நவாம்ச பலன்கள் – தனுசு


தலைவர், உயர் பதவி அமையும். தகுதியை நிரூபிப்பார். சவால் விட்டு ஜெயிப்பார். கஷ்டப்பட்டு முன்னுக்கு வருவார். சாதித்து காட்டுவார். பார்த்தல் பூனை. பாய்ந்தால் புலி. பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைத்தால் திண்டாட்டமே. பின்னர் இவரே சீர் செய்யும் படி ஆகும். ஓய்வெடுக்கவோ, உல்லாசமாக ஊர் சுற்றவோ நேரம் கிடைக்காது. தொழிலையும் குடும்பத்தையும் ஒன்றாக்கிக் கொள்வார். வீட்டுப் பொறுப்புகளில் அதிக அக்கறை இருக்காது.

குறுக்கு வழி பிடிக்காது. பெரிய தவறுகள் செய்ய மாட்டார். ஒழுங்காக பொய் பேசவும் தெரியாது. உளறிக் கொட்டிக் விடுவார்.. எல்லாம் விடிபடியே நடக்கும் என வேதாந்தம் பேசுவார்.பிறர் செய்த உதவிகளை மறக்க மாட்டார். நன்றி மிக்கவர். துரோகங்களையும் மறக்க மாட்டார். மனதில் வைத்திருப்பார்.

பெரியோருக்கு பிரியமானவர். முன்னோர்களை பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் பெருமையாக பேசுவார். சுய சம்பாத்தியம் ஏற்படும். தொழிலில் படிப்படியான முன்னேற்றமே ஏற்படும். பெற்றோர் முடிவு செய்யும் பெண்ணை மணப்பார்.

நவாம்சத்தில் தனுசு சூரியன்

எதையாவதுசெய்து கொண்டே இருப்பார். பளிச்சென்று பேசுவார். கர்வியோ என்று நினைக்க தோன்றும். எல்லோரையும் போல் இருக்க மாட்டார். பல துறைகளில் கால் பதிப்பார். ஆராய்ச்சி மனப்பான்மை இருக்கும். அதில் தேர்ச்சியும் இருக்கும்.

அப்பழுக்கிலாத மனிதர் எனப் போற்றப்படுவார். சுதந்திரமாக செயல்படுவார். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பதுபோல் தன் வாழ்கையை அமைத்துக் கொள்வார்.

நவாம்சத்தில் தனுசு சந்திரன்

நிலையாக ஒரு காரியமும் பண்ண மாட்டார். தேவையற்ற பரபரப்பு காட்டுவார். எல்லவற்றையும் அடிக்கடி மாற்றிக் கொண்டிருப்பார். எதிரிகள் இருக்க மாட்ட்டார்கள்.

சடங்கு சம்பிரதாயங்களில் நம்பிக்கை வைப்பார்.புராணங்களை விரும்பி படிப்பார்.போட்டிப் பந்தயங்களில் ஆர்வம் கொண்டிருப்பார். விளையாட்டு, சூதாட்டங்களில் பொருள் இழப்பார். ஒரே நேரத்தில் இரண்டு வருமானங்களைப் பெறுவார். வருமானத்தை இஷ்டப்படி செலவும் செய்வார்.

நவாம்சத்தில் தனுசு செவ்வாய்

என் தனிவழி என்பார். தன் செயல்களுக்கு நியாயம் கற்பிப்பார். ஊரோடுஒத்து போக மாட்டார். சுறுசுறுப்பு மிக்கவர். துணிவும் மிக்கவர். பந்தயங்கள், பிரயானங்கள் மூலம் வருவாய் ஏற்படும்.

நவாம்சத்தில் தனுசு புதன்

கல்வியில் தடங்கல், பிரயானங்களில் அவதி, நஷ்டம் என இளம் வயதிலேயே பல சோதனைகளை அனுபவிப்பார். யாரையும் நம்ப மாட்டார். நல்ல துணிமணிகளை அணிய மாட்டார். பொருத்தமில்லாமல் தோற்றம் அளிப்பார். ஊரோடு ஒத்து போக தெரியாது. உதவாத லட்சியங்கள் கொண்டிருப்பார். எழுத்து துறையில் ஏற்றம் காணலாம்.

நவாம்சத்தில் தனுசு குரு

இவரை எப்படி பாராட்டினாலும் தகும். பொறுப்பை உணர்ந்து கொண்டவர். கையிருப்பையும் கவனத்தில் கொண்டவர். பிறருக்கு உதவும் நல்ல குணம் கொண்டவர். அறிவாளிகளுடன் சேர்ந்து காணப்படுவார். வீணர்களை விளக்கி விடுவார். இவரது நட்பு கிடைபது அறிய செயலாகும்.வரும்மானம் சீராக இருக்கும். தவறு செய்ய மாட்டார். இடம் சம்பந்தமான சிக்கல் ஒன்று இந்த நல்ல மனிதரை படாத பாடு படுத்தும்,

நவாம்சத்தில் தனுசு சுக்கிரன்

ஒருபுறம் ஆன்மீகத்தில் ஆழ்ந்திருப்பார். இன்னொருபுறம் பெண் போகத்தால் தள்ளாடுவார். விசித்திரமான மனிதர். காதல் உண்டு. களியாட்டம் உண்டு. தன் அழகை பேணிக்காப்பதில் கவனம் இருக்கும். தூர தேச யாத்திரைகள் உண்டாகும். பல வழிகளில் பணம் சம்பாதிப்பார். சின்ன திரை, பெரிய திரை என்று கலைதுறையில் வலம் வருவார். தனுசு சுக்கிர பெண்களுக்கு திருமணத்திற்குப் பிறகு வேறு ஆண்களால் அவஸ்தைகள் ஏற்படும்.

நவாம்சத்தில் தனுசு சனி

ஆன்மீகத்தில் தனி கருத்து வைத்திருப்பார். ஆன்மீக ஆராய்ச்சி செய்வார். கடவுளை கூட ஆராய்ச்சி செய்து பார்பார். கண்ணை மூடிக்கொண்டு எவரையும், எதையும் பின்பற்ற மாட்டார். பிரபல்யம் ஏற்படும். முக்கிய பதவிகள் வகிப்பார். அரசியல் செல்வாக்கு ஏற்படும். பொதுப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வார்.

நவாம்சத்தில் தனுசு ராகு

வாதாடும் குணம் இருக்கும். பிரபல பேச்சாளராகவோ, வக்கீலாகவோ பிரகாசிப்பார். பேச்சு வருமானம் தரும். பொது சொத்துக்களை வசப்படுத்திக் கொள்வார். வளகுகளில் இருக்கும் சில சொத்துக்களை துணிச்சலுடன் நிர்வகிக்க முன்வருவார். பெண்கள் மற்றும் அந்தஸ்தில் கீழானவரோடு நட்பு ஏற்பட்டு பின்னர் அதுபிரச்சனையில் பொய் முடியும். பரம்பரை வியாதி தொடரும்.

நவாம்சத்தில் தனுசு கேது

செய்யும் தொழிலில் நிகரற்றவராக இருப்பார்.இவரது கருத்துக்கு முக்கியத்துவம் உண்டு. ஜாதகரின் பாணியை பலர் கடைபிடித்து புகழ் பெறுவர். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாக இருக்கும்

No comments:

Post a Comment