடிவாதமாக இருந்து கைபிடிப்பார். கொஞ்ச நாளில் அலுத்துப் பொய் வேறு பெண்ணையும் சேர்த்துக் கொள்வார். முற்றும் துறந்த முனிவர் போல்; வேதாந்தம் பேசுவார். எல்லாம் வெளிவேசமே.

ஒரு முறையாவது காவல் துறையினரிடம் மாட்டுவார். தலைமறைவாகவோ, பிணையிலோ சில காலம் இருப்பார். ஊர் உலகம் தன்னைப் பற்றி பேசும் படி நடந்து கொள்வார்.

நவாம்சத்தில் துலாம் புதன்

சிறந்த கல்வி ஏற்பாடும். அனைவரும் நன்றாக படிக்க வேண்டும் என்பார். பள்ளி செல்லும் குழந்தைகளிடம் வாஞ்சையாக இருப்பார்.நன்கு படித்த பெண்ணையே திருமணம் செய்ய ஆசை படுவார். வசதி வாய்ப்பு, அந்தஸ்து பார்க்க மாட்டார். ஜாதகருக்கு திருமணம் பல இடர்பாடுகளுகிடையே நடக்கும். நண்பர்கள்துணை வரமாட்டார்கள். நல்ல கூட்டாளிகளும் அமைய மாட்டார்கள். தனியாக எதையும் செய்ய துணிவு இருக்காது. சராசரி வாழ்க்கை அமையாத கல்வியாளார்.

நவாம்சத்தில் துலாம் குரு

ஐந்தாறுபேர் மத்தியில் சத்தம் கேட்டால் இவர் அங்கு இருப்பதை தெரிந்து கொள்ளலாம். கோபம் வந்தால் தன்னை மறந்து விடுவார். நிதி நிலையையும் மறந்து பணத்தை காலி செய்து விட்டு தான் அமைதியாவர்.

புத்தகபிரியர், விமர்சிக்க தெரிந்தவர். சினிமா உலகில் நண்பர்கள் அதிகம். இவரிடம் பழகியவர்கள் இவருக்கு எதாவது ஒருவகையில் பணம் கொடுத்து விடுவார்கள்.

பெண்கள் மூலம் இழப்புகள் அதிகம். பொன்னையும் இழப்பார்., தன்னையும் இழப்பார்.வயதுக்கு மூத்த பெண்களால் வாலிபத்தை பறிகொடுக்க நேரலாம். துலாத்தில் உள்ள குரு ரகசிய எதிரிகளை ஏற்படுத்தி வைத்து விடுவார்.

நவாம்சத்தில் துலாம் சுக்கிரன்

ஒரு விரும்பத்தக்க அம்சம் இது. புகழேனியில் ஏற்றிவிடும். பிறரால் முன்னுக்கு வருவார்.பழகுவதற்கு இனிமையானவர். பழையனவற்றை மறக்காமல் நன்றியுடன் இருப்பார். சிறந்த தொழில் நுட்ப அறிவு உடையவர். கலைகளில் சிறந்தவர். அலங்கார, ஆடம்பர தொழில்நுட்பம் தெரிந்தவர். எவரிடமும் இன்முகமாக பழகும் தன்மை இருப்பதால்வியாபாரம் செய்தால் வெற்றியாக நடக்கும். திருமணம் யோகம் தரும்.

நவாம்சத்தில் துலாம் சனி

கடவுள் நம்பிக்கையே கைகொடுக்கும். மனிதர்களால் சரியான நேரத்தில் கைவிடப்படுவார். உயர்வையும் தாழ்வையும் அனுபவித்தே ஆக வேண்டும். சுமாரான அந்தஸ்தை அடைவார். தீடீர் வீழ்ச்சியையும் அனுபவிப்பார்.

நவாம்சத்தில் துலாம் ராகு

விபத்துகளை உண்டாக்குவார் துலாம் அம்ச ராகு. மாந்த்ரீகதில் ஆர்வம் இருக்கும். தொழில்கள் செய்து நஷ்டப்படுவார். வருமானம் முறையான வழியில் வராது. துணிந்து வாக்கு கொடுப்பார். உரிய நேரத்தில் வராமல் மறைந்து கொள்வார். பலராலும் குறிப்பாக பெண்களால் தொல்லைகள் தொடரும்.

நவாம்சத்தில் துலாம் கேது

எதாவது ஒரு கலையில் சிறப்புடையவராக இருப்பார். பொழுது போக்கு அம்சங்கள் சரித்திர பிரசித்திபெற்ற இடங்களை கொண்டு வருமானம் பெறலாம். திரையுலகத்திற்கு ஏற்றவர், வாய்புகள் காலம் கடந்தே வரும். தன் வீட்டில் இருப்பதை விட வெளியிடத்தில் இருப்பதே அதிகம். ஜோதிடம், சாஸ்திர ஞானம் பெற்றிடுவார்.

No comments:

Post a Comment