நவாம்ச பலன்கள் – மகரம்


நவாம்சத்தில் மகர லக்னம்

பிறவி பயனை அனுபவித்து விட்டு முக்திப் பெறவே மகர நவாம்சம் லக்னமாக அமையும். இதனால் தவறுகளுக்கு உடனடி தண்டனையும் அனுபவிப்பார். காலப்போக்கில் உண்மையான பக்தர்களாக மாறுவார். சல்லாபம், உல்லாசம் எல்லாம் விட்டுப் போகும்

வாழ்க்கையின் ஆரம்பத்தில், வாழ்க்கை அனுபவிக்கவே என வாழ்பவர். ஆடம்பரமாக தோற்றம் அளிப்பார். வசீகரிக்கும் பார்வை கொண்டவர். அனைவரும் தனது பேச்சை கேட்டு நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். பிரபலமானவர்களுடன் சேர்ந்து கொள்வார். அவரையும் தன்னை நம்ப வைப்பார். எல்லோரும் தன் சொல்படி நடப்பதாக நம்ம்பிக் கொள்வார். தனது தகுதியை மறந்து நடந்து கொள்வார். தலைகுப்புற விழுவது போல் நொடியில் பலவற்றை இழந்து விடுவார்.

முழுநேரமும் அலுவலகமே சிந்தனை என்பதுபோல் வெளிக்காட்டிக் கொள்வார். ஆனால் உண்மையான ஈடுபாடு இருக்காது. வேலை பார்க்கிறேன் என்று கண்ணை மூடிக் கொண்டு தூங்குவார். மேலோரின் அபிமானத்தை பெறுவது மட்டும் இவர் நோக்கம். உடலில் ஒரு உபாதையும், தொழிலில் எதிரிகளும் எப்போதும் இருக்கும்.

ஆசைகளே இவருக்கு சத்துரு. எதிலும் திருப்தி என்பதே இருக்காது. அலைச்சல் பேர்வழி எனலாம். இதனால் வீண் பகையும், உள்ள வேலையும் காலியாகி நடுத்தெருவில் நிற்பது போன்ற நிலையும் அடைவார். எல்லாம் விதியின் விளையாட்டு என்று வேதாந்தம் பேசுவார். இந்த மடம் இல்லாவிட்டால் சந்தைமடம் என்று ஜாகை மாறுவார்.

பிரயானங்கள் அதிகம். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவார்.. தர்ம ஸ்தாபனக்கள் மூலம் வருமானம் கிடைக்கும்.கடல் சார்ந்த துறையும், கடல் தாண்டிய வியாபாரங்களும் இவரது பெயரைச் சொல்லும்.

செல்லப்பிள்ளையாக இருந்தவர். விருந்தினர்களால் இவரது வீடு எப்போதும் நிறைந்திருக்கும். இளம் வயதில் பல இடையூறுகளை சந்திப்பார்.பெற்றோரின் அன்புக்கு குறைவில்லை. ஆனால் நிம்மதி குறைவும், சகோதர்களால் செலவீனங்கள் என சங்கடமான உறவு நிலை இருக்கும். சங்கடங்கள் சூழ்ந்தாலும் ஜாதகரின் பாசத்திற்க்கு குறைவிருக்காது.

உயர் தர கல்வி உண்டு. தரமான இடத்தில் பணிபுரிய கல்வி கை கொடுக்கும். பிறருக்கு பயிற்சி அளிக்கும் திறமை இருக்கும்.

விருபத்திற்கு இணங்க மனைவி அமைவதால் சிறப்பான மன வாழ்க்கை உண்டு. கடவுள் பக்தியுள்ள அப்பெண்மணி குடும்பத்தை திறம்பட நிர்வகிப்பார். அழகும், அமைதியும் சேர்ந்தவராய் இருப்பார்.

கையிருப்பு கவலைப்படும்படி இருக்காது. பலரும் பண உதவி செய்வர். இருக்கும் பணத்திற்கு தக்கபடி தற்காலிக வசதிகளை எற்படுதிக்கொள்வார். குடும்பதிர்னரின் கடன்களை ஏற்றுக்கொள்வதால் கடனுக்கும் உள்ளாவார்.

நவாம்சத்தில் மகர சூரியன்

ஆளைப் பார்த்து எடைபோட முடியாது. திறமைசாலிகள். கடவுள் நம்பிக்கை அதிகம். ஜோதிட நம்பிக்கை மிகுந்தவர். தனது எண்ணப்படியே நடப்பார். பிடிக்காத தொழிலை லாபம் வரும்போதே விட்டு விடுவார். எடுத்துக் கொண்ட காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பார்.

பெரிய மனிதர்களை எப்படியாவது அணுகி விடுவார். நல்லபடியாக நடந்து கொள்வார். கூட்டுத் தொழில் லாபம் தரும். கொஞ்சமாகவே வருமானம் வந்தாலும் மிச்சம் பிடித்து வைப்பார்.முதலீடுகளில் ஆர்வம் உள்ளவர்.

நவாம்சத்தில் மகர சந்திரன்

விளம்பரம் கிடைக்கும். பொதுமக்களிடையே பெயர் பிரபலமாகும்.பிறரை அடக்கி ஆள முயற்சி செய்வார். சந்தர்பங்கள் தாமாகவே தலைமை பதவிக்கு இட்டு செல்லும். செல்வாக்கு மிக்கவர்களோடு வாழ்கை பயணம் ஏற்படும். தொழில் அதிபர் ஆவார்.

நவாம்சத்தில் மகர செவ்வாய்

பிறந்த குடும்பத்திற்காக தன்னையே தியாகம் செய்வார். சுறுசுறுப்பு மிக்கவர். சீருடைப்பணியில் நல்ல வாய்புகள் கிட்டும். அந்தஸ்தும் செலவாகும் ஏற்படும். அரசியல் தொடர்புகள் அலைகழிக்கும்.

நவாம்சத்தில் மகர புதன்

அழுத்தமானவர். இவரிடமிருந்து விசயத்தை வாங்க முடியாது. ரகசியங்களின் இருப்பிடம். பிறரை கணித்து விடுவார். அடுத்தவரின் வருமானத்தை சாமர்த்தியமாக கைப்பற்றி விடுவார். திருட்டுதனம், நரித்தனம் என்று எந்த பெயருக்கும் பொருத்தமானவர். ஊழல் புகாருக்கு உள்ளாவர். நல்ல பெயர் வாங்குவதர்காக பல பொது நிகழ்சிகளை ஏற்பாடு செய்வார். கௌரவப் பட்டங்களை வாங்கி பெயருக்கு முன் போட்டுக் கொள்வார்.

நவாம்சத்தில் மகர குரு

சாண் ஏற முழம் சறுக்கும். உடனிருப்பவர்கள் யாரும் உதவ மாட்டார்கள். இவரது உழைப்பு உண்மையாக இருக்குமே தவிர சரிவர இருக்காது. சோகங்களை சுமந்து திரிவார். கலகலப்பு அற்ற வாழ்வை இவரே அமைத்துக் கொள்வார். எப்படியாவது நல்ல வேலையை பெற்றுவிடுவார். சம்பாத்தியம் வந்ததும் கஞ்சத்தனம் தலைதூக்கும்.

நவாம்சத்தில் மகர சுக்கிரன்

தொட்டதேல்லாம் பொன்னாகும். வருமானம் பல வழிகளில் சேரும். பிரபல்யம் உண்டாகும். இவரது உறவை பலதரப்பட்ட மனிதர்களும் விரும்புவார்கள். பூமியும் கைகொடுக்கும். கனிம பொருள்களால் லாபம் கிடைக்கும். திருமணம் உரிய பருவத்தில் நடைபெறாது. காலம் கடந்து நடந்தாலும் செல்வாக்கு மிக்க இடத்திலேயே பெண் அமையும். குடும்ப சொத்து கிடைக்கும். விலை உயர்ந்த கார்கள் இருக்கும்.

நவாம்சத்தில் மகர சனி

ஆயிரத்தில் ஒருவர் எனப் போற்றப்படுவார். உயிரை துச்சமாக நினைத்து வீர் தீர சாகசங்கள் புரிவார். ராணுவம், காவல்துறை, அரசியல் முதலான துறைகளில் பொறுப்பான பதவிகளை பெற்று விடுவார். பணம் பெரிய அளவில் சேர்க்க முடியாது.

நவாம்சத்தில் மகர ராகு

சீருடைப்பணியில் சிறப்பார். வசதியில்லாத இடங்களில் சில காலம் வசிக்க நேரிடும். இடமாற்றம் அதிக அளவில் ஏற்படும். கண்டிப்பானவர். ஜோதிடம், மாந்த்ரீகம் போன்றவற்றில் ஆராய்ச்சி செய்து புதிய விசயங்களை வெளியிடுவார்.

நவாம்சத்தில் மகர கேது

எதாவது ஒரு துறையில் மேதாவியாக இருப்பார். படிப்பை விட சொந்த அறிவால் தொழிலில் முன்னுக்கு வருவார். வரும்மானம் சீராக இருக்கும். பெயர் சம்பாதிக்கவே விரும்புவார். இவரது பெயரே பெரிய முதலீடாக அமையும். உணர்சிகளை வெளியிடாமல் மறைக்கும் சாமர்த்தியம் இருக்கும். ஒன்றைப் பேசுவார். வேறொன்றைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பார். பிரயாணங்கள் பல உண்டாகும்.

No comments:

Post a Comment