நவாம்ச பலன்கள் – கும்பம்


அடுத்தது நடக்கபோவது என்ன என்று அறிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவர். தனிமையே பிடிக்கும். ஆனால் தனியாக எதையும் செய்ய மாட்டார். எல்லாவற்றுக்கும் யாராவது உடன் இருக்க வேண்டும்.

நேர்மறை குணங்கள் கொண்டவர்கள் கும்ப நவாம்சதினர். இவர்களின் தோற்றத்திற்கும் தொழிலுக்கும் சம்பந்தம் இருக்காது. அழகாக இருக்க மாட்டார். ஆனால் பிரபலமான நடிகர் ஆகிவிடுவார். அழகாக இருப்பார். ஆனால் அவலமான வாழ்க்கை வாழ்வார். பந்தா இல்லாத பிரமுகரும், அலட்டிக் கொள்ளும் ஆபிஸ் பையனும் இவர்களே.

ஜாதகருக்கு முயடிவேடுகும் திறன் குறைவே. யோசிக்க ஆரம்பித்து விட்டால். முடிவே இராது. யோசனை மேல் யோசனை என்று கற்பனைகளுக்கு இடம் கொடுத்து விடுவார். இறுதியில் நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிடுவார், எல்லோரிடத்திலும், எல்லா இடத்திலும் கலகலப்பாக இருக்க வேண்டும் என்பதே இவர் விருப்பம். ஆனால் சந்தேகம் என்று வந்து விட்டால் இப்படி கூட ஒரு மனிதன் இருப்பான என்று வெறுத்து தள்ளும்படி நடந்து கொள்வார். பழகிய மனிதர்கள் இவர்களுக்கு எந்த உதவியும் செய்ய தயாராக இருப்பார்கள். தயக்கம், தாமதம், கூச்சம் போன்றவை முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டை போடும்.

காதல் தோல்வி, பிரியமானவர்களின் மரணம், நட்பு பிரிதல் போன்ற அழுத்தமான நிகழ்சிகள் இவர் வாழ்கையில் உண்டு. அதையே நினைத்து துக்கப்பட்டுக் கொண்டிருப்பார். வெளி உலகதிருக்கு தெரியாமல் ஒரு சோக ராகம் உள்ளத்தில் ஓடிக்கொண்டிருக்கும். மிடுக்கான மனைவி அமைவார். பிற பெண்களின் உறவும் சேரும். பிறர் சொத்தை அனுபவிப்பார். பிறருடைய பணத்தை செலவு செய்வார். பெருமையும், திறமையும் உள்ள பெண்களால் கவரப்படுவார். நட்பே பிரதானம். உறவினர் பிறகுதான். தற்புகழ்ச்சி உண்டு. பிறரை குறை கூறி பேசுவார்.பெற்ற சிறு உதவியையும் பெரிதாக கூறி மற்றவர்களை பெருமைபடுத்துவார். ஆனாலும் நன்றி மறந்தவர் என்ற அவசொல்லுக்கும் ஆளாவார்.

புதியவைகளை உறுவாக்கி பணம் சேர்த்தல், முதன் முதலாக கண்டுபிடித்தல்/அரிமுகபடுத்துதல். பிரபலம் அடைதல் முதலான கும்ப நவம்சதிருகுரிய சிறப்பியல்புகள்.

எதிர்காலத்தில் நடக்க இருப்பதை முன் கூட்டியே சொல்வார். வெளிதோற்றதிற்கு பெரிய அறிவாளியாக தென்படமாட்டார். பிறர் நுழைய முடியாத எந்த பிரச்சனையையும் சுலபமாக முடித்து காட்டுவார். தமது விஷயத்தில் சோம்பேறித்தனம் அதிகம்.

மனைவிக்கு அதிக மரியாதை கொடுப்பார். மனைவிக்கு அடங்கி கிடப்பதாக பெயர் வாங்குவார். தேவைக்கேற்ற சேமிப்பு இருக்காது. முக்கிய செலவுகளுக்கு பணம் கிடைக்காமல் அவதிப்படுவார். திடீரென பணம் வரும். ஆனால் தங்காது. ஆனால் வசதிகள் எல்லாம் வந்து சேரும். உறவும், நட்பும் ஆச்சரியப்படும் படி வசதியாக வாழ்வார். வீடு வாகனம் அமையும்.

நவாம்சத்தில் கும்ப சூரியன்

நம்பிக்கைக்கேற்றவர், நிதானமாக முன்னேறுவார். பணம் சேர்க்க கும்ப சூரியன் உதவுவார். பிறர் இவருக்காக சேமிப்பு துவங்குவர். பணம் இருந்தாலும் பந்தா இருக்காது. உடன் பிறந்தோர் மீது பாசம் அதிகம். கடவுள் பக்தி மிகும்.

நவாம்சத்தில் கும்ப சந்திரன்

புதுமையான வியாபாரங்களை செய்து பொருள் ஈட்டலாம். மற்றவர்கள் தவிர்க்கும் தொழில்களை மேற்கொண்டாலும் வருமானம் கிடைக்கும். பலதரப்பட்ட மனிதர்களுடன் நட்பு வைத்திருப்பார். அரசியல் பேசுவார். கல்விதுறை, பயிற்சி துறை மூலம் ஆதாயம் கிடைக்கும். மதப்பற்று குறைவே. குல ஆசாரங்களை ஒழுங்காக பின் பற்ற மாட்டார். பெண்கள் சம்மந்தமான தொல்லைகளை சந்திப்பார். பாலுறவு நோய்களுக்கு ஆளாக நேரும். கவனம் தேவை.

நவாம்சத்தில் கும்ப செவ்வாய்

வேகம் இருக்கும். இவர் என்ன செய்யப்போகின்றார் என்று ஒரு கூட்டம் கண்காணித்து கொண்டே இருக்கும். நெருங்கிய ஒருவரால் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ ஆபத்தை தேடிக் கொள்வார். நண்பர்கள் மூலம் பிரச்சனையே. நெருங்கிய நண்பர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். எதிரிகளையும், எதிர்ப்புகளையும் ஏற்படுத்திக் கொள்வர். தப்பி வருவது போல் சில திடுக்கிடும் சம்பவங்கள் நடக்கும.

நவாம்சத்தில் கும்ப புதன்

தனி ஆட்சி நடத்துவார்.பிறருடன் இணங்கி செயல்படமாட்டார். எல்லாம் தெரியும் என்பதுபோல் நடந்து கொள்வார். சிலர் தங்கள் பகையை தீர்த்துக் கொள்ள இவரை பயன்படுத்திக் கொள்வர். சிலர் பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ள அவரது பொறுப்பை ஜாதகர் ஏற்பார். மாற்று வேட்பாளர் மந்திரி ஆவதைப்போல.

நவாம்சத்தில் கும்ப குரு

ஆன்மிகம் பேசுவார். பகுத்தறிவும் பேசுவார். பழமையை கடைப்பிடிப்பார். புதுமையான முறையில் சம்பிரதாயங்களை செய்வார். ஆராய்ச்சி செய்வார். இவரது கருத்துக்கு மதிப்பு உண்டு. தற்பெருமை அடித்துக் கொள்வார். குழுக்களுக்கு தலைமை ஏற்பார். வித்தியாசமானவராக வாழ்க்கை நடத்துவார். பணம் வரும் வழிகள் ரகசியமாக இருக்கும்.

நவாம்சத்தில் கும்ப சுக்கிரன்

கூட்டுத் தொழில், கூட்டுறவு அமைப்புகள், சங்கங்கள் மூலம் வருவாய் ஏற்படும். பெரும் பணக்காரர்கள் நட்பும் ஏற்படும். வாழ்நாள் முழுதும் பெண்களால் நாடப்படுவார். கலாரசனை மிக்கவர். பலரது பிரச்சனைகளை தீர்த்து வைப்பார். சமய சஞ்சீவியாக விளங்குவார். பெயர் நிலைக்கும்.

நவாம்சத்தில் கும்ப சனி

அரசியல், பொது வாழ்கையில் ஈடுப்பட்டு பெரிய பதவிகளை வகிப்பார். நண்பர்களே இவரது பலம். கூட்டணி அமைத்து களம் காணுவார். வெற்றி வந்தே தீரும்.. தலைவர் என்று புகழப்படுவார். எல்லா தரப்பினரையும் அனுசரித்து போவார். இவரது பேர் சொன்னால் போதும் என்ற அளவுக்கு பிரபலம் ஏற்படும். ஜோதிடம், மாந்த்ரீகம், சாமியார் என்று இரகசிய தொடர்பு வைத்திருப்பார்.

நவாம்சத்தில் கும்ப ராகு

எதிர்த்து போராடுவார். அச்சம் இல்லாதவர்.கூச்சம் இல்லாதவர். எங்கும் எதிலும் புரட்சி செய்ய வேண்டும், சீர்திருத்தம் அவசியம் என்பார்.எல்லவற்றையும் மாற்றிஅமைக்க துணிவார். நண்பர்களின் துரோகம் இவரை வீழ்த்தும்.

நவாம்சத்தில் கும்ப கேது

பிரச்சார பீரங்கி, புகழ்ந்தும், இகழ்ந்தும் பேசுவார். மத விமர்சனம் செய்து பேர் வாங்குவார். எதிர்பாரத வருமானம் கிடைக்கும். தொழிலை நிரந்தரமாக செய்ய மாட்டார். கலைத்துறையில் பெயர் பெறலாம். விளம்பர வகைகளும் கை கொடுக்கும்

No comments:

Post a Comment